Saturday, 15 March 2014

நண்பர்கள் நற்பணி மன்ற வெள்ளி விழா

 

சேலையூர் நண்பர்கள் விளையாட்டு மற்றும் நற்பணி மன்றத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா சேலையூரில் நடைபெற்றது.

வெள்ளி விழா


சேலையூரில் இயங்கிவரும் நண்பர்கள் விளையாட்டு மற்றும் நற்பணி மன்றத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா சேலையூர் ஸ்ரீதேவி மஹாலில் நடைபெற்றது. மன்றத் தலைவர் எஸ்.ரமேஷ் விழாவுக்கு தலைமை தாங்கினார். செய லாளர் எம்.சீனிவாசகுமார் வரவேற்று பேசினார். மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆர்.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

விழாவை, ஸ்ரீராம் நகர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல் நிலைப்பள்ளியின் முதல்வர் என்.தங்கம் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வித்யா மந்திர் நாட்டிய கலா கேந்ரா மாணவிகளின் பரதம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகளின் இந்த கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இதையடுத்து, 'வெற்றிக்கான வழிகள்' எனும் தலைப்பில் மெய்யுணர்வு மையத்தின் நிறுவனர் க.மு.சிவசுவாமி சிறப்புரை ஆற்றினார். விழா மலரை நீதிபதி க.ஞானப் பிரகாசம் வெளியிட, சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் முனைவர் ஜேம்ஸ் சகாரியா பெற்றுக் கொண்டார்.

பங்கேற்றவர்கள்

சிறப்பு விருந்தினர்களாக கேம்ப்ரோடு வட்டார வியா பாரிகள் சங்கத் தலைவர் சந்தோஷ் பி.செல்லையா, சந்தோஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சந்தோஷ் சி.சந்தான குமார், தொழிலதிபர்கள் ஜெ.ஜெயமோகன், வி.பி. ஆனந்த், வி.தர்மராஜா, பாக்கியம் பிரஸ் டி.ஆபிரகாம், கிரைஸ்ட் கிருபா ஆங்கிலப் பள்ளி முதல்வர் ஆரோக்கிய ராணி உள்ளிட்ட பலர் விழா வில் கலந்துகொண்டனர்.

நிறைவில், நற்பணி மன்ற பொருளாளர் வி.ராமமூர்த்தி நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment