Wednesday, 4 December 2013

டிசம்பர் 6-ம் தேதி உலகின் முதல் குபேரன் கோவில் கும்பாபிஷேகம்

த்னமங்கலத்தில் அமைந்துள்ள உலகின் முதல் குபேரன் கோவிலில் டிசம்பர் 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

முதல் குபேரன் கோவில்

சென்னை வண்டலூரை அடுத்த ரத்னமங்கலத்தில் ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று தனிக் கோவில் அமைந்து உள்ளது. இங்கே ஸ்ரீ மகா லட்சுமியும் ஸ்ரீ குபேர பக வானும் இணைந்து  அருள் பாலிக்கின்றனர். உலகில் முதன் முதலாக ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று அமைந்த முதல் தனிக் கோவில் இது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் செல்லும் முன்பு இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.

இவ்வளவு சிறப்புமிக்க ரத்ன மங்கலம் குபேரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு, வருகிற 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, டிசம்பர் 4&ம் தேதி (புதன் கிழமை) காலை 9.5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம் மற்றும் புதிய விக்ரகங்களுக்கு கண் திறக்கும் வைபவங்களும், அன்று மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை யந்திர பிரதிஷ்டை, முதற்கால யாக பூஜை உள்ளிட்ட வைபவங் களும் நடைபெற உள்ளன.

டிசம்பர் 5-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் இரண்டாம் கால யாக பூஜை மற்றும் வைபவங்களும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெறு கின்றன.

கும்பாபிஷேகம்

டிசம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதி காலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெறும். காலை 7.45 மணிக்கு யாத்ரா தானம், கல சங்கள் புறப்பாடு நடை பெறும். 8.15 மணிக்கு ஸ்ரீ லட்சுமி குபேரர் மற்றும் பரிவார தெய்வங்களின் விமா னங்களுக்கு மகா கும்பாபி ஷேகம் நடைபெறும். 8.30 மணிக்கு ஸ்ரீ லட்சுமி குபேரர் மற்றும் பரிவார தெய்வங் களுக்கு மகா கும்பாபிஷே கமும், மகா அபிஷேகம், மகா தீப ஆராதனையும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ராஜலெட்சுமி குபேரா டிரஸ்ட்டின் டிரஸ்டி மற்றும் கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment