Saturday, 12 April 2014

24-ந் தேதி வாக்குப்பதிவு : எல்லா ஏற்பாடுகளும் தயார்


மிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வருகிற 24-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் ஓட்டு களை அள்ள தீவிர முயற்சி களை மேற்கொண்டு வரு கிறார்கள். இதனால், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் வலம் வருகின்ற னர், அரசியல் கட்சியினர்.

பாராளுமன்ற தேர்தல்

நாடு முழுவதற்குமான லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆறாவது கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 லோக் சபா தொகுதிகளுக்கும், புதுச் சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ கத்தைப் பொறுத்தவரை, மார்ச் 29-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 7-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப் பட்டன. அப்போது, 58 பெண்கள் உள்பட 350 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. ஏப்ரல் 9-ந் தேதி வரை  வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில், 61 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் கள் பட்டியல் இறுதி செய்யப் பட்டது. அதன்படி, 55 பெண்கள், 789 ஆண்கள், ஒரு திருநங்கை என, மொத்தம்  845 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். புதுச்சேரி லோக் சபா தொகுதியில் 30 பேர் போட்டியிடுகின்றனர்.

தீவிர பிரசாரம்

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், தேர்தல் களத்தில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிர சாரம் மேற்கொண்டு வருகின் றனர். தமிழகத்தில் பலமுனை போட்டி நிலவினாலும், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பாரதீய ஜனதா அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க.வின் புறக் கணிப்பால், தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் காங் கிரஸ் கட்சியால் ஓரளவுக்கு ஓட்டுகள் பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி அலை

இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின் றன. அதே மோடி அலை தமிழகத்தில் வீசினாலும், ஆளும் கட்சியான அ.தி.மு.க. அலையே இன்னும் முழுமை யான பலத்தோடு வீசுகிறது. அதனால், மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளில் மெஜாரிட்டியான தொகுதி களில் அ.தி.மு.க. வேட்பாளர் கள் வெற்றிபெறும் வாய்ப்பு தற்போது உள்ளது. இரண்டா வது இடத்தில் தி.மு.க.வும், இதற்கு அடுத்த இடத்திலேயே பாரதீய ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியும் உள்ளது.

ஏப்ரல் 22-ந் தேதி மாலை 6 மணியுடன் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதுவரை எடுக்கப் பட்ட கருத்துக்கணிப்புகள் ஒருவிதமான முடிவை சொன் னாலும், தேர்தல் நடைபெறும் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால், அனைத்துக் கட்சிகளும் பிர சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. கோடை வெயிலின் உக்கிரத்தையும் பொருட் படுத்தாமல் அனைத்துக் கட்சி யினரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 24&ந் தேதி, ஒவ்வொரு Ôபூத்Õகளிலும் கணிசமான ஓட்டுகளை தங்களது கட்சிக்கு விழச் செய்துவிட வேண்டும் என்கிற முனைப்போடு அ.தி.மு.க., தி.மு.க., தே.மு. தி.க., பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

மக்கள் விரும்பும் மாற்றம்

ஆனாலும், தேர்தல் களத் தில் உள்ள வேட் பாளர்களின் தலையெழுத்து என்னவோ மக்களின் கைகளில்தான் உள் ளது. வாக்குப்பதிவு இயந்திரங் களில் உள்ள பட்டன்களில் அவர்களது கை எந்தக் கட்சி யின் சின்னத்தை அழுத்தப் போகிறதோ, அப்போதுதான் வெற்றிபெறப் போவது யார் என்பது உறுதியாகும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆதரவு அலை அதிகம் இருப்பது போல, இந்தியா முழுவதிலும் மோடி அலையே வீசுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அதிகப்படியான ஊழல்களையும், விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றத்தை யும் சந்தித்து நொந்துபோய் இருக்கும் மக்கள், இந்த தேர்த லில் ஒரு மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில், மக்களிடையே ஆம் ஆத்மி கட்சி பெற்ற எதிர் பாராத அமோக ஆதரவே இதற்கு சாட்சி.

மாநில கட்சிகள் ஆதிக்கம்

தேசிய அளவில் பாரதீய ஜனதா அணிக்கு அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படும் அதேநேரத்தில், தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள் ளிட்ட மாநிலங்களில் மாநில கட்சிகள் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பாரதீய ஜனதாவுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில், அதிகாரம் பொருந்திய மாநில கட்சி களின் ஆதரவு இந்த இரு கட்சிகளில் எந்தக் கட்சிக்கு கிடைக்கிறதோ, அந்தக் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு பலவிதங்களில் இருந்தாலும், அதற்கான விடை என்ன என்பது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ந் தேதி தெரிந்துவிடும்.

சிந்தித்து வாக்களியுங்கள்..!


தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 'வேட்பாளர்கள் தரும் பிரியாணிக்கும், பணத்துக்கும் உங்கள் வாக்கை விற்று விடாதீர்கள்; சிந்தித்து வாக்களியுங்கள்' என்று தேர்தல் கமிஷன் வாக்காளர்களை அறிவுறுத்தி உள்ளது. அதனால் மக்களே... நீங்கள் சிந்தித்து வாக்களியுங்கள். வாக்களிப்பது என்பது உங்களது ஜனநாயக உரிமை - கடமை. அந்தக் கடமையை கண்ணியத்தோடு நிறைவேற்றுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் வேட்பாளரால், உங்கள் தொகுதியும், நாடும் எந்த அளவுக்கு வளர்ச்சிபெறும் என்பதை கவனத்தில் கொண்டு வாக்களியுங்கள். உங்களின் வாக்கு, நம் தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடட்டும்.

நீங்கள் வாத தேகம் கொண்டவரா?


கேள்வி: வாதம், பித்தம், கப தேகம் என்று சொல்கிறார்களே... அப்படியென்றால் என்ன? விரிவாக விளக்குங்களேன். (எஸ்.சந்தியா, சோமங்கலம்)

பதில் : மனிதனுடைய உடல் வாகு, வாத தேகம், பித்த தேகம், கப தேகம் ஆகியவற் றால் ஆனது. இந்த ஒவ்வொரு தேகத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. மனிதர்களில் பெரும்பாலானோர் இருவித உடல்வாகு கொண்டவர் களாக இருப்பர். உதாரணம்: வாத-பித்த தேகம், பித்த-கப தேகம் அல்லது வாத-கப தேகம்.

வாத தேகம் கொண்டவர் களின் உடல் அமைப்பு எப்படி இருக்கும் என்று முதலில் சொல்கிறேன். இவர்களின் உடல் இலகுவான தன்மை கொண்டிருக்கும். மெலிந்த உருவத்தோடு காணப்படுவர். பேச்சில் வறட்சி, தளர்ச்சி தெரியும். கண்கள் சிறியது. ஆழ்ந்த உறக்கம் வரும். தூங்கும்போது வாய், கண்கள் சற்றே திறந்திருக்கும். தூங்கும் போது பற்களை அடிக்கடி கடித்துக்கொள்வர். உடலில் வறட்சித் தன்மை, காலில் வெடிப்பு அதிகம் இருக்கும்.

இவர்களின் -குரல், கீச்சென்று அழுகுரல் மாதிரி இருக்கும். அதிகம் வியர்க்காது. தலைமுடி சுருண்டு, சொர சொரப்பாக காணப்படும். நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. இவர்களின் உணவு பழக்க வழக்கம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நண்பர்கள் குறைவு. அப் படியே நண்பர்கள் இருந்தா லும், அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பர். பேச்சில் தடுமாற்றம், கடுமை இருக்கும். நடக்கும்போது சத்தத்துடன் நடப்பர். நாட்டியம், இசை ஆகியவற்றை ரசிப்பர். பொறாமை குணம், பிறருக்கு இம்சை அளித்தல் ஆகிய குணங்களை கொண்டிருப்பர்.காபி, சாக்லெட், சர்க்கரை பண்டங்கள் மீது பிரியம் உண்டு.

வாத தேகம் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. சற்றே வலி அதிகமாக இருக்கும். செயல் களில் திறன் இல் லாத தன்மை கொண்டிருப்பர். வாயுவின் வேகத் தன்மையால் இந்த உடல்வாகு கொண்டவர்கள் எந்தக் காரியத்தையும் சீக்கி ரமாக தொடங்கிவிடுவார்கள். மனதில் மாறிமாறி ஒருவித விருப்பு&வெறுப்பு, தளர்ச்சி, பொறாமை தோன்றிக் கொண்டே இருக்கும்.  வார்த் தைகளை விரைவாக கிரகித் துக்கொள்வர். ஆனால், சீக்கிரம் மறந்துவிடுவர்.

கடவுள் பக்தி இவர்களிடம் குறைவு. நல்லவை நடக்கும் போது கடவுளை புகழ்வர். கெட்டவை நடந்தால் திட்டு வர். எந்த வழியிலும் சந்தோ ஷம் தேடுபவராக இருப்பர். சூதாட்டத்தில் விருப்பம் உண்டு. ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் திறன் இருக் காது.

குளிர்ந்த காற்று, குளிர்ச் சியான பிரதேசம் இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. அதிக குளிர்ச்சியால் உடல்வலி, விரைப்பு, கை&கால்களில் வெடிப்பு ஆகிய பிரச்னை களுக்கு ஆளாகுவர். மலச் சிக் கல் இருக்கும். மற்றவர்களை போன்று வலி தாங்கும் சக்தி இவர்களிடம் இருக்காது.

