Saturday, 15 March 2014

நீங்களும் பில்டர் ஆகலாம்..! - 9


ன்று பலரும் செய்தித் தாள் வாசிக்கிறோம், புத்தகம் படிக்கிறோம். இந்த நல்ல பழக்கம், பல்வேறு நேரங்களில் நமக்கு உதவுகிறது. இந்தப் பழக்கம், நம் அறிவை இன்னும் பட்டை தீட்டுவதுடன், உலக அளவில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ளவும் உதவுகிறது.

1825-களில், அமெரிக்கா வில் வாழ்ந்த அந்த சிறுவனு க்கும் புத்தகம் வாசிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், அவனோ மிகவும் ஏழை. தச்சு வேலை செய்து வந்த அவனது தந்தையால், அவனுக்கு எப்படி பணம் தந்து புத்தகம் வாங்கிக் கொடுக்க முடியும்? ஆனாலும், அந்தச் சிறுவனிடம் அறிவு தாகம் நிரம்பி வழிந்தது. அதனால், பக்கத்து நகரத்துக்கு அடிக்கடி நடந்து சென்று, அங்குள்ள, வசதி படைத்தவர் களின் வீடுகளில், புத்தகங் களை படிக்கத் தருமாறு கெஞ்சிக் கேட்பான். பலர், சிறுவனை விரட்டிவிடுவார் கள். சிலர், இரக்கப்பட்டு அவனுக்கு ஏதாவது ஒரு புத்தகத்தை கொடுப்பார்கள். புத்தகத்துடன் வீடு திரும்பும் சிறுவன், ஒன்று அல்லது இரண்டு நாளில் புத்தகம் முழு வதையும் படித்து முடித்து, ஏற்கனவே சொன்னபடி, புத்த கத்தை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்துவிடுவான்.

ஒருநாள், 'ஜனாதிபதி வாஷிங்டன்' என்ற புத்தக த்தை ஒருவரிடமிருந்து வாங்கி வந்தான். அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித் தந்தவரும், ஐக்கிய அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியுமான ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ் க்கை வரலாற்றுப் புத்தகம் அது. மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அன்று இரவு வெகுநேரம் புத்தகத்தை படித்தான் சிறுவன்.  ஒரு கட்டத்தில் விளக்கில் இருந்த எண்ணெய் தீர்ந்து, விளக்கு அணையும் நிலைக்கு வர... தனது மிகச்சிறிய வீட்டின் ஜன்னல் ஓரத்தில் புத்தகத்தை வைத்துவிட்டு தூங்கி விட்டான்.

காலையில் சிறுவன் கண் விழித்தபோது, புத்தகத்தின் நிலையைக் கண்டு திடுக் கிட்டான். இரவு பெய்த மழை யில் அந்தப் புத்தகம் நன்றாக நனைந்துபோய் இருந்தது. புத்தகத்தை இரவல் தந்தவர் திட்டுவாரே என்று பயந்த சிறுவன், வெயிலில் அதை காயவைத்தான். ஆனாலும், பழைய நிலைக்கு வராத புத்தகத்தை, உரியவரிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றான். நடந்ததைக் கூறி புத்தகத்தை ஒப்படைத்த தோடு, மன்னிப்பும் கேட் டான். ஆனால், புத்தகம் கொடுத்தவரோ, 'புத்தகத்துக் கான தொகையை கொடுத்து விட்டு, புத்தகத்தை எடுத்துக் கொண்டு போ. இல்லை யென்றால், என்னுடைய வயலில் நீ 3 நாட்களுக்கு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்' என்று ஒரே யடியாக சொல்லிவிட்டார்.

ஏழைச் சிறுவனுக்கு வேறு வழி தெரியவில்லை. புத்த கத்தை தந்தவர் சொன்னபடி, அவரது வயலில் 3 நாட்கள் தொடர்ந்து வேலை பார்த் தான். அதற்கு கூலியாக, 'ஜனாதிபதி வாஷிங்டன்' புத்தகத்தை அவனுக்குத் தந்தார், அதற்கு சொந்தக்காரர்.

முதன் முதலாக ஒரு புத்தகம் தனக்கு சொந்தமானபோது, அந்த சிறுவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தக் கூத்தாடியவன், அடிக்கடி அந்தப் புத்தகத்தை படித்தான். அதனால்தான் என்னவோ, அவன் பிற்காலத் தில் அமெரிக்க ஜனாதிபதி யாகவே ஆனான். அவர்தான், தோல்விகளைக் கண்டு துவளாத, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன்.

புத்தகங்கள், செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் ஒருவரிடம் இருந்தால், அவரால் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர முடியும் என்பதற்கு இந்த உண்மைச் சம்பவமே மிகச் சிறந்த உதாரணம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், பில்டர்கள் ஒவ்வொருவரும் நாட்டு நடப்புகளையும், அன்றைய சந்தை நிலவரங் களையும் உடனுக்குடன் அறிந்து வைத்திருப்பது மிகமிக அவசியம்.

இப்போதெல்லாம், விலை வாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது என்று எல்லாத் தரப்பில் இருந்தும் குரல் எதிரொலிக் கிறது. கட்டுமானத் துறை யிலும் அதே விலையேற்றம் தான்! எப்போதெல்லாம், எப்படியெல்லாம் கட்டு மானப் பொருட்கள் விலை உயர்கிறது என்பதை ஒரு பில்டர் நன்கு அறிந்து வைத்திருந்தால்தான், அவர் இந்தத் துறையில் தொடர்ந்து சிறப்பாக இயங்க முடியும். ஒரு சிறந்த பில்டர், அடுத்த 10 மாதங்களில் கட்டுமானப் பொருட்களின் விலையில் எந்தமாதிரியான மாறுதல்கள் ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்திருப்பது அவசியம். இதை அறிய வேண்டும் என்றால், தினமும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் களை தவறாமல் படிக்க வேண்டும்.

'அடுத்த ஆண்டு, வெளி நாட்டுக்கு 6 லட்சம் டன் சிமெண்ட் ஏற்றுமதி செய்ய அரசு திட்டமிட்டு இருக்கிறது' என்று, ஒரு நாளிதழில் செய்தி வெளியாகி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மற்ற வர்களுக்கு, இது பத்தோடு பதினொன்றான செய்தியாக இருக்கலாம். ஆனால், பில்டர் களுக்கு அப்படியில்லை. அவர்களுக்கு, இதுதான் எட்டுக்காலம், அதாவது... தலைப்புச் செய்தி!

கட்டுமானத் துறையில் சிமெண்ட் இல்லாமல் எதை யும் செய்ய முடியாது. அத னால்தான், சிமெண்ட் நிறுவ னங்கள் அதன் விலையை உயர்த்திக் கொண்டே போகின்றன.  சிலநேரங்களில், சிமெண்டே கிடைக்காதது போன்ற செயற்கை தட்டுப் பாடுகளும் உருவாக்கப்பட்டு, சிமெண்ட் விலை உயர்த்தப் படுகிறது.

சிமெண்டின் தேவை இப்படி இருக்க... திடீரென்று, 6 லட்சம் டன் சிமெண்ட் ஏற்றுமதி செய்யத் திட்டம் இருக்கிறது என்றால், பில்டர் கள் உஷாராகிவிட வேண்டும். விரைவில், எப்படியும் சிமெண்ட் தட்டுப்பாடு வரும் என்பதை அறிந்து, அப்படி யொரு நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே, அதை தேவை யான அளவு கொள்முதல் செய்து வைத்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.

சிமெண்ட் மட்டுமல்ல, வேறுசில விலையேற்றங்களும் ஒரு பில்டரை பெரிய அளவில் பாதிப்படையச் செய்கிறது. அவை என்ன?

- வீடு கட்டுவோம்...

0 comments:

Post a Comment