Tuesday, 31 December 2013

சற்குரு சரித்திரம் அத்தியாயம் 1 - நெல்லை விவேகநந்தா

1945-ம் ஆண்டு.

தஞ்சை தரணி நெற்பயிர் களால் பசுமைக் கோலம் பூண்டிருந்தது. சோழர்களின் பக்தியால் விளைந்த கோயில் கள் நகரங்கள், கிராமங்கள் தோறும் நிறைந்திருந்தன. அந்த வகையில், ஆன்மிகத் தாலும் விவசாயத்தாலும் செழித்திருந்த ஊர்தான் இன்றைய தஞ்சை மாவட்டத் தில் அமைந்துள்ள மாத்தூர் தொட்டி.

இந்த அழகான ஊர், அந்த மகானின் வருகையால் இன் னும் கூடுதலாக புத்துணர்வு பெற்றது. 'நம்ம ஊருக்கு புதுசா சாமியார் ஒருத்தர் வந்திருக்காராம். அவர், அதி கம் பேச மாட்டாராம். ஆனா, அவர் என்ன சொன்னாலும் நடக்குதாம்...' - இப்படி அந்த ஊர் முழுக்க பேசினார்கள்.

மகானின் புகழ் மாத்தூர் தொட்டி மட்டுமல்ல, பல் வேறு இடங்களிலும் பரவி யிருந்த நேரம் அது. மகானின் அருமை பெருமைகளை பிறர் சொல்லி கேள்விப்பட்டு, அவரைக் காணும் ஆவலில் மாத்தூர் தொட்டிக்கு வந்து விட்டார் வேதாரண்யத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர்.

'சுவாமி... உங்களைப் பார்க்க வேதாரண்யத்தில் இருந்து ஒருத்தர்தனது நண்ப ருடன் வந்திருக்கார். உங்களை எப்படியும் பார்த்து பேசியே ஆகவேண்டும் என்று பிடி வாதம் செய்கிறார். உங் களைப் பார்க்காமல் இங்கி ருந்து போகமாட்டாராம்'

- சீடர் ஒருவர் இப்படிச் சொல்லவும், அதுவரை தியா னத்தில் அமர்ந்திருந்த அந்த மகான் கண்கள் திறந்து பார்த்தார்.

'சரி, அவரை வரச் சொல்' - மகானின் திருவாயில் இருந்து உத்தரவு பிறந்தது.

அடுத்த நிமிடமே வேதாரண் யத்தில் இருந்து வந்திருந்த அன்பர் மகான் அருகே வந்து நின்றார். மகானை பார்த்த மாத்திரத்தில் அவருக்குள் என்ன தோன்றியதோ தெரிய வில்லை, பொலபொல வென்று கண்ணீர்த் துளிகளை உதிர்க்க ஆரம்பித்துவிட்டார். மகானின் மகிமைகள் பற்றி சொல்லி அவரை அங்கே அழைத்துவந்திருந்த அவரது நண்பருக்கு ஒன்றும் ஓட வில்லை.

'உங்களுக்கு என்ன ஆயிற்று? சாமியாரைப் பார்த் ததும் நீங்கள் ஏன் அழுகிறீர் கள்? என்று கேட்டார்' அன்பரின் நண்பர்.

பதிலுக்கு, அன்பரின் கண் களில் மறுபடியும் கண்ணீர் தான்! அவரது நண்பருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில அடிகள் தூரத்தில் மகான் அமர்ந் திருக்க... அவரைப் பார்த்து இவர் திரும்பத் திரும்ப அழுது கொண்டிருக்கிறாரே... என்று குழம்பினார் அன்பரின் நண்பர்.

தன்னைக் காணவந்த பக்தன் ஏன் அழுகிறான் என்று மகானுக்குத் தெரிந்து விட்டது. ஆனாலும், அமைதி காத்தார்.

சில நொடி அழுகைக்குப் பிறகு வேதாரண்யம் அன்பர், மெள்ள வாய் திறந்தார்.

'நண்பரே..! நான் எதிரே காணும் மகான், சாதாரண மகான் கிடையாது. நம்மோடு வாழும் தெய்வம்!'

'உமக்கு என்ன ஆயிற்று? ஏன், சம்பந்தம் இல்லாமல் உளறுகிறீர்?' - அன்பரின் நண்பர் கேட்டார்.

'அப்படிச் சொல்லாதீர். இதோ... நம் எதிரே அமர்ந் திருக்கிறாரே மகான், இவரது திருவுருவப் படத்தை என் தந்தையார் தன்னுடைய 105 வயது வரை பூஜையறையில் வைத்து வழிபட்டு இருக்கிறார். 105 வயதுவரை வாழ்ந்த என் தந்தைக்கு தெய்வமாக இருந்து வழிகாட்டியவர், இப்போது... அதே தேகப் பொலிவோடு நம் எதிரே நிற்கிறார்..!'

வேதாரண்யம் அன்பர் இப்படிச் சொன்னதும், அவரை அங்கு அழைத்துவந்த நண்பர் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.

பக்தர்களின் நிலையை புரிந்துகொண்ட மகான், அவர்களை, தன் அருகில் வருமாறு சைகையால் அழைத் தார்.

பக்தர்கள் இருவரும் மகான் முன்பு கைகட்டி அமைதியாக நின்றிருந்தனர்.

'குழந்தைகளே! என்னு டைய ஆசி வேண்டிதானே இவ்வளவு தொலைவு கடந்து, என்னைக் காண வந்திருக் கிறீர்கள்? பிறகு ஏன் மவுனம்?'

'சுவாமி... தங்களின் திருவுருவப் படத்தை எங்கள் வீட்டு பூஜையறையில் என் தந்தையார் வழிபட்டு வந்திருக் கிறார். இப்போது அவர் இல்லை. நான், அவரது வழியில் உங்களின் திருவுருவப் படத்தை வழிபட்டு வருகி றேன். இப்போது உங்களை நேரில் பார்த்ததும் பரவச மாகிப் போனேன். எங்கள் தந்தையாரே தங்களை வழி பட்டு இருக்கிறார் என்றால், அவரின் தந்தையும் நிச்சயம் உங்களை வழிபட்டு இருப் பார். இப்போது, நானும் தங் களின் பக்தன் ஆகிவிட்டேன். அப்படியானால், தங்களின் வயது என்ன? உண்மையி லேயே தாங்கள் யார்?'

அதுவரை யாரும் கேட்காத அப்படியொரு கேள்வியை முதன்முறையாக கேட்டுவிட் டார் வேதாரண்யம் அன்பர்.

முதன்முறையாக தன்னை நோக்கிக் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு புன்னகையோடு பதில் சொன்னார் மகான்.

'மகனே! நீ சொல்வது சரிதான். நீ பார்க்கும் இந்த சாமிக்கு வயதே கிடையாது. இந்த நிமிடம் நினைத்தாலும் சரீரத்தை உதிர்த்துவிட்டு போய்விடும்.'
'சுவாமி தங்களுக்கு வய தாகவில்லை. ஆனால், எங் களுக்கு வயதாகிவருகிறதே..!'

'காலத்தை வென்றவர் களுக்கு வயதே கிடையாது...' என்று ரத்தினச்சுருக்கமாகச் சொன்ன மகான், பக்தர்கள் இருவருக்கும் ஆசிகூறி அனுப்பிவைத்தார்.

இப்படி, எங்கே, எந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார், அவரது வயது உண்மையிலேயே என்ன என்று யாரும் அறிய முடியாத வகையில், மக்களோடு மக் களாக வாழ்ந்து, நாளும் அற்புதங்கள் நிகழ்த்தி, அந்த அற்புதங்களை இன்றும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் அந்த மகான். அவர்தான்...சற்குரு சச்சிதானந்த சுவாமி கள்! இன்னும் தெளிவாக சொல்வது என்றால், ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சி தானந்த சற்குரு சுவாமிகள்.

மக்களை நல்வழிப்படுத் தவும், இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தவும் இவர் மேற்கொண்ட முயற்சி களையும், அதையொட்டி அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களையும் இந்தத் தொடரில் விரிவாகக் காண்போம்...

- தொடரும்...

0 comments:

Post a Comment