Saturday, 21 December 2013

22 வாடகை ரயில்! : இன்று பிரம்மாண்ட கூட்டத்தில் பேசுகிறார் மோடி


மும்பையில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக் காக 22 வாடகை ரயில்கள் அமர்த்தப்பட்டுள்ளன.

பொதுக்கூட்டம்

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நரேந்திர மோடி. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கில் தொண்டர்கள், பொதுமக்கள் திரளுவதால் இன்னும் உற் சாகத்தில் இருக்கிறார். சமீபத் தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்கள் பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக இருப்பதால் கூடுதல் சுறுசுறுப்போடு தேர் தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று (ஞாயிறு) மும்பையில் நடை பெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அவரது பேச்சைக் கேட்க மாநிலம் முழுவதிலும் இருந்து தொண் டர்கள் வருவார்கள் என்ப தால், அவர்களின் வசதிக்காக 22 வாடகை ரயில்கள் அமர்த் தப்பட்டுள்ளன. தவிர, பஸ், லாரி உள்ளிட்ட வாகனங் களிலும் அவர்கள் வருவார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment