Saturday, 12 October 2013

சச்சின் இடத்தை நிரப்பப்போவது யார்?

 

எஸ்.எம்.ஆனந்த்

ர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித் துள்ள இந்தியாவின் மாஸ் டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் முடிவு, இந்திய கிரிக்கெட் ரசிகர் களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேநேரம், அடுத்த சச்சினாக உருவாகக் கூடிய மிகச்சிறந்த பேட்ஸ் மேனை அவர்கள் ஆவ லோடு எதிர்பார்க்கிறார்கள்.

1989&ம் ஆண்டு நவம்பர் 15&ம் தேதி, கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் சச்சின் அறிமுகம் ஆனார். இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளிலும், 463 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்று அதிரடி ஆட்டம் ஆடியுள் ளார் சச்சின். இதுவரையிலான டெஸ்ட் போட்டிகளில் 15,837 ரன்களும், ஒருநாள் போட்டி களில் 18,426 ரன்களும் குவித்துள்ளார். பெற்றுள்ள சதங்கள், டெஸ்ட் போட்டி களில் 51; ஒருநாள் போட்டி களில் 49.

சச்சினின் இந்த சாதனைகள் மேலும் தொடரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப் பட்ட நிலையில்தான் அவர் தனது ஓய்வுபெறும் முடிவை அறிவித்துள்ளார்.

'இந்தியாவுக்காக என்னு டைய வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட வேண் டும் என்பதுதான் என் கனவு.கடந்த 24 ஆண்டுகளாக இந்த கனவுகளுடன்தான் வாழ்ந் தேன். என்ன இருந்தாலும், ஒருநாள், போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுதானே ஆக வேண்டும்? அப்படி ஓய்வுபெற சரியான தருணம் இதுதான் என்று என் மனம் கூறியது. அதன்படி, 200-வது டெஸ்ட் போட்டியில் விளை யாடி முடித்ததும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறேன்' என்று கூறியுள்ளார் சச்சின்.

அவரது இந்த முடிவு இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சச்சின் இல் லாத இந்திய அணியை அவர் களால் நினைத்துக்கூட பார் க்க முடியவில்லை. ஆனாலும், சச்சினாக இருந்தாலும் அல் லது வேறு எந்த வீரராக இருந் தாலும், ஒருகட்டத்தில் ஓய்வு பெற்றுதான் ஆக வேண்டும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டாலும், அவர்களது மனம் சமாதானம் ஆக வில்லை. சச்சின் இல்லாத இந் திய அணியின் வெற்றி வாய் ப்பு எப்படி இருக்கும் என்று அவர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

இந்திய அணியின் முன் னாள் கேப்டன் கவாஸ்கர் இதுபற்றி கூறுகையில், 'சச்சினின் ஓய்வு அறிவிப்பால், இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய ஓட்டையே விழுந்துவிட்டது. இதை உடனடியாக சரிசெய் வது சிரமம். கங்குலி, லட்சு மண், டிராவிட் ஓய்வுபெறும் போது என்ன நடந்ததோ, அதுதான் இப்போதும் நடந் துள்ளது. சச்சின் இடத்தை நிரப்ப சிறிது காலம் பிடிக்கும்' என்று தெரிவித்தார்.

இலங்கை அணியின் முன் னாள் சுழல் பந்து வீச்சாளர் முரளிதரன் கூறுகையில், 'சச்சின் ஓய்வுபெறும் நாள், உலக மற்றும் இந்திய கிரிக் கெட் அணிக்கு மோசமான நாள்' என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சச்சினை போன்ற இன் னொரு வீரர் இந்திய அணிக்கு அவசியம் தேவை. ஆனால், அந்த இடத்தை நிரப்ப, கவாஸ்கர் சொன்னது போலவே சிறிது காலம் ஆகும் என்பதுதான் உண்மை. அது வரை, இன்னொரு சச்சி னுக்காக ரசிகர்கள் பிரார்த் தனை செய்வதும் நல்லது தான். அதேநேரம், 200-வது டெஸ்ட் போட்டி வரையிலும் சச்சினின் சாதனை பயணம் தொடரும் என்று நம்புவோம்.

0 comments:

Post a Comment