விருப்பமானவை : வெப்ப மான காலநிலையை வாத தேகத்தினர் மிகவும் விரும்பு வர். தாம்பத்திய உறவைப் பற்றி பலவித எண்ணம், கற்பனைகள் கொண்டிருப்பர். நிலையற்ற, நடைமுறைக்கு சாத்தியமற்ற கனவுகளைக் காண்பர். சீரான வாழ்க்கை மேற்கொள்ள முடியாததால், இவர்களின் தினசரி நடவடிக் கைகள் ஒழுங்காக அமையாது.  தங்களை சுற்றி உள்ளோரை அலைக்கழித்து விடுவர். ஒவ் வொன்றையும் மாற்றிக் கொண்டிருக்கும் இயல்பு கொண்ட இவர்கள், சத்வம், ரஜஷ், தமஸ் ஆகிய மூன்று வகை குணங்களில், தங்களது நிலையற்றத் தன்மையால் ரஜோ குணத்தை பிரதானமாக கொண்டிருப்பர். நாய், ஒட்ட கம், கழுகு, எலி, நரி ஆகியவை வாதத் தன்மை கொண்ட விலங்குகள்.

வாத தேகத்தினர் எந்த மாதிரியான உணவு வகை களை உட்கொள்ள வேண் டும்? தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை? இவர் களுக்கு வரும் நோய்களை முன்கூட்டியே எப்படி தடுப்பது?

அடுத்த இதழில் பார்க்கலாம்...

நீங்களும் பில்டர் ஆகலாம்..! - 11

 
வெற்றி தரும் 'அம்பானி பாணி'

ம்பானியை தெரியாத வர்கள் யாரும் இருக்க முடியாது. ரூ.15 ஆயிரம் முத லீட்டில் தொழிலை துவங்கி, அவர் கோடிகளை குவித்ததன் பின்னணியில் இருந்தவை, அவர் எடுத்த உறுதியான& தெளிவான முடிவுகளே! குழப்பமான சூழ்நிலையில் அவர் எந்த முடிவையும் எடுக்கமாட்டார். சில நேரங் களில் அதிரடியான முடிவு களையும் எடுப்பார்.

ஒருமுறை குஜராத்தின் நரோடாவில் உள்ள அம்பானி யின் ஆடை உற்பத்தி ஆலை யில் அதிநவீன இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு நிறுவப்பட்டன. அந்த இயந் திரங்களுக்கு துணை பாகங் கள் அவசரமாகத் தேவைப் பட்டன. ஜெர்மனியில் அவற்றை Ôஆர்டர்Õ செய்தார் அம்பானி. அவை அகமதா பாத் வந்து சேர்ந்தன. அவற்றை நரோடா கொண்டு வர, வாடகை லாரிகளுக்கு முயற்சி செய்தனர். ஆனால், வாடகை லாரிகள் கிடைத்த பாடில்லை.

அதுபற்றி அம்பானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. 'வாடகை க்குத்தானே லாரிகள் கிடைக்க வில்லை. சொந்தமாக விலை க்கு வாங்கலாம் இல்லையா' என்று கேட்டவர், அன்றே 2 லாரிகளை விலைக்கு வாங்கி, அவற்றில் இயந்திர பாகங் களை ஏற்றி, நரோடா வரச் செய்தார். இயந்திர பாகங்கள் நரோடா வந்து சேர்ந்ததும், வாங்கிய இரு லாரிகளையும் விற்றுவிட்டார் அம்பானி. லாரிகள் வாங்கிய செலவை யும், அவற்றை விற்ற செலவை யும், அதேபோல்... வாடகை லாரிகளில் இயந்திரங்களை கொண்டு வந்திருந்தால் ஆகியிருக்கும் வாடகை செலவையும் கூட்டிக்கழித்துப் பார்த்ததில், அம்பானிக்கு லாபமே கிடைத்திருந்தது.

இன்னொரு முறை, அரேபிய நாட்டில் இருந்து அம்பானிக்கு அழைப்பு வந்தது. 'எங்களது ரோஜா தோட்டத்தில் பரப்புவதற்கு மண் தேவை. அதை, இந்தியா வில் இருந்து அனுப்பிவைக்க முடியுமாÕ என்று கேட்டார் கள். Ôஇதெல்லாம் ஒரு தொழிலா' என்று அம்பானி யோசிக்கவில்லை.

'இன்னும் சில தினங்களில் இந்திய மண் உங்கள் ரோஜா தோட்டத்தில் இருக்கும்' என்று உறுதியாக சொல்லிவிட்டார். சொன் னது போலவே, கப்பலில் அரேபியாவுக்கு இந்தியாவில் இருந்து மண்ணை அனுப்பி வைத்து, மண்ணையும் பொன் ஆக்கிக் காட்டினார்.

அம்பானியின் இமாலய வளர்ச்சியின் பின்னணியில் இப்படி அவர் எடுத்த உறுதி யான, அதிரடி முடிவுகள் நிறைய உண்டு. அந்த முடிவு களை அவர் அவசர கோலத் தில் எடுக்கவில்லை. அந்த முடிவுகளை தெளிவாக எடுத் தார். அதேநேரம், மிகமிக விரைவில்! இதுதான், அம்பா னியின் வெற்றி ரகசியம்.

பில்டர்களும் முடிவெடுக் கும் விஷயத்தில் அம்பானி போன்றவர்களை முன்னு தாரணமாகக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு தெளிவான முடிவை உறுதியாக எடுக்க வேண்டும். கட்டுமானத் துறை யில் ஒரு பில்டரின் லாபத்தை நிர்ணயிப்பவை, கட்டுமானப் பொருட்களின் விலையே ற்றமே என்பதால், 'அம்பானி பாணி'யில் எப்படி திட்ட மிட்டு செயலாற்ற வேண்டும் என்பதை, பில்டராக நினைக்கும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத் திருக்க வேண்டும்.

இன்று, காய்கறிகளில் துவங்கி கட்டுமானப் பொருட்கள் வரையில், திடீர் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. காய்கறிகளின் விலையைக்கூட யூகித்து விடலாம். ஆனால், கட்டு மானப் பொருட்கள் அப்படி அல்ல. அவற்றின் விலைப் பட்டியலைப் பார்த்தால், எப்போதுமே ஏறுமுகம்தான்!

கட்டுமானத் துறையில் அதிகப்படியான விலை யேற்றம் காண்பது சிமெண்ட் மட்டும் அல்ல. செங்கல், ஜல்லி, இரும்புக் கம்பிகள், எலக்ட்ரிக் கேபிள்கள், டைல்ஸ், மார்பிள், பெயிண்ட் முதலான அனைத்துமே திடீர் திடீரென்று விலை ஏறக் கூடியது. பில்டர்கள், தங்கள் புராஜெக்டின் லாப சதவீத த்தை கணக்கிடும்போது, இந்த விலையேற்றத்தை முக்கிய மாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பில்டர்கள் ஒவ்வொருவரும், தங்களின் புராஜெக்ட்களுக்கு குறைந்தது 20 சதவீதம் லாபம் வைத்து, விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். சிலநேரங் களில், கட்டுமானப் பொருட் கள் அதிகமாக விலையேறும் போது, நாம் தீர்மானித்த 20 சதவீத லாபம் அடிபட்டுவிடும். அதனால், விலையேற்றத்தை கருத்தில் கொண்டு, புராஜெக்ட்டுகளை வேகமாக முடிக்க வேண்டும். ஒரு பில்டர், குறித்த காலத்துக்குள் புராஜெக்ட்டுகளை முடித் தால் மட்டுமே அவரால் விலையேற்றத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். மேலும் அவர், நஷ்டமும் அடையமாட்டார்.

அதேநேரம், குறித்த கால அளவுக்குள் அவரால் புராஜெக்டுகளை முடிக்க முடியவில்லை என்றாலும், சரியாகத் திட்டமிடாமல் பணிகளை மேற்கொண்டா லும், அவரால் விலையேற்ற வில்லனிடம் இருந்து தப்பிக்க முடியாது. அவர் நஷ்டமே அடைவார். குறைந்த லாப வரம்பை வைத்துக்கொண்டு, குறித்த காலத்துக்குள் கட்டு மானப் பணிகளை முடிக்காத எல்லா பில்டர்களுமே நிச்சயம் இந்த பிரச்னைகளை சந்திப்பார்கள்.

இந்தப் பிரச்னையை சமாளிக்க வேண்டும் என்றால், சூழ்நிலைக்கு ஏற்றவாறு லாப வரம்பை நிர்ணயிக்க வேண்டும். அடுத்த 6 மாதத் துக்குள் புராஜெக்ட்டை முடித்துவிடுவோம் என்றால் ஒரு லாப வரம்பையும், புராஜெக்ட் முடிய மேலும் கால அவகாசம் தேவைப்படும் என்கிற பட்சத்தில், லாப வரம்பை கூடுதலாகவும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

சில பில்டர்கள், வாடிக்கை யாளர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக குறைந்த லாப வரம்பை நிர்ணயித்துக் கொள் வார்கள். அவர்கள், கட்டு மானப் பொருட்கள் விலை யேறும்போது ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.

விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால், அதை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்கிற சூட்சுமத்தை பில்டராக நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம். மரம் போன்ற சில கட்டுமானப் பொருட்களை, அவற்றின் விலை சற்று குறைவாக இருக்கும்போதே முன்பணம் செலுத்தி ஆர்டர் செய்துகொள்வது புத்திசாலித் தனம். அவ்வாறு, நாம் முன் னரே ஆர்டர் செய்திருந்தால், நாம் கேட்கும் நேரத்தில் சம்பந்தப்பட்ட வியாபாரி, அந்த பொருட்களை நமக்கு சப்ளை செய்து விடுவார்.

மரத்தை சேமித்து வைப் பதில் தவறில்லை. ஆனால், சிமெண்ட் போன்ற பொருட் களை குறிப்பிட்ட காலம் வரைதான் சேமித்துவைக்க முடியும். அதிகபட்சம் 30 நாட் கள்வரை அவற்றை சேமிக்க லாம். அதனால், சிமெண்டில் அதிகம் முதலீடு செய்ய முடியாது. என்னதான் பார்த்து பார்த்து திட்ட மிட்டாலும், சில நேரங்களில் திடீர் செலவுகள் ஏற்பட்டு விடுவது உண்டு. அதை சமாளிப்பது எப்படி?

- வீடு கட்டுவோம்...

பல் மருத்துவத்தில் பிரபலமாகும் 'இம்ப்ளான்ட்' சிகிச்சை :பல் மருத்துவர் ஜி.திருப்பதி


ல் மாற்று சிகிச்சை முறை யில் அதிநவீன வசதியான 'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி, அதை வெற்றிக்கரமாக செயல்படுத்தி வருகிறது, சென்னை சேலையூரில் இயங்கிவரும் ஸ்ரீ ராக வேந்திரர் பல் மருத்துவமனை.

இதுகுறித்து, அந்த மருத்துவ மனையின் தலைவரும், பிரபல பல் மருத்துவருமான டாக்டர் ஜி.திருப்பதி, நமது நிருபருக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

அது என்ன 'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறை?

செயற்கை பல் பொருத்தும் சிகிச்சை முறையில், 15, 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமை எல்லாம் மாறி, தற்போது அதிநவீன வசதிகள் வந்துவிட்டன. அதில் ஒன்று தான் இந்த 'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறை. டைட்டா னியம் மெட்டல் ஸ்குருவை, செயற்கை பல் பொருத்த வேண்டிய இடத்தில் பொருத் தி, அந்த ஸ்குரு மேலே பல் பொருத்துவதுதான் இந்த சிகிச்சை. இது செயற்கை பல் லாக இருந்தாலும், சொந்தப் பல் மாதிரிதான் இருக்கும்.

அப்படியென்றால், சொந்தப் பற்களுக்கு உள்ள வலிமை அதற்கும் உண்டா?


கண்டிப்பாக. 'இம்ப் ளான்ட்' சிகிச்சை முறையில் பொருத்தப்பட்ட செயற்கை பற்களால் கடினமான உணவுப் பொருட்களை எளிதாக கடித்து, சுவைத்து சாப்பிடலாம். நாம் உண்ணும் கடினமான உணவு பொருட் களால் இந்தப் பற்களுக்கு எந்த வகையிலும் சேதாரம் ஏற் படாது. அவ்வளவு உறுதி யானது இந்தப் பல்.

'இம்ப்ளான்ட்' சிகிச்சையின் பிளஸ் பாயிண்டாக எதைக்கருதுகிறீர்கள்?

முன்பு, பாதிக்கப்பட்ட பற் களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, அதற்குப் பக்கத்தில் உள்ள இரு பற்களை Ôசப்போட்Õடாக எடுத்து, பாதிக்கப்பட்ட பல்லின் மீது 'கேப்' மாட்டிவிடுவோம். இந்த சிகிச்சையில், பாதிக்கப் பட்ட ஒரு பல்லின் சப்போட்டு க்காக, அதன் அருகில் உள்ள இரு நல்ல பற்களை பயன் படுத்த வேண்டியது இருந்தது. ஆனால், இம்ப்ளான்ட் சிகிச்சையில் அந்தப் பிரச்னை இல்லவே இல்லை. அதனால், மக்களும் விரும்பிவந்து, இம்ப் ளான்ட் முறையில் செயற்கை பல் பொருத்திக்கொள்கிறார் கள். மேலும், பழைய கேப் போடும் சிகிச்சையில், கேப் போடப்பட்ட பல்லுக்கு அருகில் உள்ள பற்கள் பல வீனம் ஆனாலோ, சொத்தை விழுந்தாலோ அல்லது பல்ஈறு கெட்டுப்போனாலோ, கேப் போடப்பட்ட பல் மறுபடியும் பாதிப்புக்கு ஆளாகும். ஆனால், Ô'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறையில் அப்படி யொரு நிலைமை வராது.

'இம்ப்ளான்ட்' சிகிச்சைக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

20 நிமிடங்கள் போதும். தாடையின் எலும்போடு இந்த முறையில் செயற்கை பற்களை இணைத்து விடுவோம். ஒரு பல், இரண்டு பல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பற்கள் இல்லா தவர்களும் இந்த சிகிச்சை முறையில் பற்களை  பொருத்திக்கொள்ளலாம். நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்கள் மருத்துவமனையில் 'இம்ப்ளான்ட்' சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார் கள்.

'இம்ப்ளான்ட்' சிகிச்சை யால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

முகத்தின் அழகு இன்னும் அதிகமாகும். பற்களின் உறுதித் தன்மை அதிகரிக்கும். எல்லா வகையான உணவு களும் உட்கொள்ளலாம். எந்த வித அசவுகரியமும் ஏற் படாது. அந்நிய பொருளை பொருத்திய உணர்வு நிச்சய மாக ஏற்படாது. காலையிலும், இரவிலும் பல் துலக்குவதை, வழக்கம்போல் செய்யலாம்.  வாழ்நாள் முழுக்க பிரச்னை வராது. யார் வேண்டுமா னாலும் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் மட்டும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது இருக்கும்.

இந்த சிகிச்சைக்கு அதிகம் செலவு ஆகுமா ?

அப்படியெல்லாம் யாரும் பயப்படத் தேவையில்லை. எல்லோருக்கும் ஏற்ற குறைந்த கட்டணத்தில் எங்கள் மருத்துவமனையில் யார் வேண்டுமானாலும் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு டாக்டர் ஜி.திருப்பதி கூறினார்.

'இராவணன்' குழும நிறுவனர் பிறந்தநாள் விழா

புகழ்பெற்ற இராவணன் குழுமங்கள் மற்றும் சிம்மப் பேரவையின் நிறுவனரான டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாரின் பிறந்தநாள் விழா சேலையூரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இராவணன் குழுமம்


சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களின் சமையலிலும் இன் சுவை சேர்க்கும் இராவணன் மசாலா, இராவணன் குழுமங்கள், சிம்மப் பேரவை ஆகியவற்றின் நிறுவனரும், நாடார் சமுதாய பிரமுக ருமான டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாரின் பிறந்த நாள் விழா, சேலையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

விழாவில் டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாருக்கு  ஆளுயர மாலையும், கிரீடமும் அணிவிக்கப்பட்டது. நாடார் சங்கப் பிரமுகர்கள், சிம்மப் பேரவை நிர்வாகிகள் என்று பலரும், டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்திய பிரமுகர்கள்


விழாவில் சிம்மப் பேரவை மாநில பொதுச் செயலாளர் அழகுவேல் தங்கராஜ், மாநில இளைஞரணி செயலாளர் ராவணன், மாநில துணைச் செயலாளர் பூவை ரஞ்சித் குமார், மாநில அமைப்புச் செயலாளர் நாஞ்சில் சசிகுமார், மாநில வர்த்தக அணி செயலாளர் க.ராதா கிருஷ்ணன், நடிகர் விஜய சிரஞ்ஜீவி, தலைமை நிலையச் செயலாளர் தங்க பெருமாள், 'சென்னை மெயில்' ஆசிரியர் எம்.ஜெயமுருகானந்தம், 'நாடார் குரல்' மாத இதழ் ஆசிரியர் 'மின்னல்' ஸ்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட டாக்டர் ஆ.இர.இராமசாமி அனைவரு க்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

ரூபி பில்டர்ஸ் வழங்கும் பட்ஜெட் வீடுகள்


டுத்தர மக்களும் சொந்த வீடு வாங்க வேண்டும் எனும் நல்ல நோக்கோடு, பட்ஜெட் வீடுகளை பெஸ்ட் பில்ட ரான ரூபி பில்டர்ஸ் நிறு வனத்தினர் அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள்.

பட்ஜெட் வீடுகள்

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது, நடுத்தர மக்கள் பலரது கனவு. ஆனா லும், விண்ணை முட்டிக் கொண்டு போகும் விலைவாசி உயர்வால் அவர்களது சொந்த வீட்டுக் கனவு, இன்னும் கன வாகவே இருக்கிறது. இவர் களது கனவை நனவாக்கிட, தமிழகத்தின் பெஸ்ட் பில்டர் களுள் ஒருவரான ரூபி பில்டர்ஸ் நிறுவனம், பட்ஜெட் வீடுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
100 சதவீத தரத்தோடும், சேவை மனப்பான்மையோடும் அவர்கள் கட்டித்தரும் இந்த வீடுகள், தாம்பரத்தை அடுத்து ள்ள இரும்புலியூர், மண்ணி வாக்கம் ஆகிய இடங்களில் விற்பனைக்கு உள்ளன.

ரூபி டீலக்ஸ்

மண்ணிவாக்கத்தில் ரூபி பில்டர்ஸ் நிறுவனம் அமைத் துள்ள Ôரூபி டீலக்ஸ்Õ வீடுகள், ரூ.20.35 லட்சம் முதல் விற்பனைக்குக் கிடைக்கின் றன. வண்டலூரில் இருந்து 2 கி.மீ. தொலைவு, பெருங்களத் தூரில் இருந்து 3 கி.மீ. தொலைவு மற்றும் தாம்பரத் தில் இருந்து 6 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது ரூபி டீலக்ஸ் குடியிருப்பு. இங்கி ருந்து, 11 கி.மீ. தொலைவிலேயே தொழில் நகரமான ஒரகடம் அமைந்துள்ளது.

24 மணி நேர பாதுகாப்பு, கார் பார்கிங், 24 மணிநேர மின்சார வசதி உள் ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது ரூபி டீலக்ஸ்.

ரூபி ரெஸிடென்ஸி

இதேபோல், இரும்புலியூரில் அமைந்துள்ள ரூபி ரெஸி டென்ஸியிலும் பட்ஜெட் விலையில் நடுத்தர மக்கள் தங்களுக்குப் பிடித்த வீட்டை வாங்கலாம். தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலை யத்தில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவிலும், பெருங்களத் தூர் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் சென் னை நகருக்குள் அமைந்து ள்ளது ரூபி ரெஸிடென்ஸி. இங்கு, ரூ.22.6 லட்சத்தில் இருந்து ஒரு வீட்டின் விலை ஆரம்பமாகிறது.

சுவை மிகுந்த குடிநீர், 100 சதவீத சுத்தமான காற்று, சில நிமிடங்களில் தாம்பரம் மற் றும் பெருங்களத்தூர் செல் லும் வசதி ஆகிய வசதிகளுடன் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வங்கிகள், சூப்பர் மார்கெட் டுகள் ஆகியவற்றை கொண்ட பகுதியாகவும் திகழ்கிறது, ரூபி ரெஸிடென்ஸி.

நவீன தரம்

கட்டிய வீட்டை ஒப்ப டைத்த பிறகும், வீட்டுக்குத் தேவையான சர்வீஸ்களை இன்முகத்துடன் செய்து தரும் ரூபி பில்டர்ஸ் நிறுவனத்தின் இந்த பட்ஜெட் வீடுகள், விலையில் வேண்டுமானால் நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கலாம். அதேநேரம், தரத்திலும் வடிவமைப்பிலும் நவீன அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு இணையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு அழையுங்கள்...
3009 3009

Wednesday, 19 March 2014

ஜாதகம் மூடநம்பிக்கையா?

கேள்வி : ஆன்மிகம் என்பது நம்பிக்கை, ஜாதகம் என்பது மூடநம்பிக்கை என்று என் நண்பன் சொல்கிறான். இதில், எது உண்மை? (என்.ரமேஷ், செம்பாக்கம்)

பதில் : ஆன்மிகம், ஜோதிடம் மட்டுமின்றி எல்லா சாஸ்திரங்களுக்கும் ஓர் அறிவியல் சார்ந்த விஷயங் களும் பலன்களும் இருக்கின் றன.  அவைகளை சரியாக புரிந்துகொண்டு சரியாகப் பயன்படுத்தினால் எதுவும் மூடநம்பிக்கை அல்ல.

ஆன்மிகம் என்பது, ஒருவரது ஆன்மா சம்பந்தப் பட்ட விஷயம்.  ஜோதிட சாஸ்திரமும் ஒருவருடைய ஆன்மாவை மையப்படுத்தி, அவரது முன் ஜென்மம், பிறப்பு, வாழ்வு, இறப்பு, அடுத்த ஜென்மம் போன்றவை களை அறிவதற்கு, நல்ல ஞான திருஷ்டி பெற்ற ரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

எப்படி கிரகங்களின் பாதிப்பு பூமியை தாக்கு கிறதோ, அப்படியே பூமியில் உள்ள எல்லா ஜீவராசி களையும், பொருட் களையும் பாதிக் கின்றது. அமா வாசை, பௌர்ணமி நாட்களில் கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும். செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் இருக்கும்போது தீயினால் பாதிப்பு ஏற்படு கின்றது.  சூரியனின் வெப்பம் தாக்குகின்றது. சனி கிரகத்தின் சுழற்சி பல கோணங்களில் பூமியை தாக்குகிறது.  இந்த அனைத்து விஷயங்களும் மனிதனின் உடல்  நிலையிலும், மனதளவிலும் பெரும் மாற்றங் களை நிகழ்த்துவது அசைக்க முடியாத உண்மை.

கடவுள் வழிபாட்டைக்கூட சிலர் மூடநம்பிக்கை என்று சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். மொத்தத்தில் ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கும் போதுதான் இறைவனையும், ஆன்மிகத்தையும், ஜோதிடத் தையும் நாடிச் செல்கிறான். அவன் நினைப்பதெல்லாம் நடந்து வசதியாக இருக்கும் போது, ஏதோ... தானே இந்த உலகையெல்லாம் படைத்தது போலவும், அவன் என்றும்

இதுதான் உண்மை!
அழியமாட்டான் என்ற கர்வம் போர்த்திய மூட நம்பிக்கையுடன் கடவுளையும், ஆன்மிகத்தையும், ஜோதிட சாஸ்திரத்தையும், தனக் குள்ளே உள்ள பயத்தை வெளிக்காட்டாமல், மற்ற வர்களை ஏளனம் செய்து கொண்டிருப்பான்.

மேற்கண்ட கேள்விக்கு பதில் அளித்தவர் :
'ஜோதிட நிர்மதி' கோபாலகிருஷ்ணன், செல் : 9176347274


-  மார்ச் 2 - 15, 2014, சென்னை மெயில் செய்தித்தாளில் இருந்து...

Saturday, 15 March 2014

மார்ச் 16-29, 2014 தேதிய, சென்னை மெயில் செய்தித்தாளின் முதல் பக்கம்...

நண்பர்கள் நற்பணி மன்ற வெள்ளி விழா

 

சேலையூர் நண்பர்கள் விளையாட்டு மற்றும் நற்பணி மன்றத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா சேலையூரில் நடைபெற்றது.

வெள்ளி விழா


சேலையூரில் இயங்கிவரும் நண்பர்கள் விளையாட்டு மற்றும் நற்பணி மன்றத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா சேலையூர் ஸ்ரீதேவி மஹாலில் நடைபெற்றது. மன்றத் தலைவர் எஸ்.ரமேஷ் விழாவுக்கு தலைமை தாங்கினார். செய லாளர் எம்.சீனிவாசகுமார் வரவேற்று பேசினார். மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆர்.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

விழாவை, ஸ்ரீராம் நகர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல் நிலைப்பள்ளியின் முதல்வர் என்.தங்கம் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வித்யா மந்திர் நாட்டிய கலா கேந்ரா மாணவிகளின் பரதம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகளின் இந்த கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இதையடுத்து, 'வெற்றிக்கான வழிகள்' எனும் தலைப்பில் மெய்யுணர்வு மையத்தின் நிறுவனர் க.மு.சிவசுவாமி சிறப்புரை ஆற்றினார். விழா மலரை நீதிபதி க.ஞானப் பிரகாசம் வெளியிட, சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் முனைவர் ஜேம்ஸ் சகாரியா பெற்றுக் கொண்டார்.

பங்கேற்றவர்கள்

சிறப்பு விருந்தினர்களாக கேம்ப்ரோடு வட்டார வியா பாரிகள் சங்கத் தலைவர் சந்தோஷ் பி.செல்லையா, சந்தோஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சந்தோஷ் சி.சந்தான குமார், தொழிலதிபர்கள் ஜெ.ஜெயமோகன், வி.பி. ஆனந்த், வி.தர்மராஜா, பாக்கியம் பிரஸ் டி.ஆபிரகாம், கிரைஸ்ட் கிருபா ஆங்கிலப் பள்ளி முதல்வர் ஆரோக்கிய ராணி உள்ளிட்ட பலர் விழா வில் கலந்துகொண்டனர்.

நிறைவில், நற்பணி மன்ற பொருளாளர் வி.ராமமூர்த்தி நன்றி கூறினார்.

அதிக செக்ஸ் : எலும்பு பலகீனமாகும்!


திக பாலுறவு கொண்டால் எலும்பு பலகீனமாகி, எலும்பு தேய் மானம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார், அகில இந்திய ஆயுர்வேத அமைப்பின் தேசிய செயலாளரும், பிரபல மருத்துவருமான கே.ஏ.ராஜேந்திரன்.

அவர் நமது நிருபரிடம் மேலும் கூறியதாவது:

இன்று, எலும்பு தேய்மான பிரச்னையால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எலும்பு மஜ்ஜைதான். நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து 7 வித மான தாதுக்கள் உருவாகின் றன. இவைதான், நம் உடலின் அடிப்படை.

முதல் தாது என்பது இரைப் பையின் ரசம். இது, ரத்தமாக மாறுவது இரண்டாவது தாது. ரத்தம், தசையாக மாறுவது மூன்றாவது தாது. தசை, கொழுப்பாக மாறுவது நான்காவது தாது. கொழுப்பு, எலும்பாக மாறுவது ஐந்தா வது தாது. எலும்பு, மஜ்ஜை யாக மாறுவது ஆறாவது தாது. இந்த மஜ்ஜையில் இருந்துதான், ஏழாவது தாதுவாக ஓர் ஆணின் விந்து உருவாகிறது.

இந்த ஏழு விதமான தாதுக்களும் ஓர் உப தாதுவை உற்பத்தி செய்யும். அதன்படி, இரைப்பையின் ரசம் கபத்தை யும், ரத்தம் பித்தத்தையும், தசை இடைவெளிகளையும், கொழுப்பு வியர்வையையும், எலும்பு நகம், மயிர் உள்ளிட் டவைகளையும், மஜ்ஜை க்ளேஸ்மா எனும் பசையையும் உற்பத்தி செய்கின்றன. இவற்றில், மஜ்ஜை உற்பத்தி செய்யும் க்ளேஸ்மா எனும் பசையே, நம்முடைய உடல் எலும்புகளின் விளிம்புகளை பசைத் தன்மையோடு வைத் திருக்க உதவுகின்றன. நம் முடைய கண்கள் ஈரத் தன்மையுடன் இருப்பதற்கு காரணமும் இதே க்ளேஸ்மாதான்!

மஜ்ஜை உற்பத்தி செய்யும் க்ளேஸ்மா பசையின் அளவு குறையும்போது, நம் உடலின் எலும்பு களில் உராய்வுகள் ஏற்பட்டு, எலும்பு தேய்மானம் ஆகிறது. பொது வாக, ஒருவர் 50 வயதை கடக்கும்போது, 7 விதமான தாதுக்களின் பலமும் குறையும். அதனால், எலும்பு பலகீனமாகும். எலும்பு பலகீனம் ஆனால், மஜ்ஜை உற்பத்தி செய்யும் க்ளேஸ்மாவும் குறைந்து, எலும்பு தேய்மானம் அதிகமாகும். இது, இயற் கையாக நிகழக்கூடிய ஒன்று. மருத்துவ சிகிச்சைகள் மூலம் இதை ஓரளவுக்கு கட்டுப் படுத்த முடியும்.

ஆனால், சிலர் இளம் வயதிலேயே எலும்பு தேய் மானத்தால் அவதிப்படுகின்ற னர். சரியான உணவு வகைகள் எடுத்துக் கொள்ளாதது, அதிகப்படியான உடலியக்க செயல்பாடுகள், இளம் வயதில் காச நோய் ஏற்படுதல், பெண்கள் உட னான அதிகப் படியான பாலுறவு ஆகிய வையே அதற்கு காரணம்.

சரி, என்ன மாதிரியான செயல்பாடுகள், இளம் வயது எலும்பு தேய் மானத்தை தடுக்கும் என்றுதானே கேட்கிறீர்கள்?

அது பற்றி, அடுத்த இதழில் சொல்கிறேன்.

- தொடரும்...

நீங்களும் பில்டர் ஆகலாம்..! - 9


ன்று பலரும் செய்தித் தாள் வாசிக்கிறோம், புத்தகம் படிக்கிறோம். இந்த நல்ல பழக்கம், பல்வேறு நேரங்களில் நமக்கு உதவுகிறது. இந்தப் பழக்கம், நம் அறிவை இன்னும் பட்டை தீட்டுவதுடன், உலக அளவில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ளவும் உதவுகிறது.

1825-களில், அமெரிக்கா வில் வாழ்ந்த அந்த சிறுவனு க்கும் புத்தகம் வாசிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், அவனோ மிகவும் ஏழை. தச்சு வேலை செய்து வந்த அவனது தந்தையால், அவனுக்கு எப்படி பணம் தந்து புத்தகம் வாங்கிக் கொடுக்க முடியும்? ஆனாலும், அந்தச் சிறுவனிடம் அறிவு தாகம் நிரம்பி வழிந்தது. அதனால், பக்கத்து நகரத்துக்கு அடிக்கடி நடந்து சென்று, அங்குள்ள, வசதி படைத்தவர் களின் வீடுகளில், புத்தகங் களை படிக்கத் தருமாறு கெஞ்சிக் கேட்பான். பலர், சிறுவனை விரட்டிவிடுவார் கள். சிலர், இரக்கப்பட்டு அவனுக்கு ஏதாவது ஒரு புத்தகத்தை கொடுப்பார்கள். புத்தகத்துடன் வீடு திரும்பும் சிறுவன், ஒன்று அல்லது இரண்டு நாளில் புத்தகம் முழு வதையும் படித்து முடித்து, ஏற்கனவே சொன்னபடி, புத்த கத்தை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்துவிடுவான்.

ஒருநாள், 'ஜனாதிபதி வாஷிங்டன்' என்ற புத்தக த்தை ஒருவரிடமிருந்து வாங்கி வந்தான். அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித் தந்தவரும், ஐக்கிய அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியுமான ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ் க்கை வரலாற்றுப் புத்தகம் அது. மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அன்று இரவு வெகுநேரம் புத்தகத்தை படித்தான் சிறுவன்.  ஒரு கட்டத்தில் விளக்கில் இருந்த எண்ணெய் தீர்ந்து, விளக்கு அணையும் நிலைக்கு வர... தனது மிகச்சிறிய வீட்டின் ஜன்னல் ஓரத்தில் புத்தகத்தை வைத்துவிட்டு தூங்கி விட்டான்.

காலையில் சிறுவன் கண் விழித்தபோது, புத்தகத்தின் நிலையைக் கண்டு திடுக் கிட்டான். இரவு பெய்த மழை யில் அந்தப் புத்தகம் நன்றாக நனைந்துபோய் இருந்தது. புத்தகத்தை இரவல் தந்தவர் திட்டுவாரே என்று பயந்த சிறுவன், வெயிலில் அதை காயவைத்தான். ஆனாலும், பழைய நிலைக்கு வராத புத்தகத்தை, உரியவரிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றான். நடந்ததைக் கூறி புத்தகத்தை ஒப்படைத்த தோடு, மன்னிப்பும் கேட் டான். ஆனால், புத்தகம் கொடுத்தவரோ, 'புத்தகத்துக் கான தொகையை கொடுத்து விட்டு, புத்தகத்தை எடுத்துக் கொண்டு போ. இல்லை யென்றால், என்னுடைய வயலில் நீ 3 நாட்களுக்கு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்' என்று ஒரே யடியாக சொல்லிவிட்டார்.

ஏழைச் சிறுவனுக்கு வேறு வழி தெரியவில்லை. புத்த கத்தை தந்தவர் சொன்னபடி, அவரது வயலில் 3 நாட்கள் தொடர்ந்து வேலை பார்த் தான். அதற்கு கூலியாக, 'ஜனாதிபதி வாஷிங்டன்' புத்தகத்தை அவனுக்குத் தந்தார், அதற்கு சொந்தக்காரர்.

முதன் முதலாக ஒரு புத்தகம் தனக்கு சொந்தமானபோது, அந்த சிறுவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தக் கூத்தாடியவன், அடிக்கடி அந்தப் புத்தகத்தை படித்தான். அதனால்தான் என்னவோ, அவன் பிற்காலத் தில் அமெரிக்க ஜனாதிபதி யாகவே ஆனான். அவர்தான், தோல்விகளைக் கண்டு துவளாத, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன்.

புத்தகங்கள், செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் ஒருவரிடம் இருந்தால், அவரால் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர முடியும் என்பதற்கு இந்த உண்மைச் சம்பவமே மிகச் சிறந்த உதாரணம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், பில்டர்கள் ஒவ்வொருவரும் நாட்டு நடப்புகளையும், அன்றைய சந்தை நிலவரங் களையும் உடனுக்குடன் அறிந்து வைத்திருப்பது மிகமிக அவசியம்.

இப்போதெல்லாம், விலை வாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது என்று எல்லாத் தரப்பில் இருந்தும் குரல் எதிரொலிக் கிறது. கட்டுமானத் துறை யிலும் அதே விலையேற்றம் தான்! எப்போதெல்லாம், எப்படியெல்லாம் கட்டு மானப் பொருட்கள் விலை உயர்கிறது என்பதை ஒரு பில்டர் நன்கு அறிந்து வைத்திருந்தால்தான், அவர் இந்தத் துறையில் தொடர்ந்து சிறப்பாக இயங்க முடியும். ஒரு சிறந்த பில்டர், அடுத்த 10 மாதங்களில் கட்டுமானப் பொருட்களின் விலையில் எந்தமாதிரியான மாறுதல்கள் ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்திருப்பது அவசியம். இதை அறிய வேண்டும் என்றால், தினமும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் களை தவறாமல் படிக்க வேண்டும்.

'அடுத்த ஆண்டு, வெளி நாட்டுக்கு 6 லட்சம் டன் சிமெண்ட் ஏற்றுமதி செய்ய அரசு திட்டமிட்டு இருக்கிறது' என்று, ஒரு நாளிதழில் செய்தி வெளியாகி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மற்ற வர்களுக்கு, இது பத்தோடு பதினொன்றான செய்தியாக இருக்கலாம். ஆனால், பில்டர் களுக்கு அப்படியில்லை. அவர்களுக்கு, இதுதான் எட்டுக்காலம், அதாவது... தலைப்புச் செய்தி!

கட்டுமானத் துறையில் சிமெண்ட் இல்லாமல் எதை யும் செய்ய முடியாது. அத னால்தான், சிமெண்ட் நிறுவ னங்கள் அதன் விலையை உயர்த்திக் கொண்டே போகின்றன.  சிலநேரங்களில், சிமெண்டே கிடைக்காதது போன்ற செயற்கை தட்டுப் பாடுகளும் உருவாக்கப்பட்டு, சிமெண்ட் விலை உயர்த்தப் படுகிறது.

