Saturday, 31 August 2013

ரூபி பில்டர்ஸ் சுதந்திர தின விழா



ளைஞர்கள் வரலாற்றை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியம். அதை அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மறந்துவிடக்கூடாது என்று ரூபி பில்டர்ஸ் சேர்மன் ஆர்.மனோகரன் பேசினார்.

சுதந்திர தின விழா

தாம்பரம் சேலையூரில் உள்ள ரூபி பில்டர்ஸ் தலைமை அலுவலகத்தில் நாட்டின் 67-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. ரூபி பில்டர்ஸ் சேர்மன் ஆர்.மனோகரன் தேசிய கொடியேற்றி வாழ்த் துரை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

இந்த சுதந்திரம் சும்மா கிடைத்துவிடவில்லை. அதைப் பெற நம் தலைவர்கள் செய்த தியாகங்கள் நிறைய. அனுபவித்த கஷ்டங்கள் பல. இதற்காக சிறைத் தண்ட னையை எல்லாம் தாங்கிக் கொண்டார்கள்.

மகாத்மா காந்தி, நேதாஜி, ஜவஹர்லால் நேரு, பெருந் தலைவர் காமராஜர் முதலான வர்கள் நமக்கு சுதந்திரம் கிடைக்க அரும் பாடுபட்ட முக்கியமானவர்களில் சிலர். அவர்களுக்கு இந்த நாளில் மரியாதை செய்வதும், அவர் களை நினைவுகூர்வதும் நம் தலையாய கடமை.

மாறிவரும் இன்றைய உலகில், இளைஞர்கள் வரலாற்றை மறந்துவிடக் கூடாது. புதிய தலைமுறை யினர் ஒவ்வொருவருக்கும் நம் தேசத் தலைவர்கள் பற்றியும், அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் நாம்தான் எடுத்துச்சொல்ல வேண்டும். இந்த மாதிரியான விழாக்களில் கலந்து கொண்டால்தான், வரலாறு நம் மனதில் நீங்காமல் பதிந்திருக்கும்.

இவ்வாறு ரூபி பில்டர்ஸ் சேர்மன் ஆர்.மனோகரன் பேசினார்.

பங்கேற்றவர்கள்

விழாவில் ரூபி பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ரூபி மனோகரன், இணை நிர்வாக இயக்குநர் அசோக், பொது மேலாளர்  பாலசுப்ரமணியம், தலைமை பாதுகாப்பு அலுவலர் ராஜசேகர், பொது மேலாளர் (டெக்னிகல்) வெங்கடேசன்,  துணை பொதுமேலாளர் (டெக்னிகல்) முத்தையா, உதவி பொதுமேலாளர் (நிர்வாகம்) மோகன், சீனியர் மார்கெட்டிங் மேலாளர் அஸ்வினி குணசேகர் மற்றும் ரூபி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment