Saturday, 12 April 2014

பல் மருத்துவத்தில் பிரபலமாகும் 'இம்ப்ளான்ட்' சிகிச்சை :பல் மருத்துவர் ஜி.திருப்பதி


ல் மாற்று சிகிச்சை முறை யில் அதிநவீன வசதியான 'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி, அதை வெற்றிக்கரமாக செயல்படுத்தி வருகிறது, சென்னை சேலையூரில் இயங்கிவரும் ஸ்ரீ ராக வேந்திரர் பல் மருத்துவமனை.

இதுகுறித்து, அந்த மருத்துவ மனையின் தலைவரும், பிரபல பல் மருத்துவருமான டாக்டர் ஜி.திருப்பதி, நமது நிருபருக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

அது என்ன 'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறை?

செயற்கை பல் பொருத்தும் சிகிச்சை முறையில், 15, 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமை எல்லாம் மாறி, தற்போது அதிநவீன வசதிகள் வந்துவிட்டன. அதில் ஒன்று தான் இந்த 'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறை. டைட்டா னியம் மெட்டல் ஸ்குருவை, செயற்கை பல் பொருத்த வேண்டிய இடத்தில் பொருத் தி, அந்த ஸ்குரு மேலே பல் பொருத்துவதுதான் இந்த சிகிச்சை. இது செயற்கை பல் லாக இருந்தாலும், சொந்தப் பல் மாதிரிதான் இருக்கும்.

அப்படியென்றால், சொந்தப் பற்களுக்கு உள்ள வலிமை அதற்கும் உண்டா?


கண்டிப்பாக. 'இம்ப் ளான்ட்' சிகிச்சை முறையில் பொருத்தப்பட்ட செயற்கை பற்களால் கடினமான உணவுப் பொருட்களை எளிதாக கடித்து, சுவைத்து சாப்பிடலாம். நாம் உண்ணும் கடினமான உணவு பொருட் களால் இந்தப் பற்களுக்கு எந்த வகையிலும் சேதாரம் ஏற் படாது. அவ்வளவு உறுதி யானது இந்தப் பல்.

'இம்ப்ளான்ட்' சிகிச்சையின் பிளஸ் பாயிண்டாக எதைக்கருதுகிறீர்கள்?

முன்பு, பாதிக்கப்பட்ட பற் களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, அதற்குப் பக்கத்தில் உள்ள இரு பற்களை Ôசப்போட்Õடாக எடுத்து, பாதிக்கப்பட்ட பல்லின் மீது 'கேப்' மாட்டிவிடுவோம். இந்த சிகிச்சையில், பாதிக்கப் பட்ட ஒரு பல்லின் சப்போட்டு க்காக, அதன் அருகில் உள்ள இரு நல்ல பற்களை பயன் படுத்த வேண்டியது இருந்தது. ஆனால், இம்ப்ளான்ட் சிகிச்சையில் அந்தப் பிரச்னை இல்லவே இல்லை. அதனால், மக்களும் விரும்பிவந்து, இம்ப் ளான்ட் முறையில் செயற்கை பல் பொருத்திக்கொள்கிறார் கள். மேலும், பழைய கேப் போடும் சிகிச்சையில், கேப் போடப்பட்ட பல்லுக்கு அருகில் உள்ள பற்கள் பல வீனம் ஆனாலோ, சொத்தை விழுந்தாலோ அல்லது பல்ஈறு கெட்டுப்போனாலோ, கேப் போடப்பட்ட பல் மறுபடியும் பாதிப்புக்கு ஆளாகும். ஆனால், Ô'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறையில் அப்படி யொரு நிலைமை வராது.

'இம்ப்ளான்ட்' சிகிச்சைக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

20 நிமிடங்கள் போதும். தாடையின் எலும்போடு இந்த முறையில் செயற்கை பற்களை இணைத்து விடுவோம். ஒரு பல், இரண்டு பல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பற்கள் இல்லா தவர்களும் இந்த சிகிச்சை முறையில் பற்களை  பொருத்திக்கொள்ளலாம். நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்கள் மருத்துவமனையில் 'இம்ப்ளான்ட்' சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார் கள்.

'இம்ப்ளான்ட்' சிகிச்சை யால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

முகத்தின் அழகு இன்னும் அதிகமாகும். பற்களின் உறுதித் தன்மை அதிகரிக்கும். எல்லா வகையான உணவு களும் உட்கொள்ளலாம். எந்த வித அசவுகரியமும் ஏற் படாது. அந்நிய பொருளை பொருத்திய உணர்வு நிச்சய மாக ஏற்படாது. காலையிலும், இரவிலும் பல் துலக்குவதை, வழக்கம்போல் செய்யலாம்.  வாழ்நாள் முழுக்க பிரச்னை வராது. யார் வேண்டுமா னாலும் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் மட்டும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது இருக்கும்.

இந்த சிகிச்சைக்கு அதிகம் செலவு ஆகுமா ?

அப்படியெல்லாம் யாரும் பயப்படத் தேவையில்லை. எல்லோருக்கும் ஏற்ற குறைந்த கட்டணத்தில் எங்கள் மருத்துவமனையில் யார் வேண்டுமானாலும் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு டாக்டர் ஜி.திருப்பதி கூறினார்.

0 comments:

Post a Comment