சிமெண்டின் தேவை இப்படி இருக்க... திடீரென்று, 6 லட்சம் டன் சிமெண்ட் ஏற்றுமதி செய்யத் திட்டம் இருக்கிறது என்றால், பில்டர் கள் உஷாராகிவிட வேண்டும். விரைவில், எப்படியும் சிமெண்ட் தட்டுப்பாடு வரும் என்பதை அறிந்து, அப்படி யொரு நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே, அதை தேவை யான அளவு கொள்முதல் செய்து வைத்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.

சிமெண்ட் மட்டுமல்ல, வேறுசில விலையேற்றங்களும் ஒரு பில்டரை பெரிய அளவில் பாதிப்படையச் செய்கிறது. அவை என்ன?

- வீடு கட்டுவோம்...

3 செல்போன்களே பிரதமரின் சொத்து

 ன்னுடைய சொத்துக்கள் 3 செல்போன்கள் மட்டுமே என்று கணக்கு காட்டி இருக்கிறார் பிரதமர் ஒருவர். இந்த அதிசயம் நடந்திருப்பது, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில்!

பிரதமர்

இந்து நாடான நேபாள நாட்டின் 37-வது பிரதமராக சுஷில் கொய்லாரா சமீபத்தில் பதவியேற்றார். இவருக்கு வயது 74.

நேபாள நாட்டின் சட்டப்படி பிரதமர் பதவி வகிப்பவர்களும், அவர்களது உறவினர்களும் சொத்து மதிப்பை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது மரபு. அதன்படி, பிரதமர் சுஷில் கொய்லாரா தனது சொத்து மதிப்பை வெளியிட்டார்.

3 செல்போன்கள் மட்டுமே என்னுடைய சொத்து. மற்றபடி வேறு எதுவும் என் னிடம் இல்லை என்று அவர் அறிவித்து இருப்பது, அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுபற்றி பிரதமரின் செய்தி ஒருங்கிணைப்பாளரான பிரகாஷ் அதிகாரி நிருபர் களிடம் கூறியதாவது:

பிரதமர் சுஷில் கொய் லாராவுக்கு சொந்தமான வீடு, நிலம், வங்கியில் பணம், சொத்து... என்று எதுவுமே இல்லை. தங்கம் மற்றும் வெள்ளி ஆப ரணங்களும் கிடையாது. காரணம், இவர் ஒரு பிரம்மச் சாரி. அதனால், இவர் தனக்கு என்று எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. தனது தந்தை மறைந்த பிறகு, தனக் கான குடும்ப சொத்துக்களை உடன் பிறந்த சகோதரர்களுக்கு வழங்கி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

ஏழை பிரதமர்

இதன் மூலம், உலகில் உள்ள பிரதமர்களில் மிகவும் ஏழை யானவர் என்ற பெயரை சுஷில் கொய்லாரா பெற்றுள் ளார்.

'ஓட்டு போட பணம் வாங்காதீர்கள்!' - கமலஹாசன் விழிப்புணர்வு பிரசாரம்

க்களிடையே தேர்தல் தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகை யில், நடிகர் கமலஹாசன் பேசும் வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட இருப்பதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

விழிப்புணர்வு பிரசாரம்

தேர்தலில் பொதுமக்கள் பணம் வாங்காமல் வாக் களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரத்தை பல வழிகளில் மேற்கொள்ள இருக்கிறோம். நடிகர், நடிகைகளின் பேட்டி கள் மூலமாகவும் மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம்.

நடிகர் கமலஹாசன் மக்களிடையே விழிப்புண ர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் வீடியோ காட்சியை, அரசு கேபிள் டி.வி. மற்றும் தொலைக்காட்சிகள், சினிமா தியேட்டர்களில் வெளியிட இருக்கி றாம்.

அந்த வீடியோ காட்சியில், 'வாக்காளர்களே... சுய சிந்தனையோடு யோசித்து வாக்களியுங்கள். ஜனநாயகம் தழைக்க சிந்தித்து வாக்க ளியுங்கள். ஓட்டு போட யாரிடமும் பணம் வாங்காதீர் கள்' என்று விளக்கி கூறுகிறார் கமலஹாசன். இதை, பொது மக்கள் அனைவரும் ஒருவருக் கொருவர் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் எடுத்து சொல்லலாம்.

விஜயகாந்த் பிரசாரம்

மறைந்த தலைவர்களின் சிலைகளை சாக்கு பை போட்டு மூடிவைக்க வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், தனது பிரசாரத்தில் ‘‘பணம் தந்தால் வாங்கி கொண்டு ஓட்டு போடுங்கள் என்று பேசியதாக கூறுகிறீர் கள். இதுபற்றி புகார் எதுவும் வந்தால் அவரது பேச்சுக்கள் ஆய்வு செய்யப்படும்.

ஆனால், லஞ்சத்தை ஒழிக்க முடியாத சூழ்நிலையில் பணம் தந்தால் வாங்கி கொள்ளுங்கள் என்றுதான் அவரது பேச்சு இருப்பதாக தெரிகிறது. அதை, அரசியல் உள்நோக்கத்தோடு பேசியதாக கருதவில்லை. நான் பணம் தருகிறேன், எனக்கு ஓட்டு போடுங்கள் என்று விஜயகாந்த் பேச வில்லை. எனவே இது குற்றமாக தெரியவில்லை. இருந்தாலும், புகாராக வந் தால் அவர் பேசிய பேச்சின் முழு விவரமும் ஆராயப்படும்.

வியாபாரிகளிடம் சோதனை


வியாபாரிகளிடம் சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. வாகன சோதனையின்போது, அந்தக் காட்சி வீடியோவில் முழுமையாக பதிவு செய்யப் படுகிறது.

எனவே அங்கு லஞ்சம் பெறுவது போன்ற முறைகேடு நடந்தால், அந்த ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டு செல்லும் போது, அதற்கு கணக்கு காட்டுவது கட்டாயம்தான். தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப் படுகிறது.

அரசியல்வாதிகள் வங்கிகள் மூலம் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது.

யாரும் தேடி வராத பணம்!

கடந்த சட்டசபை தேர்தலின்போது திருச்சியில் ரூ.5 கோடி சிக்கியது. இதுபோல், மொத்தம் ரூ.36 கோடி பிடிபட்டது. இந்த பணம் அனைத்தும் வருமான வரித்துறையிடம் ஒப்படைக் கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த பணத்தை கேட்டு யாரும் வரவில்லை.

அதுபோல, இப்போதும் பணம் பிடிபடுகிறது. இது வரை ரூ.6 கோடி பிடிபட்டுள் ளது. இந்த பணத்துக்கான சரியான ஆவணங்களை காட்டி கேட்க யாரும் முன்வர வில்லை. இதுவும் வருமான வரித்துறையிடம்தான் உள்ளது.

வியாபாரிகள் கூறுவது போல் சிறிய தொகை கொண்டு செல்பவர்கள் பிடி படவில்லை. ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், மியான்மர் நாட்டு பணம் ஆகியவை பிடிபட்டுள் ளது. எனவே வியாபாரிகளோ, விவசாயிகளோ பாதிக்கப் படுவதாக கூற இயலாது. எந்த பணமாக இருந்தாலும், அதற்கு ஒரு கணக்கு இருக்கத் தான் செய்யும். அதற்கான விளக்கம் கூறுங்கள் என்று தான் கேட்கிறோம்.

பாதுகாப்பு

வாக்குச்சாவடிகளில் பெண் ஊழியர்கள் வாக்குப் பதிவுக்கு 2 மணி நேரத்துக்கு முன்பு வந்தாலே போது மானது. அவர்கள், இரவி லேயே வந்து தங்க வேண்டிய அவசியம் இல்லை. வாக்குப் பதிவு நடைபெறும் 2 மணி நேரத்துக்கு முன்பாக வந்தால், பாலியல் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

விருப்பம் இல்லையா?

தேர்தல் பணிகளில் ஈடுபட மாட்டோம் என அரசு ஊழியர்கள் யாரும் கூறினால் அதற்கு சரியான காரணம் வேண்டும். தேர்தல் பாது காப்பு பணியில் தமிழ் நாட்டில் ஒரு லட்சம் போலீ சாருடன் வெளிமாநில போலீ சாரும் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களிடம் கூறினார்.

Saturday, 1 March 2014

சென்னை மெயில் - இது நம்ம வீட்டு பேப்பர்!

மார்ச் 2-15, 2014, சென்னை மெயில் செய்தி இதழின் முதல் பக்கம்...

பிரியாணிக்காக வாக்கை விற்காதீர்கள்! - தேர்தல் கமிஷன் வேண்டுகோள்

 'பிரியாணிக்காகவும், பணத்துக்காகவும் ஆசைப் பட்டு, உங்களின் மதிப்புமிக்க வாக்கை விற்றுவிடாதீர்கள்' என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார்  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல்


புதிய பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில், கட்சிகள் இடையே கூட்டணி உறுதி செய்யப்படாததால், பெரும்பாலான கட்சிகள் யாரையும் அவசரப்பட்டு விமர்சிக்காமல் அடக்கி வாசித்து வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை 39 லோக்சபா தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத் தப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறுகையில், 'தமிழகத் தில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக் கையை ஏற்று, அவ்வாறே தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷனுக்கு பரிந் துரை செய்துள்ளோம். அத னால், தமிழகத்தில் ஒரேகட்ட மாக தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது' என்று தெரிவித்து இருக்கிறார்.

மேலும், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நேர்மையான முறையில் நடைபெறவும் தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் 70 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு தொகுதியில், வேட் பாளர்களின் எண்ணிக்கை 15&க்கும் மேல் இருந்தால், 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு ஓட்டுப்பதிவு இயந்திரங்களிலும் உள்ள கடைசி பட்டன் 'நோட்டோ' பட்டனாக இருக்கும். அதாவது, எந்த வேட்பாளரு க்கும் வாக்களிக்க விருப்ப மில்லாதவர்கள் இந்த நோட்டோ பட்டனை அழுத்தலாம்.

தேர்தல் நேரங்களில் வாக் களர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதும், அதை வாக்காளர்கள் பெற்றுக்கொண்டு வாக்களிப் பதும்  தவறு என்பதை அறி வுறுத்தும் வகையில் விழிப்பு ணர்வு பிரசாரம் மேற்கொள்ள வும் தேர்தல் கமிஷன் முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

ஓட்டை விற்காதீர்கள்

ஓட்டுக்கு பணம் பெறு வதற்கு எதிராக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். சினிமா, பேனர் போன்ற வற்றின் மூலம் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். ஒரு வாக்காளர் தன்னுடைய ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டால், தொகுதிக்கு சாலை வேண்டும், வேறு வசதிகள் வேண்டும் என்று எம்.பி-யிடம் உரிமையோடு கேட்க முடியாது. ஓட்டுக் குத்தான் பணம் கொடுத்து விட்டேனே என்று அவர் மறுத்துவிடுவார்.
அதனால், 5 ஆண்டுகள் உங்கள் தொகுதி வளர்ச்சி அடையாமல் போய்விடும் என்று கூறி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். வாக்காளர்கள் யாரும் தயவுசெய்து, ஆயிரம் ரூபாய்க்காகவும், பிரியாணிக்காகவும் ஓட்டை விற்க வேண்டாம். இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஜெயில்!

ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கினாலும் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவதை வீடியோ படம் அல்லது புகைப்படம் படம் பிடித்து அனுப்பும் வசதிகளை இந்திய தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளோம். எனவே, அவற்றை இந்த குற்றத்திற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்வோம். ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். முன்பு ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு ஆதாரங்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. தற்போது படங்கள் மூலமாக ஆதாரங்கள் பெறப்படும்.

நீங்களும் பில்டர் ஆகலாம்..! - 8


டாக்டர் ரூபி ஆர்.மனோகரன்

லகின் முதல் மின்சார பல்பை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்று எல்லோருக்கும் தெரி யும். உலகின் முதல் மின்சார பல்பு எரிந்தபோது, ஒட்டு மொத்த உலகமே எடிசனை கொண்டாடியது. அவரது கண்டுபிடிப்பால்தான் இன்று உலகம் ஒளிர்ந்துகொண்டிருக் கிறது.

இப்படி, தன்னுடைய கண்டுபிடிப்பால் உலகப் புகழ் பெற்ற எடிசன், உலகின் முதல் பல்பை ஒளிரவைக்க சந்தித்த சோதனைகள் நூறு அல்ல; ஆயிரக்கணக்கில்! ஆயிரக் கணக்கான முறை பல்பை ஒளிரவைக்க முயற்சி செய்தும் உடனடியாக பலன் கிடைக்க வில்லை. அதனால், இரவு- பகல் பார்க்காமல் உழைத்தார், சாப்பாட்டை மறந்தார், ஆய்வுக்கூட சோதனையே கதியென்று கிடந்தார். அந்த விடாமுயற்சிக்கு கிடைத்த பலனால்தான், உலகின் முதல் மின்சார பல்பை அவரால் ஒளிரவைக்க முடிந்தது.

'ஆயிரக்கணக்கான தோல்விகளுக்குப் பிறகும், மனம்தளராமல் இயங்கி, எப்படி உங்களால் இந்த வெற்றியை நிகழ்த்த முடிந்தது' என்று எடிசனிடம் கேட்ட போது, 'அவையெல்லாம் தோல்விகள் என்று யார் சொன்னது?' என்று திருப்பிக் கேட்டார்.

அதோடு, 'ஒவ்வொரு தோல்வியின்போதும், அந்த சோதனையை எப்படி செய்யக்கூடாது என்று தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு படிப்பினையை எனக்கு கற்றுத் தந்தது. அதனால்தான் என்னால் வெற்றிபெற முடிந் தது...' என்று, தனது வெற்றி யின் ரகசியத்தை மனம்திறந்து சொன்னார் எடிசன்.

தோல்விகளை, நமக்கான நல்ல பாடங்களாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதையே நினைத்துநினைத்து வருந்திக்கொண்டிருந்தால், வெற்றியின் இலக்கு நம்மை விட்டு வெகுதூரம் விலகிக் கொண்டே போகும். தோல்வி யிலும் நல்ல பாடம் கற்றுக் கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

பில்டர்களும், கட்டிட கட்டு மானப் பணிகளில் தாங்கள் தெரியாமல் செய்யும் தவறு களை கண்டறிந்து,  அவை அனைத்தையும் களைந்து விட்டால்... அவர் சக்சஸ் பில்டர்தான்!

நாம் எல்லோரும் உடல் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவோம். அதே முக்கியத்துவத்தை, நாம் வாழ்நாள் முழுவதும் வசிக்கக்கூடிய வீட்டுக்கும் தரவேண்டும். இதைத்தான், நம்முடைய வாடிக்கையாளர் களும் எதிர்பார்க்கிறார்கள். வீடு கட்டும்போது, அதை பார்த்துபார்த்து கட்ட வேண்டும் என்பார்கள். சிமெண்ட் கலவையில் தொடங்கி, சுவற்றில் ஆணி அடிப்பது வரையில் எல்லா விஷயங்களையும் அக்கறை யோடு கவனிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல் வார்கள். நாம் பார்த்துபார்த்து வீடு கட்டினால்தான், அந்த வீடு அழகாக இருக்கும்.

அதோடு, நம் சந்தோஷங்கள் நிறைந்திருக்கும் இடமாகவும் அது திகழும். அதனால், வாடிக்கையாளர்களின் விருப்பப்படி ஒவ்வொரு பில்டர்களும் கட்டிடங்களை எழுப்ப வேண்டும்.

கட்டிடங்கள் எழுப்பும் போது, கொஞ்சம் அக்கறை யோடு செயல்பட்டால் தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடலாம். இந்த அக்கறையை, கட்டுமான பணிக்கான நிலத்தை தேர்வு செய்யும்போதே செயல்படுத்த ஆரம்பித்துவிட வேண்டும்.

வாங்கிய நிலத்தை முறை யாக பயன்படுத்தாமல் வீணடிப்பதும் நமக்கு செலவு தான். வாங்கிய நிலத்தின் முழு பகுதியும் கட்டுமானத்துக்கு பயன்பட்டால்தான் அது பில்டருக்கு ஆதாயம். அதுதான், வாடிக்கையாளரு க்கும் பயன்தரும். அதனால், நிலத்தை முழுமையான கட்டு மான பணிக்கு பயன்படுத்தும் வகையில் பிளான் போட வேண்டும். இதற்கு ஸ்ட்ரக் சுரல் இன்ஜினீயரிங் சிறப்பாக இருக்க வேண்டும்.

பலருக்கு ஒரு 'காலத்திற்கு'  எத்தனை கம்பிகள் வைக்க வேண்டும் என்பதுகூட தெரிவதில்லை. கம்பி வளைப் பவரை வைத்து காலம் போடுவது தவறான செயல். இதற்கென்றே இருக்கும் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயர்களை கலந்தாலோசித்து, முடிவெடுப்பது நல்லது. இவர்கள், சதுர அடிக்கு ஒரு ரூபாயில் இருந்து 1.50 ரூபாய் வரை வாங்குகிறார்கள். இவர் களைக்கொண்டு காலத்தை சரியாக அமைத்தால், கட்டு மானப் பொருட்களை கணிச மாக சேமிக்கலாம்.

கான்கிரீட் போடும் இடத் தில், கான்கிரீட் வீணாகாமல் பார்த்தாலும் கணிசமான அளவுக்கு பணத்தை மிச்சப் படுத்தலாம். கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் தொழிலாளர்கள், தங்கள் இஷ்டத்துக்கு கான்கிரீட்டை கொட்டி வீணாக்குவதை கண் காணித்து தடுப்பதும் அவசியம்.

ஒரு கட்டிடத்தில் தேவைக்கு அதிகமாக கம்பி வைப்பதோ, தேவைக்கு அதிகமாக சிமெண்ட் போடுவதோ எந்த பயனையும் தராது. இப்படி செய்வதால், நம்முடைய கட்டுமானச் செலவுகள்தான் கூடிக்கொண்டே போகும் என்பதை ஒவ்வொரு பில்ட ரும் அறிந்திருப்பது அவசியம்.

இன்னும் சிலர் இருக்கிறார் கள்; கட்டிடத்தை கட்டிய பிறகு, இதை அப்படி மாற்றியிருக்கலாமே என்று, திடீரென்று முடிவெடுத்து, கட்டுமானத்தை இடித்து மாற்றுவார்கள். இதுவும் வீணான செலவுதான். அத னால், ப்ளான் செய்யும்போதே நல்ல ஆர்க்கிடெக்டாக வைத்து ப்ளான் செய்தால், கட்டிடத்தை இடித்து, மறுபடியும் கட்டவேண்டிய நிலைமை வராது.

ஆர்க்கிடெக்ட் என்றதும், நிறைய செலவு ஆகுமோ என்று யாரும் பயப்பட தேவையில்லை. அதிக செலவு வைக்காத சிறிய ஆர்க்கி டெக்டுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை வைத்தும் ப்ளான் செய்யலாம்.
முன்பு, லோடு பியரிங் ஸ்ட்ரக்சர்ஸ் முறை வழக்கத் தில் இருந்தது. இப்போது, காலம் ஸ்ட்ரக்சர்ஸ்தான் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது, கட்டுமானச் செலவை கணிச மாக குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- வீடு கட்டுவோம்...

நீண்ட ஆயுள் வாழ ஆயுர்வேதம் சொல்லும் 'ரகசியங்கள்'

யுர்வேதம், சித்தா என்பது என்ன? மனிதன் நீண்ட ஆயுள் வாழ அவை எப்படி உதவுகின்றன?

இந்தக் கேள்விகளுக்கு பதில ளிக்கிறார் பிரபல டாக்டர் டாக்டர் கே.ஏ.ராஜேந்திரன்...

ஆயுர்வேதமும் சித்தாவும் அடிப்படையில் ஒன்றேதான். அதை, அவரவர் மொழிகளில்-பகுதிகளில் உள்ளதால் அப்படியொரு தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது. சுருக் கமாக, ஸ்ரீவிஷ்ணுவின் அம்ச மான தன்வந்திரி பகவானை முன்னிறுத்தி, வைணவ அடிப் படையில் சம்ஸ்கிருதத்தில் பதியப்பட்டு, வடஇந்தியாவில் இருப்பது ஆயுர்வேதம்.

சிவபெருமானை முன்னி றுத்தி, சைவ சித்தாந்த அடிப் படையில் அகத்தியர் வழி தமிழில் பதியப்பட்டு, தென் இந்தியாவில் இருப்பது சித்த மருத்துவம். மற்றபடி, அடிப்படையில் மொத்த அறிவியலும் இரண்டிலும் பொதுவாகவே இருக்கிறது.

ஆயுர்வேதம்தான் தனி மனித ஒழுக்கத்தையும், தின சரி நடைமுறை பழக்கங்களை யும், நல்ல உணவு விஷயங் களையும் மிக விரிவாக விளக்கி கூறுகிறது. உடல் நலனுக்கு மனநலன் முக்கியம் என்பதை ஆயுர்வேதம் அடிப் படை விஷயமாக முன்னிறுத் துகிறது.

இந்து சதுர்யுகத்தில், இப் போது நடைபெறும் கலியுகம் வரைஉள்ள காலக்கட்டத்தில் திரேதா யுகத்தில் இருந்துதான் மனிதனுக்கு மருத்துவம் தேவைப்பட்டது. கிருதா யுகத்தில் அவனுக்கு மருத்து வம் தேவைப்படவில்லை.

மந்திரங்கள் மூலம் அந்த யுகத்தில் நோயின்றி ஒரு தேவனுடைய ஆற்றலுடன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்டவனாக வாழ்ந்திருந்தான் மனிதன். திரேதா யுகத்தின் மத்திய காலக்கட்டத்தில் இருந்து தான் மருத்துவமும், மணியும், மந்திரமும் கொண்டு, தனக்கு ஏற்பட்ட நோய்களை தீர்த்துக் கொண்டான்.

அதன்படி, ஆயுர்வேதம் நடைமுறைக்கு வந்து தோரா யமாக 15 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை விஷய ஞானம் உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆயுர் வேதம் என்பது கடல். இதைப் பற்றி துளி அளவு புரிந்து கொண்டதை இதுவரை கூறியுள்ளேன்.

இனி, அன்றாட வாழ்க்கை க்கும், ஆரோக்கிய வாழ்வுக் கும் ஆயுர்வேதம் கூறும் தினசரி கட்டளைகள் சில வற்றை சொல்கிறேன்.

காலையில் செய்ய வேண்டியவை :

விழித்தெழ வேண்டிய சரியான காலம் காலை 4 முதல் 6 மணிக்குள் உள்ள பிரம்ம முகூர்த்தமாக சரியான காலம். எழுந்ததும், முகம் கழுவி, குறைந்தது 5 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.

தினமும் தலையில் எண் ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது. அதேபோல், தினமும் மூக்கில் 2 சொட்டு நல்லெண் ணெய் அல்லது அணு தைலம் உறிஞ்ச வேண்டும். உடலுக்கும் எண்ணெய் தேய்த்து, உடலை பிடித்துவிட்டு, அதன்பிறகு சிறிதுநேரம் தேக பயிற்சி செய்த பின்பே குளிப்பது முறையாகும்.

உடலுக்கு வெந்நீரும் தலை க்கு தண்ணீரும் நல்லது. உடற்பயிற்சி கடினமாக இருக்கக்கூடாது. களைப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் ஒரு மணி நேரம் காலார உலாவி வரலாம் (கடின உடற்பயிற்சி பிற்காலத் தில் சில நோய்களைத் தந்து விடும்). இதன்பிறகு பிராண யாமம், சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

சாப்பிட வேண்டிய உணவு வகைகள் :

சத்துமிக்க நெய், எண்ணெய் ஆகியவை அளவுடன் சேர்த்த அறுசுவை கொண்ட உண வாக காலை உணவு இருக்க வேண்டும். அந்த உணவை ஈரக்கால்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். உணவு உண்ணும்போது, கோப- தாபம் இல்லாமல் மன அமைதியுடன் உண்ண வேண்டும்.

முதலில் சிறிது இஞ்சியை உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். பிறகு, உணவில் முதலாவதாக இனிப்பும், அடுத்து புளிப்பும், முடிவில் கார்ப்பு, கசப்பு கலந்த உணவை சாப்பிட வேண்டும். அரை வயிற்றுக்கே உண்ண வேண்டும். கால் வயிறு தண்ணீர். மீதமுள்ள கால் வயிறு வாயுக்களுக்காக காலியாக விடவேண்டும்.

இளம்சூடான உணவே நல்லது. குடிக்கும் தண்ணீர் ஒருமுறை கொதிக்கவைக்கப் பட்டதாக இருக்க வேண்டும். ஒருமுறை கொதிக்கவைத்த தண்ணீரை மறுமுறை சூடு படுத்தினால் அதிக கெடுதலைத் தரும்.

சாப்பிட்ட உடனே உட் கார்ந்திருத்தல் அல்லது படுத்தல் ஆகியவை தவறு. சாப்பிட்டு முடித்தவுடன் 5 நிமிடம் காலார உலாவி வரவேண்டும். சாப்பிட்ட 30 நிமிடங்கள் வரை கடினமான வேலைகளை தவிர்த்து விடுங்கள்.

மண் பாத்திரங்களில் சமைப்பது மிகச் சிறந்தது. இரும்பு பாத்திரத்தில் சமைத் தால் கண் நோய், மூலம் போன்ற நோய்க்கு நல்லது. வெண்கலத்தில் சமைப்பது புத்தியை வளர்க்கும்.

தேன் மற்றும் நெய்யை சமஅளவு சேர்த்து சாப்பிடக் கூடாது. தேனை சூட வைத்தோ அல்லது சூடான பண்டங்களுடனோ சேர்த்து சாப்பிடக்கூடாது. சூடான தேகம் கொண்டவர்கள் தேனை தவிர்க்கவும்.

மேலும் தகவல்கள் அறிய...

டாக்டர் கே.ஏ.ராஜேந்திரன்,
போன் : 9344455511

'டேட்டிங்'கில் சிக்கிய காஜல் அகர்வால்

டந்த மாதம் நடிகை காஜல் அகர்வால், தன்னுடைய நண் பரான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் துபாய் சென்றிருந்தார். அங்கே பல்வேறு இடங்களு க்குச் சென்றவர்கள் ஜோடி யாக புகைப்படங்கள் எடுத்தத் தள்ளினர். இருவரும் நெருக்க மாக இருந்த காட்சிகளைக்கூட படம் எடுத்துள்ளனர்.

அவ்வாறு அவர்கள் எடுத்த புகைப்படங்களில் சில, திடீ ரென்று இணையதளங்களில் வெளியாக அதிர்ச்சியாகி விட்டார் காஜல். இதுகுறித்து அவரிடம் பேச முயன்று தோல்வியுற்ற நிருபர்கள், காஜலின் தங்கையிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டனர்.

'என்னுடைய அக்கா காஜல் அகர்வால், துபாய் சென்றது உண்மைதான். காஜலுக்கு நிறைய ஆண் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் அனை வரும் சேர்ந்துதான் டேட்டிங் சென்றனர்' என்று பகிரங்க மாக கூறிவிட்டார்.

காஜல் அகர்வால் டேட்டிங் சென்றார் என்பதை அறிந்த நிருபர்கள், அவரிடம் மறு படியும் பேச முயன்றனர். ஆனால், காஜல் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இதற் கிடையில், காஜலும் அவரது ஆண் நண்பரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவர காரணம், அவரது ஆண் நண்பரே என்று கிசுகிசு க்கிறது கோலிவுட் பட்சி.