வெற்றி தரும் 'அம்பானி பாணி'
அம்பானியை தெரியாத வர்கள் யாரும் இருக்க முடியாது. ரூ.15 ஆயிரம் முத லீட்டில் தொழிலை துவங்கி, அவர் கோடிகளை குவித்ததன் பின்னணியில் இருந்தவை, அவர் எடுத்த உறுதியான& தெளிவான முடிவுகளே! குழப்பமான சூழ்நிலையில் அவர் எந்த முடிவையும் எடுக்கமாட்டார். சில நேரங் களில் அதிரடியான முடிவு களையும் எடுப்பார்.
ஒருமுறை குஜராத்தின் நரோடாவில் உள்ள அம்பானி யின் ஆடை உற்பத்தி ஆலை யில் அதிநவீன இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு நிறுவப்பட்டன. அந்த இயந் திரங்களுக்கு துணை பாகங் கள் அவசரமாகத் தேவைப் பட்டன. ஜெர்மனியில் அவற்றை Ôஆர்டர்Õ செய்தார் அம்பானி. அவை அகமதா பாத் வந்து சேர்ந்தன. அவற்றை நரோடா கொண்டு வர, வாடகை லாரிகளுக்கு முயற்சி செய்தனர். ஆனால், வாடகை லாரிகள் கிடைத்த பாடில்லை.
அதுபற்றி அம்பானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. 'வாடகை க்குத்தானே லாரிகள் கிடைக்க வில்லை. சொந்தமாக விலை க்கு வாங்கலாம் இல்லையா' என்று கேட்டவர், அன்றே 2 லாரிகளை விலைக்கு வாங்கி, அவற்றில் இயந்திர பாகங் களை ஏற்றி, நரோடா வரச் செய்தார். இயந்திர பாகங்கள் நரோடா வந்து சேர்ந்ததும், வாங்கிய இரு லாரிகளையும் விற்றுவிட்டார் அம்பானி. லாரிகள் வாங்கிய செலவை யும், அவற்றை விற்ற செலவை யும், அதேபோல்... வாடகை லாரிகளில் இயந்திரங்களை கொண்டு வந்திருந்தால் ஆகியிருக்கும் வாடகை செலவையும் கூட்டிக்கழித்துப் பார்த்ததில், அம்பானிக்கு லாபமே கிடைத்திருந்தது.
இன்னொரு முறை, அரேபிய நாட்டில் இருந்து அம்பானிக்கு அழைப்பு வந்தது. 'எங்களது ரோஜா தோட்டத்தில் பரப்புவதற்கு மண் தேவை. அதை, இந்தியா வில் இருந்து அனுப்பிவைக்க முடியுமாÕ என்று கேட்டார் கள். Ôஇதெல்லாம் ஒரு தொழிலா' என்று அம்பானி யோசிக்கவில்லை.
'இன்னும் சில தினங்களில் இந்திய மண் உங்கள் ரோஜா தோட்டத்தில் இருக்கும்' என்று உறுதியாக சொல்லிவிட்டார். சொன் னது போலவே, கப்பலில் அரேபியாவுக்கு இந்தியாவில் இருந்து மண்ணை அனுப்பி வைத்து, மண்ணையும் பொன் ஆக்கிக் காட்டினார்.
அம்பானியின் இமாலய வளர்ச்சியின் பின்னணியில் இப்படி அவர் எடுத்த உறுதி யான, அதிரடி முடிவுகள் நிறைய உண்டு. அந்த முடிவு களை அவர் அவசர கோலத் தில் எடுக்கவில்லை. அந்த முடிவுகளை தெளிவாக எடுத் தார். அதேநேரம், மிகமிக விரைவில்! இதுதான், அம்பா னியின் வெற்றி ரகசியம்.
பில்டர்களும் முடிவெடுக் கும் விஷயத்தில் அம்பானி போன்றவர்களை முன்னு தாரணமாகக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு தெளிவான முடிவை உறுதியாக எடுக்க வேண்டும். கட்டுமானத் துறை யில் ஒரு பில்டரின் லாபத்தை நிர்ணயிப்பவை, கட்டுமானப் பொருட்களின் விலையே ற்றமே என்பதால், 'அம்பானி பாணி'யில் எப்படி திட்ட மிட்டு செயலாற்ற வேண்டும் என்பதை, பில்டராக நினைக்கும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத் திருக்க வேண்டும்.
இன்று, காய்கறிகளில் துவங்கி கட்டுமானப் பொருட்கள் வரையில், திடீர் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. காய்கறிகளின் விலையைக்கூட யூகித்து விடலாம். ஆனால், கட்டு மானப் பொருட்கள் அப்படி அல்ல. அவற்றின் விலைப் பட்டியலைப் பார்த்தால், எப்போதுமே ஏறுமுகம்தான்!
கட்டுமானத் துறையில் அதிகப்படியான விலை யேற்றம் காண்பது சிமெண்ட் மட்டும் அல்ல. செங்கல், ஜல்லி, இரும்புக் கம்பிகள், எலக்ட்ரிக் கேபிள்கள், டைல்ஸ், மார்பிள், பெயிண்ட் முதலான அனைத்துமே திடீர் திடீரென்று விலை ஏறக் கூடியது. பில்டர்கள், தங்கள் புராஜெக்டின் லாப சதவீத த்தை கணக்கிடும்போது, இந்த விலையேற்றத்தை முக்கிய மாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பில்டர்கள் ஒவ்வொருவரும், தங்களின் புராஜெக்ட்களுக்கு குறைந்தது 20 சதவீதம் லாபம் வைத்து, விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். சிலநேரங் களில், கட்டுமானப் பொருட் கள் அதிகமாக விலையேறும் போது, நாம் தீர்மானித்த 20 சதவீத லாபம் அடிபட்டுவிடும். அதனால், விலையேற்றத்தை கருத்தில் கொண்டு, புராஜெக்ட்டுகளை வேகமாக முடிக்க வேண்டும். ஒரு பில்டர், குறித்த காலத்துக்குள் புராஜெக்ட்டுகளை முடித் தால் மட்டுமே அவரால் விலையேற்றத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். மேலும் அவர், நஷ்டமும் அடையமாட்டார்.
அதேநேரம், குறித்த கால அளவுக்குள் அவரால் புராஜெக்டுகளை முடிக்க முடியவில்லை என்றாலும், சரியாகத் திட்டமிடாமல் பணிகளை மேற்கொண்டா லும், அவரால் விலையேற்ற வில்லனிடம் இருந்து தப்பிக்க முடியாது. அவர் நஷ்டமே அடைவார். குறைந்த லாப வரம்பை வைத்துக்கொண்டு, குறித்த காலத்துக்குள் கட்டு மானப் பணிகளை முடிக்காத எல்லா பில்டர்களுமே நிச்சயம் இந்த பிரச்னைகளை சந்திப்பார்கள்.
இந்தப் பிரச்னையை சமாளிக்க வேண்டும் என்றால், சூழ்நிலைக்கு ஏற்றவாறு லாப வரம்பை நிர்ணயிக்க வேண்டும். அடுத்த 6 மாதத் துக்குள் புராஜெக்ட்டை முடித்துவிடுவோம் என்றால் ஒரு லாப வரம்பையும், புராஜெக்ட் முடிய மேலும் கால அவகாசம் தேவைப்படும் என்கிற பட்சத்தில், லாப வரம்பை கூடுதலாகவும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
சில பில்டர்கள், வாடிக்கை யாளர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக குறைந்த லாப வரம்பை நிர்ணயித்துக் கொள் வார்கள். அவர்கள், கட்டு மானப் பொருட்கள் விலை யேறும்போது ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.
விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால், அதை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்கிற சூட்சுமத்தை பில்டராக நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம். மரம் போன்ற சில கட்டுமானப் பொருட்களை, அவற்றின் விலை சற்று குறைவாக இருக்கும்போதே முன்பணம் செலுத்தி ஆர்டர் செய்துகொள்வது புத்திசாலித் தனம். அவ்வாறு, நாம் முன் னரே ஆர்டர் செய்திருந்தால், நாம் கேட்கும் நேரத்தில் சம்பந்தப்பட்ட வியாபாரி, அந்த பொருட்களை நமக்கு சப்ளை செய்து விடுவார்.
மரத்தை சேமித்து வைப் பதில் தவறில்லை. ஆனால், சிமெண்ட் போன்ற பொருட் களை குறிப்பிட்ட காலம் வரைதான் சேமித்துவைக்க முடியும். அதிகபட்சம் 30 நாட் கள்வரை அவற்றை சேமிக்க லாம். அதனால், சிமெண்டில் அதிகம் முதலீடு செய்ய முடியாது. என்னதான் பார்த்து பார்த்து திட்ட மிட்டாலும், சில நேரங்களில் திடீர் செலவுகள் ஏற்பட்டு விடுவது உண்டு. அதை சமாளிப்பது எப்படி?
- வீடு கட்டுவோம்...

0 comments:
Post a Comment