டீ என்றால் எல்லோருக்கும் தெரியும். அது என்ன கிரீன் டீ?
பச்சைத் தேயிலையைத் தான் அப்படிச் சொல்கிறார்கள். இந்த பச்சைத் தேயிலையை அருந்தி வந்தால் நம் ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு குறைகிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.
பொதுவாக, ரத்தத்தில் உள்ள கொழுப்பு ரத்த நாளங்களில் தேங்கி ரத்த ஓட்டத்தில் தடைகளை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறையும்போது ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. ரத்தம் சிக்கல் இன்றி எளிதில் செல்கிறது.
இதனால் ரத்தத்தை உடல் முழுக்க பம்பிங் செய்து அனுப்பும் இதயத்தின் வேலையை எளிமையாகிறது. அதனால், நாமும் நோய் நொடியின்றி வாழ முடிகிறது என்று விளக்கம் கொடுக்கிறார்கள், கிரீன் டீ ஆராய்ச்சியாளர்கள்.
சரி... இந்த கிரீன் டீயை எப்படித்தான் செய்ய வேண்டும் என்கிறீர்களா?
கொழுந்தாக இருக்கும் தேயிலையில் இருந்து கிடைக்கும் முதல் பிரிவை வெள்ளைத் தேயிலை என்பார்கள். அதை கொதிக்க வைத்தால் எந்த நிறமும் வராது. அதனால்தான் அதை வெள்ளைத் தேயிலை என்கிறார்கள்.
இதற்கு அடுத்த பிரிவுதான் பச்சைத் தேயிலை. அதாவது, கிரீன் டீ. இதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும்.
தினமும் கிரீன் டீ குடிப்பவர்கள் மற்றவர்களை காட்டிலும் படு உற்சாகமாக செயலாற்றுகிறார்களாம்.
நீங்களும் முயற்சி செய்யலாமே... கிரீன் டீ குடிக்கத்தான்!



