Friday, 11 October 2013

'இவர்தான் நாங்கள் விரும்பும் பிரதமர்'


எஸ்.எம்.ஆனந்த்

டுத்த பிரதமர் மோடியா? ராகுலா? - இன் றைய தேதியில், பட்டணம் முதல் பட்டிக்காடு வரை பர பரப்பாக விவாதிக்கப்படும் கேள்வி இதுதான். பாரதீய ஜனதா சார்பில், குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக் கப்பட்டுவிட்டார். ஆனால், காங்கிரஸ் சார்பில் ராகுல் தான் பிரதமர் வேட்பாளரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. அத னால், சுறுசுறுப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மோடி.

காங்கிரஸின் பிரதமர் வேட் பாளர் ராகுல்காந்திதான் என்று உறுதியாக சொல்லப் பட்டாலும், அதற்கான அறி விப்பு தாமதமாகவே வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைய சூழ்நிலை யில், காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவரே இந்திய பிரத மராக வர வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது. கடந்த காலங் களில் பெரும்பாலாக நடந்த தும் இதுதான். ஆனாலும், இந்திய பிரதமராக ஒருவரை தேர்வு செய்ய ஓட்டு போடும் மக்கள், தாங்கள் எதிர்பார்க் கும் பிரதமர் எந்த மாதிரி செயல்பட வேண்டும் என்று நிச்சயம் ஆசைப்படுவார்கள் தானே? இதுபற்றி அறிய நம் பகுதி மக்கள் சிலரிடம் பேசினோம்.

எஸ்.பிரகாஷ், இயற்கை மருத்துவர், சிட்லபாக்கம்: என்னைப் பொருத்தவரை தனிமனிதனுடைய சுயமரி யாதையையும் கவுரவத்தையும் தன்னுடைய சுயமரியாதை யாகவும் கவுரவமாகவும் கருதும் நபர்தான் அடுத்த இந்திய பிரதமராக வர வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் தைரியமான- தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். நம் நாட்டின் இறையாண்மைக்கே சோதனை ஏற்படும் எனில், அதிரடி நடவடிக்கை எடுக்க அவர் தயங்கவே கூடாது. சமீபத்தில் இந்திய எல்லையில் நமது ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொடூரமாக கொன்றனர். இதற்கு தக்க பதிலடி கொடுக் கப்படவில்லை. இந்த மாதிரி யான நேரங்களில் அதிரடி நடவடிக்கை எடுப்பவர்தான் சிறந்த பிரதமராக இருக்க முடி யும். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், நம் சுதந் திரத்துக்காக பாடுபட்ட மாவீரர் நேதாஜி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரை குறிப்பிட லாம். இவர்களைப் போன்ற வர்கள்தான் நம் நாட்டுக்குத் தேவை.

ஆர்.அன்பழகன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர், சந்தோஷபுரம்: இந்தியா கூடிய விரைவில் வல்லரசு நாடாக உள்ள இன்றைய சூழ்நிலையில், அடுத்த இந்திய பிரதமராக வரக்கூடியவர் மிகவும் திறமை யானவராக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் விலை வாசி கூடிக்கொண்டே போகிறது. நடுத்தர மக்களும், ஏழைகளும் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கூடியவராக அவர் இருக்க வேண்டும். அதோடு, மக்கள் எந்தப் பிரச்னையை சந்தித்தாலும், அதை தன்னுடைய பிரச்னை யாக கருதி, தகுந்த நடவடிக் கையை உடனே எடுப்பராக இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, சிறுவயது முதலே மக்களை நேசிக்கத் தெரிந்தவர்தான் சிறந்த பிரத மராக இருக்க முடியும். எந்த வொரு பிரச்னையையும் ஆறிப்போகவிடாமல் செய் யும் 'ஆக்டிவான' பிரதமர் தான் நம் நாட்டுக்குத் தேவை.

சாந்தி சண்முகம், தாளாளர், லிட்டில் ஐன்ஸ்டீன்ஸ் குழந் தைகள் பள்ளி, செம்பாக்கம்: என்னுடைய பார்வையில், தான், தன் குடும்பம் என்று இல்லாது, ஒட்டுமொத்த மக்களையும் தன் குடும்பமாக பார்க்கக்கூடியவர்தான் சிறந்த பிரதமராக இருக்க முடியும். பெருந்தலைவர் காமராஜர் போன்ற, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தன்னை அவர் முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். சுயநலம் கொஞ்சம்கூட இருக்கக்கூடாது.

சமீப நாட்களில், பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் செய்திகள் நாளிதழ் களில் அடிக்கடி தென்படுகின் றன. இது, பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத நிலையையே காட்டுகிறது. பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகள் இனியும் தொடராமல் தடுத்து நிறுத்து வதோடு, குற்றவாளிக்கு கடும் தண்டனை தர வேண்டும். அதுவும், Ôஇந்த தப்பை நான் ஏன் பண்ணினேன்Õ என்று அவன் தன் வாழ்நாள் முழுக்க வருந்த வேண்டும். அப்படி யான தண்டனைகளை தைரி யமாக வழங்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளில் உடனடியாக தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை எடுப்பவர்தான் சிறந்த பிரத மராக இருக்க முடியும்.

ஜே.ரவீந்திரன், சின்னத் திரை நடிகர், சிட்லபாக்கம்:
இப்போதெல்லாம் அரசிய லில் ஊழல் அதிகமாகி விட்டது. முதலில் இதை ஒழிக்க வேண்டும். ஊழலை ஒழித்தால் மட்டுமே நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதால், பிரத மராக வரக்கூடியவர் இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி, அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், உலக அமைதிக்காக பாடுபடக்கூடியவராகவும் இருக்க வேண்டும். வயதான பிரதமர்கள் பலரை பார்த்துவிட்டோம். அதில், மாற்ற வேண்டும். மிகச் சிறந்த நிர்வாகத் திறமை கொண்ட புதிய பிரதமரே நம் நாட்டுக்கு இப்போதைக்குத் தேவை.

மக்கள் ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பும் பிரதமர் குறித்த எண்ணங்கள், ஏக்க ங்கள் பல இருந்தாலும், நாட்டுக்கு நல்லது செய்பவர் யாராக இருந்தாலும் அவரை தாராள மாக பிரதமராக தேர்வு செய்ய லாம். அவ்வாறு தேர்வாகும் பிரதமர், விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் அத்தி யாவசிய பிரச்னைகளை உட னடியாக தீர்ப்பது அவசியம்.

0 comments:

Post a Comment