Saturday, 31 August 2013

'இந்தியர்கள் பாசத்தால் வியக்கிறேன்' -சன்னி லியோன்


ன்னி லியோன்- இந்தப் பெயரை அறியாத இந்திய இளைஞர்கள் இருக்க முடியாது. ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் கன்னியாக கொடிகட்டி பறந்தவர் சில்க் ஸ்மிதா என்றால், இவர்... இந்தியாவை மட்டுமின்றி, அகில உலக இளைஞர்களையும் தனது ÔதாராளமயமானÕ கவர்ச்சி யால் ஈர்த்து வருபவர்.

கூகுள் உள்ளிட்ட இணைய தளங்களில் அதிக அளவில் தேடப்பட்ட பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோ னுக்கு முதலிடம் கிடைத்தது சன்னி லியோனுக்கு சமீபத்தில் கிடைத்த பெருமை.

சரி, யார் இந்த சன்னி லியோன்?

கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்தான் சன்னி லியோன். சினிமா நடிகையாக வேண்டும் என்கிற கனவோடு களம் இறங்கிய இவருக்கு உடனடியாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. கவர்ச்சியான வேடங்களே கிடைத்தன. அதில் நடிக்க ஆரம்பித்தவர், ஒருகட்டத்தில் Ôஎல்லைதாண்டியÕ கவர்ச்சி யில் இறங்கினார்.

இன்னும் சொல்லப் போனால், நீலப்பட நடிகை யாகவே மாறிப்போனார். அவரது கவர்ச்சியான புகைப் படங்கள் இன்டர்நெட்டில் விதவிதமாக வலம்வர, யார் இந்த சன்னி லியோன் என்று இன்னும் விரிவாக தேட ஆரம்பித்தது,  இளைஞர் உலகம். அவரது புகழும் வெகுவிரைவாக பரவியது.
இந்நிலையில், இந்தி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடிவந்தது. ஜிஸ்ம் 2 என்ற இந்தி சினிமாவின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்துவைத்த இவர் மீது எல்லோரின் பார்வையும் விழுந்தது. அதனால், அடுத் தடுத்த படங்கள் இவருக்கு புக் ஆகின. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் சன்னி லியோன்.

வெட்கப்படவில்லை

இதுபற்றி அவர் நிருபர் களிடம் கூறியதாவது:

ஆபாச படங்களில் நடித்தவள்தான் நான். அதற் காக நான் வெட்கப்பட வில்லை. இப்போதுதான் நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங் கள் தேடிவர ஆரம்பித் துள்ளன. கவர்ச்சிக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பேனே தவிர ஆபாசத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன். என்னுடைய இந்த முடிவுக்கு இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனை அடுத்து, என் நடிப்பாற்றலை வெளிப் படுத்தும் படங்களுக்கான கதைகளை கேட்டு வருகிறேன். பிடித்த கதைகளை தேர்வு செய்கிறேன். என்னால் நல்ல நடிப்பையும் வெளிக்காட்ட முடியும். 2014-ம் ஆண்டு வரை எனது கால்ஷீட் புக் ஆகிவிட்டது. இனிவரும் படங்களை அதற்குப் பிறகு தான் நடித்துக் கொடுக்க முடியும்.

இப்போது இந்தி நடிகையாகிவிட்ட என்மீது இந்திய மக்கள் நிறைய அன்பு செலுத்துகிறார்கள். அவர்கள் காட்டும் அன்பு எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு பாலிவுட்டிலேயே நடிக்கலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.' இவ்வாறு அவர் கூறினார்.

பாலிவுட்டில் பரபரப்பாக ஓடிய 'தி டர்ட்டி பிக்ஸர்' படத்தை தயாரித்த ஏக்தா கபூரின் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சன்னி லியோன். நசிருதீன் ஷாவுடன் 'ஜாக்பாட்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழுக்கு வருகிறார்...

இந்தி சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து சன்னி லியோனின் வீட்டுக்கதவை தட்டுவதால், மும்பையில் வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். விரைவில் அவரை தமிழிலும் எதிர்பார்க்கலாம். கோலிவுட்டும் அவரை வரவேற்க இருகரம் கூப்பி காத்திருக்கிறது.

0 comments:

Post a Comment