ரூபி ஆர்.மனோகரன்
=====================
அனைவருக்கும் ஆச்ச ரியம் அளிக்கும் தொழிலாக உயர்ந்து நிற்கும் கட்டிடத் துறையில் நாள்தோறும் கோடிக்கணக்கில் பணம் புரள்வது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பில்டராக இருப் போரை பார்க்கும் மற்றவர் களுக்கும், 'நாமும் பில்டர் ஆகக்கூடாதா என்ன' என்கிற ஆசையும் அவ்வப்போது துளிர்விட்டு, அந்த ஆர்வத்தில் இந்தக் கட்டுமானத் துறைக் குள் அடியெடுத்துவைத்து ஜெயித்தவர்களும் உண்டு; வந்தவேகத்தில் பின்வாங்கி ஓடியவர்களும் உண்டு. வெற்றி யும் தோல்வியும் அவரவர் கையில்தான் இருக்கிறது.
அர்ப்பணிப்பு அவசியம்
கட்டிடத் துறை மட்டுமல்ல; எந்தத் துறையாக இருந்தாலும், அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால்தான் வெற்றி கிடை க்கும். அதேநேரம், அந்தத் துறையில் அனுபவ அறிவும் அவசியம் இருக்க வேண்டும்.
சிலர், பணம் இருந்தால் போதும்; மக்கள் மெச்சும் பில்டர் ஆகிவிடலாம்; கூட வே, லாபத்தையும் பல மடங்கு அள்ளிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார் கள். ஒரேயொரு புராஜெக்ட் மட்டும் போட்டு, வீடுகள் அத்தனையையும் விற்றுவிட் டால், அக்கணமே கோடீஸ் வரன் ஆகிவிடலாம் என்று, பில்டர் ஆகும் ஆசையில் உள் ளோரை உசுப்பிவிடவும் இங்கே நிறையபேர் இருக் கிறார்கள். இப்படி, அடுத்தவர் கள் தூண்டிவிட்டார்கள் என்பதற்காக பில்டர் ஆனால், இந்தத் துறையில் தொடர்ந்து நிலைத்து நிற்கவும் முடியாது; எதிர்பார்த்த அளவுக்கு லாபம் பெற முடியாது.
'டெடிகேஷன்' என்கிற அர்ப்பணிப்பு உணர்வு ஒவ் வொரு பில்டருக்கும் முக்கியம் என்று சொன்னேன் இல் லையா? அதற்கு என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் இந்தத் தொழில் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பேன். அந்த சிந்தனைதான் நாள டைவில் இன்னும் இன்னும் மெருகேறி, பெஸ்ட் பில்டராக என்னை உயரிய இடத்துக்கு கொண்டுவந்து நிறுத்தி இருக் கிறது. என்னுடைய இந்த வெற்றியின் பின்னணியில் பலமான தூண்களாக இருப்ப வர்கள், எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள்தான்.
வாடிக்கையாளர்கள் சேவையில் நாங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரு கிறோம் என்பதற்கு உதார ணமாக ஒரு சம்பவத்தை உங்க ளுடன் இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சேவைதான் முக்கியம்
அது நள்ளிரவு நேரம். நான் நன்றாக தூங்கிக் கொண்டி ருந்தேன். என் தூக்கத்தை கலைக்கும்விதமாக அலறியது தொலைபேசி. லைட்டை போட்டு பார்த்தால், மணி 12-ஐ தாண்டி இருந்தது. இந்த நேரத்தில் யார் பேசுவார்கள் என்ற சிந்தனையோடு பேசி னேன். எதிர்முனையில் பேசி யவர் கொஞ்சம் பதற்றமாகவே பேசினார். 'எங்கள் ஏரியாவில் கரன்ட் போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. இன்னமும் கரன்ட் வந்தபாடில்லை. உடனே கரன்ட் வர ஏற்பாடு செய்யுங்கள்' என்றார்.
நான் ஒரு மின்வாரிய ஊழியர் என்று நினைத்துக் கொண்டு அவர் பேசியது, அவரது பேச்சில் இருந்து தெரிந்தது. எனக்கும், என்னு டைய வீட்டு தொலைபேசி எண் அவருக்கு எப்படி கிடைத்தது என்று தெரிந்து போனது. அதாவது, போனில் பேசியவர் என்னுடைய வாடிக்கையாளர்தான். நாங் கள் மின்வாரியத்துக்கு மின் சார அளவீடு அட்டை வழங்கும்போது, எங்களது பிசினஸ் புரமோஷனுக்காக, எங்கள் நிறுவனத்தின் லோகோ, முகவரி, தொலை பேசி எண் ஆகிய விவரங்களை அதில் அச்சடித்துத் தருவது வழக்கம். கரன்ட் வெகுநேர மாக இல்லை என்பதால், மேற்படி வாடிக்கையாளர், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க நினைத்து, தவறு தலாக மின்சார அளவீடு அட்டையில் நாங்கள் அச்சடித்து கொடுத்திருந்த எங்கள் நிறுவன தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து விட்டார்.
எங்களுக்கு வாடிக்கையா ளர் சேவை மிகமிக முக்கியம் என்பதால், 'இன்னும் கொஞ்சநேரத்தில் அங்குவந்து உங் களை பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்தேன். அந்த நிமிடமே, போன் செய்த வாடிக்கையாளரின் ஏரியாவு க்குச் சென்றேன். வாடிக்கை யாளர் சொன்னது போலவே அந்த ஏரியா முழுவதும் கரன்ட் இல்லை.
எனக்கு போன் செய்த வாடிக்கையாளரின் வீட்டை தேடிப் பிடித்துச் சென்ற நான், அந்த ஏரியா முழுவதுமே கரன்ட் இல்லாத விஷயத்தை கூறினேன். திடீரென்று என்னை எதிர்பார்க்காத அந்த வாடிக்கையாளர், 'ஸார்... நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? இந்த ஏரியாவில் கரன்ட் இல்லாத விஷயத்தை நீங்கள் ஏன் என்னிடம்வந்து சொல்கிறீர்கள்?' என்று குழப்பத்தோடு கேட்டார்.
'நீங்கள்தானே சற்று நேரத் துக்கு முன்பு எனக்கு போன் செய்தீர்கள். அதனால்தான், இங்கே வந்தேன்' என்று நான் சொல்லவும், தான் தவறு தலாக போன் செய்து விட்டதை உணர்ந்துகொண்ட தோடு, ஸாரியும் கேட்டார் வாடிக்கையாளர். உடனே நான், 'இந்த விஷயத்தில் ஸாரி கேட்க ஒன்றுமே இல்லை. எங்கள் நிறுவனத்தின் சேவையை உறுதிப்படுத்து வதற்கான ஒரு வாய்ப்பைதான் நீங்கள் எங்களுக்குத் தந்து இருக்கிறீர்கள். அதற்கு, நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்று கூறிவிட்டு வந்தேன்.
பில்டர் ஆக ஆசைப் படுபவர்கள், வாடிக்கை யாளர் விஷயத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு நாம் பார்த்து பார்த்து சேவை செய்தால், அவர்கள் நமது நிரந்தர வாடிக்கையாளர் ஆகி விடுவார்கள். அவர்கள் மூலம் இன்னும் பல நல்ல வாடிக்கையாளர்கள் நமக்குக் கிடைப்பார்கள். அதை விட்டு விட்டு, வாடிக்கையாளர்கள் மனம் கோணும்படி நடந்து கொண்டால், இழப்பு பில்ட ருக்குத்தான்!
அனுபவம் கற்றுத்தரும்
பில்டருக்கு அனுபவ அறிவு அவசியம் என்று சொன்னேன் அல்லவா? அது ரொம்ப ரொம்ப முக்கியம்.
ஆரம்பத்தில் சின்னச் சின் னதாக கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கத் துவங்கி, இன்று பெரிய பில்டராக இருப்பவர் களும் உண்டு. இவர்கள், தங் கள் அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் நிறைய.
இன்று, கட்டிடக்கலை மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்துவிட்டது. அந்தக் கலையை ஏ டூ இசட் அறிந்து கொள்ள பல பாடப் பிரிவு களும் வந்துவிட்டன. இவ ற்றை முறையாகக் கற்றுக் கொண்டால், பின்னாளில் நிச்சயம் பெஸ்ட் பில்டர் ஆகலாம்.
கல்வி தவிர, ஒரு பில்டர், தனது அனுபவத்தில் இருந்து பெறும் அறிவுக்கும் மகத்தான சக்தி உண்டு. அது எப்படி?
(தொடரும்...)
இவர்தான் ரூபி மனோகரன்...
தென்னிந்திய கட்டிடத்துறையில் ஜாம்பவானாக உயர்ந்து நிற்பவர் ரூபி பில்டர்ஸ் சேர்மன் ஆர்.மனோகரன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் எனும் கிராமத்தில், திரு.ராமசாமி-திருமதி. செல்வி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், பள்ளிப்படிப்பு முடித்த உடனேயே இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 15 ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் சேவை செய்தார். 1994&ம் ஆண்டு அந்தப் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதன்பிறகே கட்டுமானத் துறையில் கவனம் செலுத்தினார். 1997-ல் 'ரூபி பில்டர்ஸ் புரமோட்டர்ஸ்' எனும் நிறுவனத்தை துவக்கிய இவருக்கு அதன்பிறகு ஏற்றம்தான். இன்று, ரூபி மனோகரான எல்லோராலும் அறியப்படுகிறார். இவர், 'சேவா ரத்னா' உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரும்கூட!

0 comments:
Post a Comment