Saturday, 21 December 2013

கொண்டாடுவோம் கிறிஸ்துமஸ்!

 கிறிஸ்துமஸ் பற்றிய சில சிறப்புத் தகவல்கள் இங்கே உங்கள் பார்வைக்கு...

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை : 1843-ம் ஆண்டு சர்.ஹென்றி கோல் என்பவ ரால் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பப் பட்டது. 1846&-ல் ஜோசப் அன்டால் என்ற ஓவியர் ஆயிரக்கணக்கில் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டார். இந்த வாழ்த்து அட்டைகளின் வடிவமைப்பு, நேர்த்தி, தொழில்நுட்பம் என பல்வேறு வகைகளிலும் கவரப்பட்டனர் மக்கள்.
இதனால், கோடிக் கணக்கான மில்லியன் டாலர் வியாபாரப் பொருளாக வாழ்த்து அட்டை புழக்கத்திற்கு வந்தது. கிறிஸ்துமஸ் விழாவின் போது உறவினர் களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்தும் அன்பும் அறிவித்து அன்புறவை புதுப்பிக்கும் பணியை வாழ்த்து அட்டை கள் செய்கின்றன.

கிறிஸ்துமஸ் குடில் : கி.பி. 1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிரான்சிஸ் அச்சி என்ற புனிதரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பை வெளிப்படுத்தும், நினைவூட்டும் சிலைகளின் வழிபாடே கிறிஸ்துமஸ் குடில் வழிபாடு எனப்படுகிறது.

கிறிஸ்துமஸ் மரம் : மனித வழிபாட்டு முறைகளின் துவக்கம் இயற்கை வழிபாடாகும். மனிதன் இயற்கையை வணங் கினான். ஸ்காண்டி நேவியர் கள் மரத்தை வழிபடுபவர்கள். அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறினார்கள். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளினபடி கலாச்சார மயமாகுதல், பண்பாடு மயமாகுதல் என்ற நெறிப்படி புதிய கிறிஸ்தவ மதத்திலும் ஸ்காண்டி நேவிய மக்களுக்கு மரத்தை வழிபட வழியிருந்தது. அவர்கள் மரங் களை மின் விளக்குகளால் அலங்கரித்து வணங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மானியர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க ஆரம் பித்தனர். 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட், தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்து மஸ் மரத்தை அறிமுகப்படுத் தினார்.

கிறிஸ்துமஸ் கேக் :  மேற்க த்திய கலாச் சாரத்தின்படி  கேக், கிறிஸ்துமஸ் விழாவின் சிறப் பான உணவு பொருளாக இருக்கிறது.

கிறிஸ்துமஸ் பூ : மெக் சிகோவில் 'போய்ன்செட் டியா' என்பது கிறிஸ்துமஸ் மலராகக் கருதப்படுகிறது. இதைப் 'புனித இரவின் பூ' என்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் ஆடு : ஸ்வீட னில் கிறிஸ்துமஸ் அலங் காரங்களில் ஒன்றாக 'ஜுல்பக்' என்ற வைக்கோலால் ஆன வெள்ளாடு இடம் பெறுகிறது.

0 comments:

Post a Comment