Wednesday, 19 March 2014

ஜாதகம் மூடநம்பிக்கையா?

கேள்வி : ஆன்மிகம் என்பது நம்பிக்கை, ஜாதகம் என்பது மூடநம்பிக்கை என்று என் நண்பன் சொல்கிறான். இதில், எது உண்மை? (என்.ரமேஷ், செம்பாக்கம்)

பதில் : ஆன்மிகம், ஜோதிடம் மட்டுமின்றி எல்லா சாஸ்திரங்களுக்கும் ஓர் அறிவியல் சார்ந்த விஷயங் களும் பலன்களும் இருக்கின் றன.  அவைகளை சரியாக புரிந்துகொண்டு சரியாகப் பயன்படுத்தினால் எதுவும் மூடநம்பிக்கை அல்ல.

ஆன்மிகம் என்பது, ஒருவரது ஆன்மா சம்பந்தப் பட்ட விஷயம்.  ஜோதிட சாஸ்திரமும் ஒருவருடைய ஆன்மாவை மையப்படுத்தி, அவரது முன் ஜென்மம், பிறப்பு, வாழ்வு, இறப்பு, அடுத்த ஜென்மம் போன்றவை களை அறிவதற்கு, நல்ல ஞான திருஷ்டி பெற்ற ரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

எப்படி கிரகங்களின் பாதிப்பு பூமியை தாக்கு கிறதோ, அப்படியே பூமியில் உள்ள எல்லா ஜீவராசி களையும், பொருட் களையும் பாதிக் கின்றது. அமா வாசை, பௌர்ணமி நாட்களில் கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும். செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் இருக்கும்போது தீயினால் பாதிப்பு ஏற்படு கின்றது.  சூரியனின் வெப்பம் தாக்குகின்றது. சனி கிரகத்தின் சுழற்சி பல கோணங்களில் பூமியை தாக்குகிறது.  இந்த அனைத்து விஷயங்களும் மனிதனின் உடல்  நிலையிலும், மனதளவிலும் பெரும் மாற்றங் களை நிகழ்த்துவது அசைக்க முடியாத உண்மை.

கடவுள் வழிபாட்டைக்கூட சிலர் மூடநம்பிக்கை என்று சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். மொத்தத்தில் ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கும் போதுதான் இறைவனையும், ஆன்மிகத்தையும், ஜோதிடத் தையும் நாடிச் செல்கிறான். அவன் நினைப்பதெல்லாம் நடந்து வசதியாக இருக்கும் போது, ஏதோ... தானே இந்த உலகையெல்லாம் படைத்தது போலவும், அவன் என்றும்

இதுதான் உண்மை!
அழியமாட்டான் என்ற கர்வம் போர்த்திய மூட நம்பிக்கையுடன் கடவுளையும், ஆன்மிகத்தையும், ஜோதிட சாஸ்திரத்தையும், தனக் குள்ளே உள்ள பயத்தை வெளிக்காட்டாமல், மற்ற வர்களை ஏளனம் செய்து கொண்டிருப்பான்.

மேற்கண்ட கேள்விக்கு பதில் அளித்தவர் :
'ஜோதிட நிர்மதி' கோபாலகிருஷ்ணன், செல் : 9176347274


-  மார்ச் 2 - 15, 2014, சென்னை மெயில் செய்தித்தாளில் இருந்து...

0 comments:

Post a Comment