Saturday, 21 September 2013

தமிழகத்தில் பா.ஜனதா யாருடன் கூட்டணி?


ல்லோரும் எதிர்பார்த்தது போலவே பாரதீய ஜனதா கட்சியின் வரும் நாடாளுமன்ற தேர்தலுக் கான பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார், நரேந்திர மோடி. இந்த அறிவிப்பு, பாரதீய ஜனதா கட்சியினரை மேலும் உற்சாகம் அடையவைத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்


இந்தியாவின் 19-வது மக்களவைக்கான தேர்தல் அடுத்த 7 மாதங்களில் நடை பெற உள்ளது. ஆளும் கட்சி யான காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரக்குழு தலை வரான குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். காங்கிரஸின் பிரதமர் வேட் பாளராக ராகுல்காந்திதான் அறிவிக்கப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. பிரதமர் மன்மோகன்சிங்கும் இதை உறுதிப்படுத்துவதுபோல் அவ்வப்போது பேசி வரு கிறார். ராகுலின் தலைமைமை காங்கிரஸ் மட்டுமின்றி தானும் விரும்புவதாக கூறி வருகிறார் அவர்.

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டு விட்டதால், அக்கட்சியினர் இன்னும் உற்சாகமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள் ளனர். இதுவரை குஜராத் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நரேந்திர மோடி, தற்போது தேசிய அளவிலான பிரச்னைகள் பற்றி விமர்சித்து வருகிறார். பிரதமர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்ட பிறகு, அரி யானா மாநிலம் ரிவாரியில் நடந்த முதல் பொதுக்கூட் டத்தில் பேசிய மோடியின் பேச்சு உணர்ச்சிகரமாக இருந் தது. 'இந்தியாவை ஒரு பக்கம் பாகிஸ்தான் அச்சுறுத்துகிறது. இன்னொரு பக்கம் சீனா மிரட்டுகிறது.

 இதற்கெல்லாம் காரணம், பலவீனமான மத்திய அரசுதான்' என்று குற்றம்சாட்டியவர், 'இது மாற்றத்தை காணவேண்டிய நேரம். அந்த மாற்றத்தை இளைஞர்கள்தான் ஏற்படுத்த வேண்டும். பலமான தலை மைக்கு வழிவகுக்க வேண்டும். அதற்கு உங்கள் வாக்கு முக்கியம். அதனால், வாக் காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிசெய்து கொள் ளுங்கள்' என்று, இளைஞர் களுக்கு அழைப்புவிடுத்தார்.

திருச்சி மாநாடு

மோடியின் தேர்தல் பிர சாரம் வடமாநிலங்களில் தற்போது மையம் கொண் டுள்ள நிலையில், திருச்சியில் வருகிற26&ம் தேதி நடைபெற உள்ள பா.ஜனதாவின் Ôஇளம் தாமரைÕ மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். தமிழ கத்தைப் பொறுத்தவரையில், கூட்டணி அமைத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதா தயாராகவே இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் ஆதர வான வாய்ஸைகூட அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

'நடிகர் ரஜினிகாந்த், நடிகர் என்பதை விட, தேசியத்தின் மீதும் ஆன் மிகத்தின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்பதால், அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர், மோடி தலைமையிலான எங்கள் அணியை ஆதரவிக்க வேண்டும்' என்று, தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் திறந்த மன தோடு சொல்லிவிட்டார். அதனால், திருச்சி மாநாட்டில் மோடி பேசும்போது, கூட் டணி பற்றிய முக்கிய அறிவிப்பு அல்லது வேண்டுகோளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்வானி வருவாரா?

திருச்சியில் நடைபெறும் இளம் தாமரை மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ள இருப்பதால், மாநாட்டை பிரம்மாண்ட அளவில் நடத்த தமிழக பார தீய ஜனதா எல்லா ஏற்பாடு களையும் செய்து வருகிறது.

திருச்சி மாநாட்டில் அத்வானி கலந்துகொள்வாரா, மாட்டாரா என்கிற கேள்வி எழுந்தாலும், அவர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவே அக்கட்சி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. பிரதமர் வேட்பா ளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவதை அத்வா னியும் அவரது ஆதரவாளர் களும் ஆரம்பத்தில் ஆதரிக்க வில்லை என்றாலும், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களின் தொடர் பேச்சுவார்த்தை களால் அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. மோடிக்கு தனது ஆதரவை தெரிவித்தார் அத்வானி. 'பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி வரவேண்டும் என்ப தற்காகத் தான் நாங்கள் அவரை பிரத மர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். நாட்டின் நலனை கருத்தில்கொண்டே இந்த முடிவை எடுத்துள் ளோம்' என்று நிருபர்களிடம் கூறினார் அத்வானி.

சுறுசுறுப்பு

பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் தேர்வு சுமுகமாக முடிந்துவிட்டதால், அந்தக் கட்சியினர் உற்சாகம் அடைந் துள்ளனர். அதே உற்சாகத் தோடு தேர்தல் களத்திலும் சுறுசுறுப்பாக இறங்கியுள்ள னர்.

0 comments:

Post a Comment