ஆனந்த்
சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தனித் தனியாக பிரிந்து சென்று கைவரிசை காட்டும் மர்ம கும்பலால் பயணிகள் பீதியடைந்துள்ளனர். பயணிகள் உஷாராக பயணி ப்பதுதான் முழு பாதுகாப்பு தரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மர்ம கும்பல் கைவரிசை
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் திருவனந்தபுரம், திருநெல் வேலி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுடன் பயணியாக கலந்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் மர்ம கும்பலால் பயணிகள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
குறிப்பாக, திருவனந்தபுரம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ரமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் இந்த கும்பல் அதிக அளவில் கைவரிசை காட்டிவருகிறது. இவர்கள் இந்த இரு ரயில்களை தேர்வு செய்ய காரணம் இருக்கிறது.
டிக்கெட் எடுப்பதில்லை!
திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி ரயிலில் திருநெல் வேலி, தூத்துக்குடி, கன்னியா குமரி செல்லும் பயணிகளுடன் திருவனந்தபுரம் செல்லும் கேரள பயணிகளும் அதிக அளவில் பயணிக்கின்றனர். அதேபோல், ராமேஸ்வரம் செல்லும் ரயிலில், வடமாநிலங் களில் இருந்து சென்னை வந்து, இங்கிருந்து ராமேஸ் வரத்துக்கு செல்லும் பயணிகள் அதிகம். இப்படி, இரு ரயில்களிலும் பலதரப் பட்ட மக்கள் பயணிப் பதால், அவர்கள் கண்ணில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில் லாமல் நடமாடி, எளிதில் திருடிவருகிறது இந்த கும்பல். இவர்கள் தனி ஆளாகத்தான் ரயிலில் ஏறுகிறார்கள். பெரும் பாலும் இவர்கள் டிக்கெட் எடுப்ப தில்லை. ஆனாலும், முன்பதிவு செய்யும் பெட்டி களில், எங்கே இருக்கை காலியாக இருக்கிறதோ, அங்கே சென்று அமர்ந்து கொள்வார்கள். சக பயணிகள் சந்தேகப்படாத வகையில் நடந்துகொள்வார்கள்.
மற்ற பயணிகளைப் போலவே உணவை பார்சல் செய்து கையோடு கொண்டு வந்திருப்பார்கள். கையில், ஏதேனும் ஒரு புத்தகம் இருக் கும். இப்படி, எந்த சந்தேகத் துக்கும் இடமளிக்காத வகையில் பயணம் செய்வார்கள்.
ரயில் டிக்கெட் பரிசோதகர் கண்களில்தான் இவர்கள் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், அவர்கள் வரும் நேரங்களில் இவர்கள் ஓடும் ரயிலில் நடமாடிக் கொண்டிருப்பார்கள். அல்லது, பாத்ரூமுக்குள் புகுந்துகொள்வார்கள்.
கைவரிசை!
இவர்கள் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே, எந்த ரயில் பெட்டியில் பயணிக்கும் பயணிகளிடம் அதிக அளவில் நகை, பணம் இருக்கும் என்பதை கவனித்து விடுகிறார் கள். அவர்கள் கொண்டுவரும் சூட்கேஸ் எங்கே வைக்கப் பட்டு இருக்கிறது, எளிதில் திருடும் சூழ்நிலையில் அது இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்வார்கள். சம்பந்தப்பட்ட பயணி இரவில் நன்றாக உறங்கும் நேரத்தில், அவரது சூட்கேஸை நைசாக எடுத்துக்கொண்டு, அடுத்ததாக ரயில் நிற்கும் நிலையத்தில் இறங்கி தப்பி விடுவார்கள்.
அப்புறம் என்ன... பொருளை பறிகொடுத்த பயணி, எவ்வளவு கத்தினாலும் திருட்டுப்போன பொருள் திரும்ப கிடைக்காது.
புகார் செய்யலாம்!
இதுபற்றி அனந்தபுரி எக்ஸ் பிரஸ் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது:-
இந்த மாதிரியான திருட்டு சம்பவங்களை தடுக்க ரயில்வே போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபடுவார் கள். சிலநேரங்களில், அதையும் மீறி திருட்டு நடந்துவிடுகிறது. அதனால், எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகள்தான் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பயணி தனி ஆளாக இருக்கும்பட்சத்தில், அவர் உண்மையிலேயே முன்பதிவு செய்துதான் பயணம் செய்கிறாரா என்பதை தெரிந்துகொள்வது அவசியம். அவர் முன்பதிவு செய்துதான் பயணிக்கிறாரா என்பதை அறிய, எங்களைப் போன்ற டிக்கெட் பரிசோதகர் களிடம் அவர் தனது டிக்கெட்டை பரிசோதனை க்குத் தந்தாரா என்பதை கவனிப்பது நல்லது.
அவ்வாறு அவர் டிக்கெட் தராமல் பயணிப்பதாக நீங்கள் சந்தேகித்தால், தாராளமாக எங்களிடம் புகார் தரலாம். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே போலீஸாரிடமும் இதுபற்றி தெரிவிக்கலாம்.
மேலும், நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொண்டுவரும் பயணிகள், அவற்றை தகுந்த பாதுகாப்புடன் வைத்தி ருப்பது அவசியம். அவ்வாறு விலை உயர்ந்த பொருட்களை கொண்டுவந்தால், அவை வைக்கப்பட்டுள்ள சூட் கேஸை ரயிலில் சீட்டுகளுக்கு அடியில் பூட்டி வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்வது, திருட்டு நடை பெறுவதை தடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தேவை முன்னெச்சரிக்கை
எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு அளித்திருந்தாலும், பயணி களாகிய நாமும் முன்னெச் சரிக்கையாக பயணிப்பது தானே நல்லது?


0 comments:
Post a Comment