Saturday, 12 April 2014

'இராவணன்' குழும நிறுவனர் பிறந்தநாள் விழா

புகழ்பெற்ற இராவணன் குழுமங்கள் மற்றும் சிம்மப் பேரவையின் நிறுவனரான டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாரின் பிறந்தநாள் விழா சேலையூரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இராவணன் குழுமம்


சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களின் சமையலிலும் இன் சுவை சேர்க்கும் இராவணன் மசாலா, இராவணன் குழுமங்கள், சிம்மப் பேரவை ஆகியவற்றின் நிறுவனரும், நாடார் சமுதாய பிரமுக ருமான டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாரின் பிறந்த நாள் விழா, சேலையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

விழாவில் டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாருக்கு  ஆளுயர மாலையும், கிரீடமும் அணிவிக்கப்பட்டது. நாடார் சங்கப் பிரமுகர்கள், சிம்மப் பேரவை நிர்வாகிகள் என்று பலரும், டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்திய பிரமுகர்கள்


விழாவில் சிம்மப் பேரவை மாநில பொதுச் செயலாளர் அழகுவேல் தங்கராஜ், மாநில இளைஞரணி செயலாளர் ராவணன், மாநில துணைச் செயலாளர் பூவை ரஞ்சித் குமார், மாநில அமைப்புச் செயலாளர் நாஞ்சில் சசிகுமார், மாநில வர்த்தக அணி செயலாளர் க.ராதா கிருஷ்ணன், நடிகர் விஜய சிரஞ்ஜீவி, தலைமை நிலையச் செயலாளர் தங்க பெருமாள், 'சென்னை மெயில்' ஆசிரியர் எம்.ஜெயமுருகானந்தம், 'நாடார் குரல்' மாத இதழ் ஆசிரியர் 'மின்னல்' ஸ்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட டாக்டர் ஆ.இர.இராமசாமி அனைவரு க்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

0 comments:

Post a Comment