Tuesday, 31 December 2013

இன்று புத்தாண்டு: முதல்வர் வாழ்த்து

ன்று ஆங்கிலப் புத்தாண்டு. இதையொட்டி, முதல்-அமைச்சர் ஜெய லலிதா தமிழக மக்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தி யில் கூறியிருப்பதாவது:-

புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுட னும்  கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று முன்னேற்றம் காணவும், இங்கு வறுமையில்  வாடி நிற்போர் எவருமில்லை என்ற நிலை எய்தி, சமூகப் பொருளாதார நிலையில் தமிழ்நாடு  இந்தி யாவிற்கே முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றிட வும் எனது தலைமையிலான அரசு அயராது பாடுபட்டு வருகிறது.

மக்களின் நல்வாழ்வுக்காக எனது தலைமையிலான தமிழ் நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற  நலத் திட்டங்களை அனைவரும் முறையாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்வதுடன், வலிமையும், வளமும்மிக்க  தமிழகத்தைப் படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத் தாண்டில் உங்கள் அனை வரையும் கேட்டுக்கொள் கிறேன். 

தமிழக மக்கள் அனை வருக்கும்  இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சி யையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட் டும் என்று வாழ்த்தி,  அனை வருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு  முறை உரித் தாக்கிக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment