ரூபி ஆர்.மனோகரன்
நாமெல்லாம் மாவீரன் என்று கொண்டாடக்கூடிய அலெக்ஸாண்டருக்கு அப் போது 13 வயது இருக்கும். ஒருநாள் அவரது தந்தையும், மாசிடோனியா நாட்டின் மன்னனுமான பிலிப் முன்பு அரேபிய குதிரை வியாபாரி ஒருவன் முரட்டுக் -குதிரை ஒன்றை கொண்டுவந்து நிறுத்தினான். பார்ப்பதற்கு அழகாக மட்டுமின்றி, துடிப் பாகவும் காணப்பட்டதால் உடனே அந்தக் குதிரையை வாங்கிவிட்டான் மன்னன் பிலிப்.
குதிரையை வாங்கியா யிற்று! அதை சவாரிக்கு பழக்கப்படுத்த வேண்டும் அல்லவா? உடனே பிலிப்பின் படைத் தளபதிகள் அதன்மீது சவாரி செய்ய முயற்சி செய்து, தோற்றுப் போனதுதான் மிச்சம். தளபதிகள் எல்லோ ரையும் மிரட்டிய அந்த முரட்டுக் குதிரை, இருந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை. எதையோ கண்டு பலமாக மிரண்டது.
மன்னன் பிலிப் மற்றும் அவனது தளபதிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. குதிரையை, பெரிய கம்பால் அடித்தும் பார்த்தார்கள். முன் னிரு கால்களையும் உயரே தூக்கி மிரண்ட குதிரை, தளபதிகள் யாரையும் தன்மீது சவாரி செய்ய அனுமதிக்கவில்லை.
நடந்ததை எல்லாம் தந்தை க்கு அருகே இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சிறுவன் அலெக்ஸாண்டர். தந்தை அருகில் வந்தவன், 'அப்பா... அந்தக் குதிரையை நான் அடக்கிக் காட்டுகிறேன்' என்றான். தன்னுடைய மகன் சிறுவன் ஆயிற்றே என்று எண்ணிய பிலிப், 'மகனே... நீ சிறுவன். இது, முரட்டுக் குதிரை. யுத்த களம் பல கண்ட தளபதிகளாலேயே அடக்க முடியாத குதிரையை நீ எப்படி அடக்குவாய்? அத னால், ஓரமாக போய் நில். உன் மீது குதிரை பாய்ந்துவிடக் கூடாது...' என்று பயமுறுத்தினான்.
ஆனால், சிறுவன் அலெக் ஸாண்டர் விடவில்லை. 'அப்பா... நான் அந்தக் குதி ரையை இந்த நிமிடமே அடக் கிக் காட்டுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடு த்துப் பாருங்கள்' என்றான்.
'எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்...' என்று அலெக் ஸாண்டர் சொன்னது மன்னன் பிலிப்பை யோசிக்க வைத்தது. 'சரி... குதிரையை அடக்கிக்காட்டு, பார்ப் போம்...' என்றான்.
உடனே, குதிரை அருகில் வந்த சிறுவன் அலெக் ஸாண்டர், அதன் கடிவாள த்தை வேகமாகப் பற்றி, அதே வேகத்தில் குதிரையை ஒரு திருப்பு திருப்பி வேறு பக்கமாக நிறுத்தியதோடு, அக்கணமே குதிரை மீது ஏறி, குதிரையை சிறிது தொலைவுக்கு ஓட்டிச் சென்று திரும்பிவந்தான்.
தன் எதிரே நடப்பது கனவா, நிஜமா என்ற குழப் பத்தில் இருந்தான் மன்னன் பிலிப். குதிரையில் இருந்து இறங்கிய மகனிடம், 'எப்படி குதிரையை உன் வசம் கொண்டு வந்தாய்' என்று ஆர்வம் பொங்கக் கேட்டான்.
'அப்பா... நீங்கள் குதிரையை மட்டும்தான் பார்த்தீர்கள். சுற்றியுள்ள சூழ் நிலையைப் பார்க்கவில்லை. நம் தளபதிகள் குதிரையை அடக்குவதற்கு முயற்சித்த போது, குதிரையின் நிழல் அதன் முன்பு விழுந்தது. அது, தன்னுடைய நிழல்தான் என்று தெரியாமல் மிரண்டு போய் நின்றிருந்தது குதிரை. அதனால்தான், தளபதிகளால் அதை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நான் குதிரையை வேறு பக்கமாக திருப்பியதால், எளிதில் என்வசம் கொண்டுவர முடிந் தது'' என்றான் சிறுவன் அலெக்ஸாண்டர்.
- இப்படித்தான், பில்டராக வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் அனுபவ அறிவோடு, சூழ்நிலைகளை புரிந்து செயல்பட வேண்டும். எந்தவொரு கடினமான செயலாக இருந்தாலும், அதை சுலபமாக செய்து முடிக்கும் வழி ஒன்று நிச்சயமாக இருக் கும். அந்த வழி என்ன என்பதை கண்டறிவதில்தான் நம்முடைய சாமர்த்தியம் இருக்கிறது. பில்டராக நினைக் கும் ஒவ்வொருவருக் கும் அந்த சாமர்த்தியம் அவசியம் இருக்க வேண்டும்.
நீங்கள், 4 வீடுகள் கட்டக் கூடிய ஒரு இடத்தை வாங்கி விட்டீர்கள். அந்த இடத்தில் 4 வீடுகளையும் கட்டுவதற்குத் தேவையான பணம் கைவசம் இருக்கிறது. அதில், 4 வீடுகளை யும் கட்டி விற்றுவிட்டால், முதலீடு செய்த பணமும், லாபமும் சேர்ந்து நமக்குக் கிடைக்கும்.
இந்த இடத்தில் சில புதிய பில்டர்கள் பெரிய தவறு ஒன்றை செய்துவிடுவார்கள். ஒரு இடத்தில் வீடு கட்டு வதற்காக வாடிக்கையாளர் களிடம் வாங்கிய பணத்தை, அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு பயன்படுத்து வதற்குப் பதிலாக, வேறு இடத்தில் இரட்டிப்பாக நிலம் வாங்கிவிடுவார்கள். இப்படி, வீடு கட்டும் புராஜெக்டுக்காக வாங்கப்பட்ட பணம், இன் னொரு இடத்தில் முடங்கி விட்டால், வீடு கட்டும் பணி தாமதமாகிவிடும். உறுதிய ளித்த கால அளவுக்குள் வாடிக்கையாளருக்கு வீட்டைக் கட்டிக் கொடுக்க முடியாது.
இப்படிப்பட்ட நேரங்களில், சம்பந்தப்பட்ட பில்டருக்கு அவப்பெயர் ஏற்படுவதுதான் மிச்சம். கொஞ்சம் முன்னெச் சரிக்கையாக செயல்பட்டால் இதுபோன்ற தவறுகள் நேரா மல் தவிர்க்கலாம். புதிதாக வரும் பில்டர்கள் ஒவ்வொரு வரும், அடுத்தவர்களின் இந்த அனுபவத்தில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், மக்கள் விரும்பும் பில்டராக உயர முடியும்.
கட்டுமானத் துறையை லாப நோக்கு கண்ணாடி அணிந்து பார்ப்பவர்களும் உண்டு. இது தவறு. இவர்கள், சேவை மனப்பான்மை எனும் கண்ணாடி அணிந்துகொள் வது அவசியம். அப்போது தான், லாபம் எது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிய வரும்.
ஒரேயொருமுறை ஒரு பொருளை வாடிக்கையாளரி டம் விற்றுவிட்டு, பிறகு... அவர் யாரோ, நாம் யாரோ... என்று போகும் தொழில் அல்ல கட்டுமானத்துறை. இந்த பந்தம், பல தலைமுறை கள் தாண்டியும் தொடக் கூடியது. அதனால் இங்கே, பண வரவைவிட, மனஉறவு மிக முக்கியம் என்பதை பில்டர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
முதலாளியாக இருந்தாலும் களத்தில் இறங்கி அவசியம் வேலை பார்க்க வேண்டிய தொழில் இந்த கட்டுமானத் துறை. இங்கே வேலை செய்வதற்கு, முதலாளியாக இருந்தாலும் வெட்கப்படக் கூடாது. கடினமாக உழைக்க வும் தயங்கக்கூடாது.
சிலர் ஒயிட் அண்ட் ஒயிட்டில் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப் பார்கள். கட்டுமானத்துறை யில் இதற்கு சாத்தியமே இல்லை. விவசாய வேலையைப் போன்றதுதான் கட்டுமானத் தொழிலும்! கட்டிட வேலைகளை நேரில் சென்று பார்க்கும்போது, நம் ஆடையில் அழுக்கு படியா மல் வெளியே வரமுடியாது. என்னைப் பொருத்தவரையில், காலையில் வேலைக்கு வருவதுதான் தெரியும்; இரவு எப்போது வீட்டுக்குச் செல் வோம் என்பதே தெரியாது. அந்த அளவுக்கு சின்ஸியராக உழைக்க வேண்டும்.
சிலர், அடுத்தவர்களை நம்பி கட்டுமானத் தொழிலில் இறங்கிவிடுவது உண்டு. அப்படியே வந்துவிட்டாலும், இந்த தொழிலில் ஜெயித்துக் காட்டுவது எப்படி என்று யோசிக்க வேண்டும். தன்னிடம் போதிய திறமை இல்லையென்றால், அதை அடுத்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் மனப் பக்குவமாவது இருக்க வேண்டும். 'கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு' என்பது இந்தத் தொழிலுக்கும் பொருந்தும்.
சிலர், தாங்கள் பில்டர் ஆகிவிட்டோம் என்பதற்காக, சக பில்டர்களிடம்கூட விஷயங்களை பகிர்ந்து கொள்ள தயங்குகிறார்கள். இந்த எண்ணம் வேண்டவே வேண்டாம். ஒரு இடத்தை நீங்கள் வாங்கும்போது, அதற்கு சரியான விலையைத் தான் கொடுக்கிறோமா என்பதை உறுதி செய்ய இந்த சக பில்டர் உறவு மிகவும் உதவும்.
இப்படி, அனுபவத்தில் இருந்து பில்டர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அது, நிலம் வாங்குவதற்குரிய லொகேஷனுக்கும் பொருந் தும். நிறைய பில்டர்கள் கோட்டைவிடுவது, நிலத்தை தேர்ந்தெடுத்து வாங்கும் விஷயத்தில்தான். எப்படிப் பட்ட லொகேஷன் நமக்கு லாபத்தை அள்ளித் தரும்?
- அடுத்த இதழில் சந்திப்போம்...
நாமெல்லாம் மாவீரன் என்று கொண்டாடக்கூடிய அலெக்ஸாண்டருக்கு அப் போது 13 வயது இருக்கும். ஒருநாள் அவரது தந்தையும், மாசிடோனியா நாட்டின் மன்னனுமான பிலிப் முன்பு அரேபிய குதிரை வியாபாரி ஒருவன் முரட்டுக் -குதிரை ஒன்றை கொண்டுவந்து நிறுத்தினான். பார்ப்பதற்கு அழகாக மட்டுமின்றி, துடிப் பாகவும் காணப்பட்டதால் உடனே அந்தக் குதிரையை வாங்கிவிட்டான் மன்னன் பிலிப்.
குதிரையை வாங்கியா யிற்று! அதை சவாரிக்கு பழக்கப்படுத்த வேண்டும் அல்லவா? உடனே பிலிப்பின் படைத் தளபதிகள் அதன்மீது சவாரி செய்ய முயற்சி செய்து, தோற்றுப் போனதுதான் மிச்சம். தளபதிகள் எல்லோ ரையும் மிரட்டிய அந்த முரட்டுக் குதிரை, இருந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை. எதையோ கண்டு பலமாக மிரண்டது.
மன்னன் பிலிப் மற்றும் அவனது தளபதிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. குதிரையை, பெரிய கம்பால் அடித்தும் பார்த்தார்கள். முன் னிரு கால்களையும் உயரே தூக்கி மிரண்ட குதிரை, தளபதிகள் யாரையும் தன்மீது சவாரி செய்ய அனுமதிக்கவில்லை.
நடந்ததை எல்லாம் தந்தை க்கு அருகே இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சிறுவன் அலெக்ஸாண்டர். தந்தை அருகில் வந்தவன், 'அப்பா... அந்தக் குதிரையை நான் அடக்கிக் காட்டுகிறேன்' என்றான். தன்னுடைய மகன் சிறுவன் ஆயிற்றே என்று எண்ணிய பிலிப், 'மகனே... நீ சிறுவன். இது, முரட்டுக் குதிரை. யுத்த களம் பல கண்ட தளபதிகளாலேயே அடக்க முடியாத குதிரையை நீ எப்படி அடக்குவாய்? அத னால், ஓரமாக போய் நில். உன் மீது குதிரை பாய்ந்துவிடக் கூடாது...' என்று பயமுறுத்தினான்.
ஆனால், சிறுவன் அலெக் ஸாண்டர் விடவில்லை. 'அப்பா... நான் அந்தக் குதி ரையை இந்த நிமிடமே அடக் கிக் காட்டுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடு த்துப் பாருங்கள்' என்றான்.
'எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்...' என்று அலெக் ஸாண்டர் சொன்னது மன்னன் பிலிப்பை யோசிக்க வைத்தது. 'சரி... குதிரையை அடக்கிக்காட்டு, பார்ப் போம்...' என்றான்.
உடனே, குதிரை அருகில் வந்த சிறுவன் அலெக் ஸாண்டர், அதன் கடிவாள த்தை வேகமாகப் பற்றி, அதே வேகத்தில் குதிரையை ஒரு திருப்பு திருப்பி வேறு பக்கமாக நிறுத்தியதோடு, அக்கணமே குதிரை மீது ஏறி, குதிரையை சிறிது தொலைவுக்கு ஓட்டிச் சென்று திரும்பிவந்தான்.
தன் எதிரே நடப்பது கனவா, நிஜமா என்ற குழப் பத்தில் இருந்தான் மன்னன் பிலிப். குதிரையில் இருந்து இறங்கிய மகனிடம், 'எப்படி குதிரையை உன் வசம் கொண்டு வந்தாய்' என்று ஆர்வம் பொங்கக் கேட்டான்.
'அப்பா... நீங்கள் குதிரையை மட்டும்தான் பார்த்தீர்கள். சுற்றியுள்ள சூழ் நிலையைப் பார்க்கவில்லை. நம் தளபதிகள் குதிரையை அடக்குவதற்கு முயற்சித்த போது, குதிரையின் நிழல் அதன் முன்பு விழுந்தது. அது, தன்னுடைய நிழல்தான் என்று தெரியாமல் மிரண்டு போய் நின்றிருந்தது குதிரை. அதனால்தான், தளபதிகளால் அதை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நான் குதிரையை வேறு பக்கமாக திருப்பியதால், எளிதில் என்வசம் கொண்டுவர முடிந் தது'' என்றான் சிறுவன் அலெக்ஸாண்டர்.
- இப்படித்தான், பில்டராக வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் அனுபவ அறிவோடு, சூழ்நிலைகளை புரிந்து செயல்பட வேண்டும். எந்தவொரு கடினமான செயலாக இருந்தாலும், அதை சுலபமாக செய்து முடிக்கும் வழி ஒன்று நிச்சயமாக இருக் கும். அந்த வழி என்ன என்பதை கண்டறிவதில்தான் நம்முடைய சாமர்த்தியம் இருக்கிறது. பில்டராக நினைக் கும் ஒவ்வொருவருக் கும் அந்த சாமர்த்தியம் அவசியம் இருக்க வேண்டும்.
நீங்கள், 4 வீடுகள் கட்டக் கூடிய ஒரு இடத்தை வாங்கி விட்டீர்கள். அந்த இடத்தில் 4 வீடுகளையும் கட்டுவதற்குத் தேவையான பணம் கைவசம் இருக்கிறது. அதில், 4 வீடுகளை யும் கட்டி விற்றுவிட்டால், முதலீடு செய்த பணமும், லாபமும் சேர்ந்து நமக்குக் கிடைக்கும்.
இந்த இடத்தில் சில புதிய பில்டர்கள் பெரிய தவறு ஒன்றை செய்துவிடுவார்கள். ஒரு இடத்தில் வீடு கட்டு வதற்காக வாடிக்கையாளர் களிடம் வாங்கிய பணத்தை, அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு பயன்படுத்து வதற்குப் பதிலாக, வேறு இடத்தில் இரட்டிப்பாக நிலம் வாங்கிவிடுவார்கள். இப்படி, வீடு கட்டும் புராஜெக்டுக்காக வாங்கப்பட்ட பணம், இன் னொரு இடத்தில் முடங்கி விட்டால், வீடு கட்டும் பணி தாமதமாகிவிடும். உறுதிய ளித்த கால அளவுக்குள் வாடிக்கையாளருக்கு வீட்டைக் கட்டிக் கொடுக்க முடியாது.
இப்படிப்பட்ட நேரங்களில், சம்பந்தப்பட்ட பில்டருக்கு அவப்பெயர் ஏற்படுவதுதான் மிச்சம். கொஞ்சம் முன்னெச் சரிக்கையாக செயல்பட்டால் இதுபோன்ற தவறுகள் நேரா மல் தவிர்க்கலாம். புதிதாக வரும் பில்டர்கள் ஒவ்வொரு வரும், அடுத்தவர்களின் இந்த அனுபவத்தில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், மக்கள் விரும்பும் பில்டராக உயர முடியும்.
கட்டுமானத் துறையை லாப நோக்கு கண்ணாடி அணிந்து பார்ப்பவர்களும் உண்டு. இது தவறு. இவர்கள், சேவை மனப்பான்மை எனும் கண்ணாடி அணிந்துகொள் வது அவசியம். அப்போது தான், லாபம் எது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிய வரும்.
ஒரேயொருமுறை ஒரு பொருளை வாடிக்கையாளரி டம் விற்றுவிட்டு, பிறகு... அவர் யாரோ, நாம் யாரோ... என்று போகும் தொழில் அல்ல கட்டுமானத்துறை. இந்த பந்தம், பல தலைமுறை கள் தாண்டியும் தொடக் கூடியது. அதனால் இங்கே, பண வரவைவிட, மனஉறவு மிக முக்கியம் என்பதை பில்டர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
முதலாளியாக இருந்தாலும் களத்தில் இறங்கி அவசியம் வேலை பார்க்க வேண்டிய தொழில் இந்த கட்டுமானத் துறை. இங்கே வேலை செய்வதற்கு, முதலாளியாக இருந்தாலும் வெட்கப்படக் கூடாது. கடினமாக உழைக்க வும் தயங்கக்கூடாது.
சிலர் ஒயிட் அண்ட் ஒயிட்டில் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப் பார்கள். கட்டுமானத்துறை யில் இதற்கு சாத்தியமே இல்லை. விவசாய வேலையைப் போன்றதுதான் கட்டுமானத் தொழிலும்! கட்டிட வேலைகளை நேரில் சென்று பார்க்கும்போது, நம் ஆடையில் அழுக்கு படியா மல் வெளியே வரமுடியாது. என்னைப் பொருத்தவரையில், காலையில் வேலைக்கு வருவதுதான் தெரியும்; இரவு எப்போது வீட்டுக்குச் செல் வோம் என்பதே தெரியாது. அந்த அளவுக்கு சின்ஸியராக உழைக்க வேண்டும்.
சிலர், அடுத்தவர்களை நம்பி கட்டுமானத் தொழிலில் இறங்கிவிடுவது உண்டு. அப்படியே வந்துவிட்டாலும், இந்த தொழிலில் ஜெயித்துக் காட்டுவது எப்படி என்று யோசிக்க வேண்டும். தன்னிடம் போதிய திறமை இல்லையென்றால், அதை அடுத்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் மனப் பக்குவமாவது இருக்க வேண்டும். 'கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு' என்பது இந்தத் தொழிலுக்கும் பொருந்தும்.
சிலர், தாங்கள் பில்டர் ஆகிவிட்டோம் என்பதற்காக, சக பில்டர்களிடம்கூட விஷயங்களை பகிர்ந்து கொள்ள தயங்குகிறார்கள். இந்த எண்ணம் வேண்டவே வேண்டாம். ஒரு இடத்தை நீங்கள் வாங்கும்போது, அதற்கு சரியான விலையைத் தான் கொடுக்கிறோமா என்பதை உறுதி செய்ய இந்த சக பில்டர் உறவு மிகவும் உதவும்.
இப்படி, அனுபவத்தில் இருந்து பில்டர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அது, நிலம் வாங்குவதற்குரிய லொகேஷனுக்கும் பொருந் தும். நிறைய பில்டர்கள் கோட்டைவிடுவது, நிலத்தை தேர்ந்தெடுத்து வாங்கும் விஷயத்தில்தான். எப்படிப் பட்ட லொகேஷன் நமக்கு லாபத்தை அள்ளித் தரும்?
- அடுத்த இதழில் சந்திப்போம்...

0 comments:
Post a Comment