ரத்னமங்கலத்தில் அமைந்துள்ள உலகின் முதல் குபேரன் கோவிலில் கும்பாபிஷேகம் மிகச் சிறப் பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
சென்னை வண்டலூரை அடுத்த ரத்னமங்கலத்தில் ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று தனிக் கோவில் அமைந்துள் ளது. இங்கே ஸ்ரீ மகா லட்சு மியும் ஸ்ரீ குபேர பக வானும் இணைந்து அருள் பாலிக்கின்ற னர். உலகில் முதன் முதலாக ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று அமைந்த முதல் தனிக் கோவில் இது. திருப்பதி ஏழு மலையானை தரிசிக்கச் செல் லும் முன்பு இங்கு வந்து வழி படுவது நல்லது.
சிறப்புமிக்க ரத்னமங்கலம் குபேரர் கோவிலில் திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதையொட்டி, ஸ்ரீ லட்சுமி குபேரர் மற்றும் பரிவார தெய்வங்களின் விமா னங்களுக்கும், அந்த தெய்வ விக்ரகங்களுக்கும் மகா கும்பா பிஷேகமும், மகா அபிஷேகம், மகா தீபஆராதனையும் நடை பெற்றன.
விழாவில், சென்னை மட்டு மின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்தி ருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஸ்ரீ குபேர பகவானின் அருளை பெற்றுச் சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ராஜ லெட்சுமி குபேரா டிரஸ்ட்டி யினர் செய்திருந்தனர்.


0 comments:
Post a Comment