Wednesday, 4 December 2013

வேளச்சேரி-வண்டலூர் இடையே விரைவில் மோனோ ரயில்


சிறப்பு நிருபர்
==============
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக மோனோ ரயில்களை இயக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதையொட்டி, மோனோ ரயில் வழித்தட பாதைகள் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேளச்சேரி&வண்டலூர் இடையே அமைய உள்ள மோனோ ரயில் திட்ட வேலைகள் தொடங்கியுள் ளன.  மோனோ ரயில் வரவால் ரியல் எஸ்டேட் தொழிலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மெட்ரோ ரயில்

சென்னை நகரில் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்ப தற்காக ரூ.14,600 கோடி மதிப் பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. மெட்ரோ ரயில் பாதைக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 6&ம் தேதி, கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்&அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மெட்ரோ ரயிலை தொடர்ந்து, சென்னை நகரில் மோனோ ரயில்களை இயக் கவும் தமிழக அரசு நடவடி க்கை எடுத்து வருகிறது. ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள் ளார். 2011-ம் ஆண்டே இதற்க £ன அறிவிப்பு வெளியிடப் பட்டாலும், இப்போதுதான் திட்டத்தை செயல்படுத்து வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தலுக்கு முன்பா கவே மோனோ ரயில் கட்டு மானப் பணிகள் மேற்கொள் ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோனோ ரயில் திட்டத்தை இரண்டு கட்டங்களாக 111 கி.மீ. தூர அளவில் நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, வண்டலூர்  -வேளச்சேரி, பூந்தமல்லி - கத்திப்பாரா, பூந்தமல்லி -வட பழனி இடையே மூன்று வழித் தடங்களில் 57 கி.மீ. தொலைவு க்கு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது மோனோ ரயில் கட்டுமானப் பணிகளை மேற் கொள்வதற்கான டெண்டர் நடைமுறைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்ட தால், ரயில் வழித்தட பாதை களை கையகப்படுத்தும் வேலைகள் தற்போது வேக மாக நடைபெற்று வருகின்றன.

வேளச்சேரி-வண்டலூர் மோனோ ரயில் வழித்தடம் 23 கி.மீ. தொலைவு கொண்டது. இந்த வழித்தடத்தில் பெருங் களத்தூர், இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், கவுரிவாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், வேளச்சேரி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

வேளச்சேரி முதல் தாம்பரம் வரை, தற்போதுள்ள மெயின் சாலையை ஒட்டியே மோனோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதை யொட்டி, இந்த வழித்தடத்தில் உள்ள சாலைகளை அகலப் படுத்தும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வரு கிறது. வேளச்சேரி முதல் ராஜகீழ்பாக்கம் சிக்னல் வரையிலான மெயின் சாலை 150 அடி கொண்டது. ஆனால், பல இடங்களில் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதால், ஆக்கிரமிப்பு களை அகற்றுவதற்கான முன்னறிப்பு நோட்டீஸ்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு, ஆக்கிரமிப்பு களும் அகற்றப்பட்டு வருகின்றன.

ராஜகீழ்பாக்கம் சிக்னல் தொடங்கி தாம்பரம் வரை யிலான மெயின் சாலை தற் போது 100 அடி கொண்டதாக இருக்கிறது. மோனோ ரயில் திட்டப் பாதைக்கு இது போதாது என்பதால், இந்த சாலையும் விரைவில் 150 அடி அகல சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் என்று அதிகா ரிகள் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.

அதேநேரம், ராஜகீழ்பாக்கம் சிக்னல் தொடங்கி தாம்பரம் வரையிலான சாலையோரத் தில் நிறைய பட்டா நிலங்கள் உள்ளன. மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த இந்த நிலங்களை கையகப்படுத்தியே ஆக வேண்டும் என்பதால், அந்த நிலங்கள் தொடர்பான கணக்கெடுப்பு வேலைகள் வேகமாக நடத்தப் பட்டுள்ளன. எந்தெந்த நிலங்களை கையகப்படுத்து வது என்பது தொடர்பான விவரங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

மோனோ ரயில் திட்டத்துக்காக பட்டா நிலங்களை இழக்கும் தனிநபர்களுக்கு, அந்த நிலத்துக்குதொகை யும் மதிப்பீடு செய்யப்பட்டு தரப்படும் என்றும் அதிகரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விரைவில், சம்பந்தப்பட்டவர் களுக்கு அதுதொடர்பான விவரங்கள் அனுப்பப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

செம்பாக்கம் நகர்மன்ற உறுப்பினர் கோ.சத்திய நாராயணன் கூறுகையில், Òமுறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதன்பிறகே செம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு வருகின்றன. ஆக்கிரமிக் கப்பட்ட இடங்கள் புறம் போக்கு நிலம் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை. அதேநேரம், யார் யார் நிலமெல்லாம் அரசால் கையகப்படுத்தப்படுமோ என்கிற அச்சம் இருப்பதால், யாரும் பாதிக்கப்படாத வகை யில் ஆக்கிரமிப்புகள் அகற்ற மும், நிலம் கையகப்படுத்து வதும் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்Ó என்று தெரிவித்தார்.

அடுத்த 2 ஆண்டுகளில் மோனோ ரயில் திட்டப் பணி களை முடிக்க அரசு திட்ட மிட்டுள்ளதால், மெட்ரோ ரயிலைத் தொடர்ந்து மோனோ ரயில்களும் சென் னை நகரில் இயக்கப்படும். இதன் மூலம் நகரின் போக்கு வரத்து நெரிசல் பெருமளவுக்கு குறையும்.

சூடுபிடிக்கும் ரியல் எஸ்டேட்

அதேபோல், மோனோ ரயில் திட்டப் பணிகளால், அந்தத் திட்டம் செயல்படுத்தப் படும் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழிலும் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. மோனோ ரயில் இயக்கப்படும்போது அந்த இடங்களில் தற் போதைய ரியல் எஸ்டேட்டின் மதிப்பு இரட்டிப்பானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.


'செம்பாக்கம் அமோக வளர்ச்சி பெறும்'

மோனோ ரயில் திட்டப் பணிகளுக்கு முன்னோட்டமாக நடைபெறும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து செம்பாக்கம் நகர்மன்ற தலைவர் சாந்தகுமார் கூறியதாவது:

மோனோ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள தாலும், 150 அடியாக சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள தாலும் தற்போது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மோனோ ரயில் சேவை சென்னை நகருக்கு அவசியம் என்பதை உணர்ந்துதான் நமது முதல்&அமைச்சர் அம்மா அவர்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.

வேளச்சேரி-வண்டலூர் இடையேயான மோனோ ரயில் திட்டத்தால், சென்னை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள செம்பாக்கம் நகராட்சியும் அமோக வளர்ச்சி பெறும். போக்கு வரத்து நெருக்கடியும் தீரும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment