Saturday, 27 July 2013

காமராஜருக்கு பிடிக்காத மலிவுப் பிரசாரம்



சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1953-56 ஆம் ஆண்டில் இளங்கலை அறிவியல் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவர் தேர்வு கட்டணம் 300 ரூபாய் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். யாரிடம் உதவிக் கேட்கலாம் என்று அவர் எண்ணியபோது, அப்போ
து தமிழக முதல்வராக இருந்த காமராஜர் அவரின் நினைவுக்கு வந்தார். உடனே அவரைக் காண சென்றார்.

தமிழக மக்களின் கல்விக் கண்ணை திறந்தவர் ஆயிற்றே காமராஜர்?

சட்டென்று அந்த மாணவருக்கு உதவினார். தன்னைப் பெற்றத் தாய் 30 ரூபாய் கூடுதலாக கேட்டதற்கு தர மறுத்த அதே காமராஜர், தனது உதவியாளர் வைரவன் மூலம் சொந்தப் பணத்தில் இருந்து 300 ரூபாயைக் கொடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்ட மாணவர், “ஸார்... நீங்கள் எனக்கு செய்த இந்த உதவியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தால், 'கல்லூரி மாணவருக்கு முதல்வர் உதவி' சென்று செய்தி போடுவார்கள். நான் அதைச் செய்யட்டுமா?” என்று கேட்டார்.

சட்டென்று கோபமான காமராஜர், “இந்த மலிவுப் பிரசாரம் எல்லாம் வேண்டாம். நீ படிக்க வேண்டியவன். நன்றாக படித்து குடும்பத்தைக் காப்பாற்று...” என்று கூறி அந்த மாணவரை அனுப்பி வைத்தார். பின்னாளில், அதே மாணவர் அரசுத் துறையில் பெரிய அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment