பாலில் கொழுப்பு உண்டு என்பது உங்களுக்குத் தெரியும் தானே? பாலை கொதிக்க வைக்கும்போது இந்தக் கொழுப்புப் பொருட்கள் எல்லாம் ஒன்றாக சேர்கின்றன.
எண்ணெய் வகைகள் நீரில் மிதக்கும் என்பதால், இந்தக் கொழுப்புப் பொருட்களும் கொதிக் கின்ற பாலின் மேலே மிதக்க ஆரம்பிக்கின்றன. இதைத்தான் நாம் பாலாடை என்கிறோம்.
அதேநேரம், பாலில் உள்ள நீரும் கொதிக்கத் துவங்கி நீராவியாக மாறும். இந்த நீராவியானது, தன்னை வெளியேறவிடாமல் தடுக்கும்& பாலின் மீது படிந்திருக்கும் பாலாடையை வெளியே தள்ளுகிறது. இதைத்தான் நாம் 'பால் பொங்குகிறது' என்கிறோம்.
இப்போது புரிந்ததுதானே?


0 comments:
Post a Comment