டில்லியில் கடந்த ஆண்டு, ஓடும் பஸ்ஸில் 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதான 6 பேரில் ஒருவன் சிறைச்சாலையிலேயே தற்கொலை செய்துகொண்டுவிட்டான். மைனர் சிறுவன் என்று கருதப்பட்டவனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. 'சிறுவனாக கருதப்பட்டவனுக்கு தரப்பட்ட தண்டனை போதாது; குற்றம் புரிந்தவன் சிறுவனா பெரியவனா என்கிற பாகுபாடு பார்க்கக்கூடாது. அவனுக்கு மரண தண்டனையே சரியான தீர்வு' என்று மாணவியின் பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், மும்பையில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர் ஒருவரும் ஒரு கும்பலால் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆஸ்ரமங் களை ஏற்படுத்தி நிர்வகித்து வரும் பிரபல சாமியாரான 72 வயது ஆசாராம் பாபு என்பவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. அவர், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது குற்றச்சாட்டு.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் இந்த பாலியல் பலாத்கார கொடுமைகள் மறுபடியும் தொடரக்கூடாது என்பதுதான் எல்லோரின் விருப்பம். ஆனால், பண பலத்தாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த கொடுமைகளில் இருந்து பெண்கள் காக்கப்பட வேண்டும் என்றால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்? பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு யார் காரணம்? என்று நமது பகுதி மக்களிடம் கேட்டோம்.
இந்துமதி, ஃபேஷன் டிஸைனர், மேடவாக்கம்: இப்போதெல்லாம் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்ட பெண்களும் ஒருவகையில் காரணமாகி விடுகின்றனர். குறிப்பாக, கல்லூரியில் படிக்கும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் இதனால் பாதிப்புக்குள்ளாக மொபைல் போனும் இன்னொரு வகையில் முக்கிய காரணம். சில பெண்கள், தங்களது மொபைலுக்கு ராங்க் கால் வந்தாலும்கூட, சட்டென்று இணைப்பைத் துண்டித்துவிடாமல் 'நீங்க யாரு, உங்களுக்கு யாரு வேணும், நீங்க கேட்கற பொண்ணு நான் இல்லை...' என்று அவர்கள் கேட்காமலேயே பேசிவிடுகிறார்கள். இதை, எதிர்முனையில் பேசும் ஆண் சாதகமாக பயன்படுத்தி, பேச்சை வளர்ப்பதால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அந்தப் பெண் பாலியல் ரீதியான பிரச்னைகளைகூட சந்திக்க வேண்டியதாகிவிடுகிறது.
இதேபோன்று, நடுரோட்டில் நடந்து செல்லும்போது யாரேனும் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்தால், ஒன்று... அவர்களை கோபமாக கண்டிக்க வேண்டும். அல்லது, திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட வேண்டும். இதைச் செய்யாமல், லேசாக திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டால், அந்த கும்பல் அடிக்கடி பின்தொடர ஆரம்பித்துவிடும். பிறகு, பிரச்னை மேல் பிரச்னைதான். முன்னெச்சரிக்கையாக செயல்படுவதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து பெண்கள் தப்பித்துக்கொள்ளலாம். அதேநேரம், தவறு செய்யும் ஆண்களுக்கு தக்க தண்டனையும் தரவேண்டும்.
எஸ்.ஈஸ்வரி, குடும்பத் தலைவி, மேடவாக்கம்: மது அருந்திவிட்டு திரும்பும் ஆண்களால்தான் பெண்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறார்கள். மதுக்கடைகளை மூடினால் அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. மற்றபடி, பெண்கள் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆளாக அவர்களும் ஒருவகையில் காரணம்தான். ஆடை கட்டுப்பாடு இல்லாமல், நவநாகரீக ஆடைகளை உடுத்துவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பாகிவிடுகிறது. நம்முடைய பாரம்பரிய உடையான சேலை மற்றும் சுடிதார், சல்வார் ஆகிய ஆடைகளை அணிந்தால், எந்த ஆணும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கமாட்டார்கள்.
அதையெல்லாம் மீறி, பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை தர வேண்டும். அதற்காக தூக்குத்தண்டனை எல்லாம் தரவேண்டாம். அதேநேரம், கொடுக்கப்படும் தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும். அந்த தண்டனையைப் பார்த்து வேறு எவரும் பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது. அதேநேரம், வருடக்கணக்கில் வழக்கை இழுத்தடிக்காமல், உடனடியாக இந்த தண்டனையை வழங்க வேண்டும். இப்படிச் செய்தால், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறைந்துவிடும்.
ஆர்.திவ்யா, கல்லூரி மாணவி, சேலையூர்: மாடர்ன் ஆடை அணிவதுதான் பாலியல் குற்றம் நடைபெற காரணம் என்று சொல்வது முற்றிலும் தவறு. தவறான கண்ணோட்டம் உள்ள ஒருவன், ஒரு பெண் சேலை அணிந்து வந்தாலும் தப்பான பார்வையில்தான் பார்ப்பான். அதனால், அணியும் ஆடைதான் பாலியல் குற்றம் நடைபெற காரணம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் எங்களின் சவுகரியத்துக்காகத்தான் மாடர்ன் ஆடைகளை அணிகிறோம். அது எங்களுக்கு வசதியாக இருக்கிறது. பாரம்பரிய ஆடை என்று சொல்லப்படும் சேலையை அணிந்துகொண்டு வெளியே சென்றால், நிமிடத்துக்கு ஒருமுறை முந்தானையை சரிசெய்துகொண்டே இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை சுடிதார், சல்வார் ஆடைகள் சவுகரியமானவை. யாருடைய கண்களையும் தவறான பார்வைக்கு திருப்பாது.
