ஆயுர்வேதம், சித்தா என்பது என்ன? மனிதன் நீண்ட ஆயுள் வாழ அவை எப்படி உதவுகின்றன? இந்தக் கேள்விகளுக்கு பதில ளிக்கிறார் பிரபல டாக்டர் டாக்டர் கே.ஏ.ராஜேந்திரன்...
ஆயுர்வேதமும் சித்தாவும் அடிப்படையில் ஒன்றேதான். அதை, அவரவர் மொழிகளில்-பகுதிகளில் உள்ளதால் அப்படியொரு தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது. சுருக் கமாக, ஸ்ரீவிஷ்ணுவின் அம்ச மான தன்வந்திரி பகவானை முன்னிறுத்தி, வைணவ அடிப் படையில் சம்ஸ்கிருதத்தில் பதியப்பட்டு, வடஇந்தியாவில் இருப்பது ஆயுர்வேதம்.
சிவபெருமானை முன்னி றுத்தி, சைவ சித்தாந்த அடிப் படையில் அகத்தியர் வழி தமிழில் பதியப்பட்டு, தென் இந்தியாவில் இருப்பது சித்த மருத்துவம். மற்றபடி, அடிப்படையில் மொத்த அறிவியலும் இரண்டிலும் பொதுவாகவே இருக்கிறது.
ஆயுர்வேதம்தான் தனி மனித ஒழுக்கத்தையும், தின சரி நடைமுறை பழக்கங்களை யும், நல்ல உணவு விஷயங் களையும் மிக விரிவாக விளக்கி கூறுகிறது. உடல் நலனுக்கு மனநலன் முக்கியம் என்பதை ஆயுர்வேதம் அடிப் படை விஷயமாக முன்னிறுத் துகிறது.
இந்து சதுர்யுகத்தில், இப் போது நடைபெறும் கலியுகம் வரைஉள்ள காலக்கட்டத்தில் திரேதா யுகத்தில் இருந்துதான் மனிதனுக்கு மருத்துவம் தேவைப்பட்டது. கிருதா யுகத்தில் அவனுக்கு மருத்து வம் தேவைப்படவில்லை.
மந்திரங்கள் மூலம் அந்த யுகத்தில் நோயின்றி ஒரு தேவனுடைய ஆற்றலுடன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்டவனாக வாழ்ந்திருந்தான் மனிதன். திரேதா யுகத்தின் மத்திய காலக்கட்டத்தில் இருந்து தான் மருத்துவமும், மணியும், மந்திரமும் கொண்டு, தனக்கு ஏற்பட்ட நோய்களை தீர்த்துக் கொண்டான்.
அதன்படி, ஆயுர்வேதம் நடைமுறைக்கு வந்து தோரா யமாக 15 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை விஷய ஞானம் உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆயுர் வேதம் என்பது கடல். இதைப் பற்றி துளி அளவு புரிந்து கொண்டதை இதுவரை கூறியுள்ளேன்.
இனி, அன்றாட வாழ்க்கை க்கும், ஆரோக்கிய வாழ்வுக் கும் ஆயுர்வேதம் கூறும் தினசரி கட்டளைகள் சில வற்றை சொல்கிறேன்.
காலையில் செய்ய வேண்டியவை :
விழித்தெழ வேண்டிய சரியான காலம் காலை 4 முதல் 6 மணிக்குள் உள்ள பிரம்ம முகூர்த்தமாக சரியான காலம். எழுந்ததும், முகம் கழுவி, குறைந்தது 5 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
தினமும் தலையில் எண் ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது. அதேபோல், தினமும் மூக்கில் 2 சொட்டு நல்லெண் ணெய் அல்லது அணு தைலம் உறிஞ்ச வேண்டும். உடலுக்கும் எண்ணெய் தேய்த்து, உடலை பிடித்துவிட்டு, அதன்பிறகு சிறிதுநேரம் தேக பயிற்சி செய்த பின்பே குளிப்பது முறையாகும்.
உடலுக்கு வெந்நீரும் தலை க்கு தண்ணீரும் நல்லது. உடற்பயிற்சி கடினமாக இருக்கக்கூடாது. களைப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் ஒரு மணி நேரம் காலார உலாவி வரலாம் (கடின உடற்பயிற்சி பிற்காலத் தில் சில நோய்களைத் தந்து விடும்). இதன்பிறகு பிராண யாமம், சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
சாப்பிட வேண்டிய உணவு வகைகள் :
சத்துமிக்க நெய், எண்ணெய் ஆகியவை அளவுடன் சேர்த்த அறுசுவை கொண்ட உண வாக காலை உணவு இருக்க வேண்டும். அந்த உணவை ஈரக்கால்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். உணவு உண்ணும்போது, கோப- தாபம் இல்லாமல் மன அமைதியுடன் உண்ண வேண்டும்.
முதலில் சிறிது இஞ்சியை உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். பிறகு, உணவில் முதலாவதாக இனிப்பும், அடுத்து புளிப்பும், முடிவில் கார்ப்பு, கசப்பு கலந்த உணவை சாப்பிட வேண்டும். அரை வயிற்றுக்கே உண்ண வேண்டும். கால் வயிறு தண்ணீர். மீதமுள்ள கால் வயிறு வாயுக்களுக்காக காலியாக விடவேண்டும்.
இளம்சூடான உணவே நல்லது. குடிக்கும் தண்ணீர் ஒருமுறை கொதிக்கவைக்கப் பட்டதாக இருக்க வேண்டும். ஒருமுறை கொதிக்கவைத்த தண்ணீரை மறுமுறை சூடு படுத்தினால் அதிக கெடுதலைத் தரும்.
சாப்பிட்ட உடனே உட் கார்ந்திருத்தல் அல்லது படுத்தல் ஆகியவை தவறு. சாப்பிட்டு முடித்தவுடன் 5 நிமிடம் காலார உலாவி வரவேண்டும். சாப்பிட்ட 30 நிமிடங்கள் வரை கடினமான வேலைகளை தவிர்த்து விடுங்கள்.
மண் பாத்திரங்களில் சமைப்பது மிகச் சிறந்தது. இரும்பு பாத்திரத்தில் சமைத் தால் கண் நோய், மூலம் போன்ற நோய்க்கு நல்லது. வெண்கலத்தில் சமைப்பது புத்தியை வளர்க்கும்.
தேன் மற்றும் நெய்யை சமஅளவு சேர்த்து சாப்பிடக் கூடாது. தேனை சூட வைத்தோ அல்லது சூடான பண்டங்களுடனோ சேர்த்து சாப்பிடக்கூடாது. சூடான தேகம் கொண்டவர்கள் தேனை தவிர்க்கவும்.
மேலும் தகவல்கள் அறிய...
டாக்டர் கே.ஏ.ராஜேந்திரன்,
போன் : 9344455511

0 comments:
Post a Comment