Tuesday, 31 December 2013

நீங்களும் பில்டர் ஆகலாம்! - அத்தியாயம் 3

 - டாக்டர் ரூபி ஆர்.மனோகரன் - 
 
ண்டன் மாநகரில் உலகப் புகழ்பெற்ற ஓவியக் கண்காட்சி நடந்துகொண்டி ருந்தது. அதை பார்வையிட பல்வேறு நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்த னர். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஓவியங்களை விமர்சனம் செய்யும் சர்வதேச விமர்சகர்களும் ஏராளமாக வந்து குவிந்திருந்தனர்.

கண்காட்சியில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஓவியர்கள், தங்கள் கைவண்ணத்தில் உருவான விதவிதமான ஓவியங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். ஆயிரக் கணக்கான ஓவியங்கள் கண் காட்சியில் இடம்பெற்றிருந் தாலும் ஒரேயொரு ஓவியம் மட்டும் எல்லோரது கவனத் தையும் ஈர்த்தது.

அது, மேகக்கூட்டத்தில் இருந்து தேவதை ஒருத்தி வெளிப்படுவதைப் போன்ற ஓவியம். அதைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோரும் விழிகள் விரிய வியப்பில் நின்றிருந்தனர். ஓவிய விமர்ச கர்களும் அந்த ஓவியத்தை ஆஹா... ஓஹோ... என்று புகழ்ந்து தள்ளினர். ‘இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற மிகச்சிறந்த ஓவியம் இது’ என்று ‘சர்டிபிகேட்’ கொடுத் தனர். பொதுமக்களும் அவர் கள் கூறிய ஓவியத்தை மிகச் சிறந்த ஓவியமாக ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், கண்காட்சியை பார்வையிட வந்த பொது மக்களில் ஒரேயொருத்தர் மட்டும் அந்த ஓவியத்தை பார்த்ததோடு, பலமான சிந்த னையில் மூழ்கியிருந்தார். பிறகு அவர் என்ன நினைத்தாரோ, கண்காட்சி பொறுப் பாளரை அழைத்து, ‘இந்த ஓவியத்தை எல்லோரும் பார்த்து வியக்கிறார்கள். ஆனால், எனக்கு என்னவோ இந்த ஓவியம் தலைகீழாக மாட்டப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது. எது உண்மை என்பதை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்’ என்றார் அவர்.

கண்காட்சி பொறுப்பா ளரோ, அந்த நபர் பொய் சொல்வதாக நினைத்தார். ‘சர்வதேச ஓவிய விமர்சகர்கள் எல்லோரும் அந்த ஓவியத்தை பார்த்து, வியந்து பாராட்டு கிறார்கள். ஆனால், சாதாரண குடியானவனான இவர், அந்த ஓவியமே தலைகீழாக இருக் கிறது என்று சொல்கிறாரே’ என்று கோபம் கொண்டார். ஆனால், அந்த நபரோ, எல்லோரையும் கவர்ந்த அந்த ஓவியம் தலைகீழாகவே மாட் டப்பட்டு இருக்கிறது என்று திரும்பத் திரும்ப சொன்னார்.

உடனே, கண்காட்சி பொறுப்பாளர், அந்த ஓவி யத்தை அனுப்பிவைத்த ஓவி யரின் குறிப்புகளை வைத்து பார்த்தபோது, ஓவியம் தலை கீழாக மாட்டப்பட்டு இருப் பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில், ஓவியத் தின் அழகை வியந்து புகழ்ந்த சர்வதேச ஓவிய விமர்சகர் களுக்கே, அந்த ஓவியம் தலைகீழாக இருக்கும் விஷயம் தெரியவில்லை. அந்த விவரம் கூட தெரியாமல், புகழ்பெற்ற விமர்சகர்களே சொல்லி விட்டார்கள் என்பதற்காக, அந்த ஓவியத்தை மிகச்சிறந்த ஓவியமாக நினைத்தார்கள் மக்கள். ஆனால், உண்மையோ வேறு மாதிரியாக இருந்தது.

அடுத்தவர்கள் சொன்னார் கள் என்பதற்காக, ஒன்றை உண்மை என்று ஏற்றுக் கொள்வது தவறு என்பது இந்த உண்மைச் சம்பவத்தில் இருந்து தெரியவருகிறது. சுய சிந்தனை இல்லாதவர்கள் உண்மையை காண முடியாது என்கிற உண்மையும் இதன் மூலம் தெரியவருகிறது.

இது, புரமோட்டர்கள் நிலம் தேர்வு செய்யும் லொகேஷனுக் கும் பொருந்தும். விரைவில் இந்த பகுதி வளர்ச்சிபெற்று விடும் என்று யாரோ சொன் னார்கள் என்பதற்காக எக் காரணத்தைக் கொண்டும் நிலத்தை தேர்வு செய்துவிடக் கூடாது.

சினிமாவையே எடுத்துக் கொள்ளுங்கள். படப் பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாக, சரியான லொகே ஷனை தேர்வு செய்வதற் காகவே லட்சங்கள் தொடங்கி சில கோடிகள் வரை செலவு செய்கிறார்கள். சரியான லொகேஷன் அமையவில்லை என்றால், ஒரு சினிமாவை தரமான சினிமாவாக உரு வாக்க முடியாது. இது, சினிமாவை உருவாக்கும் டைரக்டருக்கு மட்டுமல்ல, நிலத்தை தேர்வு செய்து, அதில் வீடுகள் கட்டும் பில்டருக்கும் பொருந்தும்.

சில பில்டர்கள் இருக்கிறார் கள்; நிலம் மலிவாக கிடைக் கிறது என்றும், உறவினர்கள், நண்பர்கள்தானே விற்கிறார் கள் என்றும் நினைத்து, பயன் படுத்தாத நிலத்தை வாங்கி விடுவார்கள். கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு வீடு களோ, ஆள் நடமாட்டமோ இருக்காது. அப்படிப்பட்ட நிலத்தில் உடனடியாக வீடுகள் கட்ட முடியாது. பயன்படுத்த முடியாத நிலத்தில் நாம் போட்ட முதலீடு அப்படியே கிடக்கும். அதனால், புராஜெக்டை உடனடியாக தொடங்கக்கூடிய நிலத்தையே தேர்வு செய்து வாங்க வேண்டும். இந்த விஷயத்தில் நாம் ‘கோட்டை’விடாமல் இருந்தால்தான் கோட்டை போன்ற வீடுகளைக் கட்டி விற்க முடியும்.

சரியான நிலத்தை தேர்வு செய்வதற்கு முன்பு சில விஷ யங்களில் நாம் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அவை:

* நீங்கள் செய்ய இருக்கும் புராஜெக்டின் மதிப்பு எவ் வளவு?
* உங்கள் புராஜெக்டில் எந்த மாதிரியான வசதிகளை கொண்டுவரப் போகிறீர்கள்?
* உங்களது புராஜெக்ட் எப்படிப்பட்ட வாடிக்கையா ளர்களுக்கு ஏற்றது?
* வாடிக்கையாளர்கள் அந்த இடத்தை எதற்காக விரும்புவார்கள்?

- இந்த விஷயங்களோடு, தேர்வு செய்த இடம் ஒரு காலத்தில் குளமாகவோ அல்லது குட்டையாகவோ இல்லாமல் இருந்ததையும் உறுதிசெய்வது அவசியம். ஏனென்றால், அப்படிப்பட்ட நிலத்தை தெரியாமல் தேர்வு செய்துவிட்டால்... அந்த நில த்தை சரிசெய்யும் முதற்கட்ட பணிகளுக்கே நிறைய செலவு செய்ய வேண்டிவரும். அதோடு, மண்பரிசோதனை யிலும் சிக்கல் வந்துவிடும். அதனால், நிலத்தை தேர்வு செய்யும் முன்பு, அதன் ஏ டூ இசட் விவரங்களை அலசி ஆராய்வது அவசியம்.

முக்கியமாக, எதிர்காலத்தில் அந்தப் பகுதியில் அரசுத்துறை நிறுவனங்கள் அமையும் வாய்ப்பு இருக்கிறதா, நிலத் தின் அருகே நெடுஞ்சாலைத் துறையின் சாலைவிரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப் படுமா, பாலங்கள் ஏதேனும் அமைக்கும் திட்டம் இருக் கிறதா என்பதையெல்லாம் ஆராய்வது நல்லது.

இதையெல்லாம் ஆராயா மல் நிலத்தை வாங்கிவிட்டு, சி.எம்.டி.ஏ. அனுமதிக்கு செல்லும்போது, Ôநீங்கள் வாங்கியுள்ள இடம் இந்த வளர்ச்சி மண்டலத்தில் வருகிறது, விமான நிலைய எல்லைக்கு அருகே வருகிறது, பக்கத்திலேயே சுடுகாடு இருக்கிறது, அதனால் அங்கே குடியிருப்பு பகுதிகளை கட்ட முடியாதுÕ என்பது போன்ற பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதனால், நிலத்தை வாங்குவதற்கு முன்பே, சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் அந்த நிலம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கேட்டறிவது நல்லது. இப்போ தெல்லாம், இன்டர்நெட் வழியாகவே இந்தத் தகவல் களை தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது.

லொகேஷன் தேர்வில், புராஜெக்டுக்காக நாம் தேர்வுசெய்யும் நிலத்தின் அரு கில் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், மார்கெட், மருத்துவ மனைகள், பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகியவை எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்த வசதிகள் அனைத்தையுமே  நாம் அங்கே கொண்டுவர முடியாது என் றாலும், இவற்றில் 60 சதவீத வசதிகளாவது பூர்த்தியாகி இருப்பது நல்லது. மேலே சொன்ன வசதிகளுக்காக 2 கி.மீ., 3 கி.மீ., செல்லும் நிலை இருந்தால், வாடிக்கையாளர் கள் அந்த இடத்தை விரும்ப மாட்டார்கள்.

அதேபோல், தொழிற்சாலை கள், அதிக சத்தம், புகை ஏற்படுத்தக்கூடிய தொழிற் சாலைகள் இருக்கும் பகுதி யையும் வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. நாம் குடியிருப்பு அமைக்க உள்ள இடத்தின் எதிர்ப்பக்கத்திலோ அல்லது அதற்கு அருகிலோ திறந்தவெளி கழிவுநீர் கால் வாய்கள், குப்பைக்கூடங்கள், கழிவறைகள், குட்டைகள், பெரிய அளவிலான முட்புதர் கள் இருந்தாலும் வாடிக்கை யாளர்கள் அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அத னால், சுகாதார வசதிகள் உள்ள லொகேஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இவற்றோடு, நாம் தேர்வு செய்யும் நிலத்தில் கட்டு மானங்களை மேற்கொள்ள அப்ரூவல் கிடைக்குமா, மின் இணைப்பு, தண்ணீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி முதலானவற்றை மேற் கொள்ள முடியுமா என்பதை யும் பார்க்க வேண்டும். இதன்பிறகு, அனுபவமுள்ள இன்ஜினீயரை அழைத்து வந்து, அந்த நிலத்தின் வாங்கும் திறனை கணக்கிட வேண்டும். வாடிக்கையாளர்கள், விருப் பத்துடன் வாங்கும் இடமாக அது இருக்க வேண்டும்.

ரத்தினச்சுருக்கமாக சொல் வது என்றால், ஒரு நிலத்தை தேர்வு செய்து, அதில் வீடுகள் கட்டிய பிறகுதான் அவை விற்பனை ஆகும் என்பதை விட, வீடு கட்டிக்கொண்டிருக் கும் போதே வீடுகள் விற்பனை யாகிவிட வேண்டும். அது தான் சரியான லொகேஷன்.

இந்த லொகேஷன் தேர்வின் போது, சிலர் தெரியாத்தனமாக நில மோசடிகளில் சிக்கிக் கொள்வர். அது எப்படி நிகழ் கிறது தெரியுமா?

- தொடரும்...

0 comments:

Post a Comment