இந்நிலையில், மும்பையில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர் ஒருவரும் ஒரு கும்பலால் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆஸ்ரமங் களை ஏற்படுத்தி நிர்வகித்து வரும் பிரபல சாமியாரான 72 வயது ஆசாராம் பாபு என்பவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. அவர், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது குற்றச்சாட்டு.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் இந்த பாலியல் பலாத்கார கொடுமைகள் மறுபடியும் தொடரக்கூடாது என்பதுதான் எல்லோரின் விருப்பம். ஆனால், பண பலத்தாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த கொடுமைகளில் இருந்து பெண்கள் காக்கப்பட வேண்டும் என்றால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்? பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு யார் காரணம்? என்று நமது பகுதி மக்களிடம் கேட்டோம்.
இந்துமதி, ஃபேஷன் டிஸைனர், மேடவாக்கம்: இப்போதெல்லாம் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்ட பெண்களும் ஒருவகையில் காரணமாகி விடுகின்றனர். குறிப்பாக, கல்லூரியில் படிக்கும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் இதனால் பாதிப்புக்குள்ளாக மொபைல் போனும் இன்னொரு வகையில் முக்கிய காரணம். சில பெண்கள், தங்களது மொபைலுக்கு ராங்க் கால் வந்தாலும்கூட, சட்டென்று இணைப்பைத் துண்டித்துவிடாமல் 'நீங்க யாரு, உங்களுக்கு யாரு வேணும், நீங்க கேட்கற பொண்ணு நான் இல்லை...' என்று அவர்கள் கேட்காமலேயே பேசிவிடுகிறார்கள். இதை, எதிர்முனையில் பேசும் ஆண் சாதகமாக பயன்படுத்தி, பேச்சை வளர்ப்பதால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அந்தப் பெண் பாலியல் ரீதியான பிரச்னைகளைகூட சந்திக்க வேண்டியதாகிவிடுகிறது.
இதேபோன்று, நடுரோட்டில் நடந்து செல்லும்போது யாரேனும் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்தால், ஒன்று... அவர்களை கோபமாக கண்டிக்க வேண்டும். அல்லது, திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட வேண்டும். இதைச் செய்யாமல், லேசாக திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டால், அந்த கும்பல் அடிக்கடி பின்தொடர ஆரம்பித்துவிடும். பிறகு, பிரச்னை மேல் பிரச்னைதான். முன்னெச்சரிக்கையாக செயல்படுவதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து பெண்கள் தப்பித்துக்கொள்ளலாம். அதேநேரம், தவறு செய்யும் ஆண்களுக்கு தக்க தண்டனையும் தரவேண்டும்.
எஸ்.ஈஸ்வரி, குடும்பத் தலைவி, மேடவாக்கம்: மது அருந்திவிட்டு திரும்பும் ஆண்களால்தான் பெண்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறார்கள். மதுக்கடைகளை மூடினால் அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. மற்றபடி, பெண்கள் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆளாக அவர்களும் ஒருவகையில் காரணம்தான். ஆடை கட்டுப்பாடு இல்லாமல், நவநாகரீக ஆடைகளை உடுத்துவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பாகிவிடுகிறது. நம்முடைய பாரம்பரிய உடையான சேலை மற்றும் சுடிதார், சல்வார் ஆகிய ஆடைகளை அணிந்தால், எந்த ஆணும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கமாட்டார்கள்.
அதையெல்லாம் மீறி, பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை தர வேண்டும். அதற்காக தூக்குத்தண்டனை எல்லாம் தரவேண்டாம். அதேநேரம், கொடுக்கப்படும் தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும். அந்த தண்டனையைப் பார்த்து வேறு எவரும் பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது. அதேநேரம், வருடக்கணக்கில் வழக்கை இழுத்தடிக்காமல், உடனடியாக இந்த தண்டனையை வழங்க வேண்டும். இப்படிச் செய்தால், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறைந்துவிடும்.
ஆர்.திவ்யா, கல்லூரி மாணவி, சேலையூர்: மாடர்ன் ஆடை அணிவதுதான் பாலியல் குற்றம் நடைபெற காரணம் என்று சொல்வது முற்றிலும் தவறு. தவறான கண்ணோட்டம் உள்ள ஒருவன், ஒரு பெண் சேலை அணிந்து வந்தாலும் தப்பான பார்வையில்தான் பார்ப்பான். அதனால், அணியும் ஆடைதான் பாலியல் குற்றம் நடைபெற காரணம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் எங்களின் சவுகரியத்துக்காகத்தான் மாடர்ன் ஆடைகளை அணிகிறோம். அது எங்களுக்கு வசதியாக இருக்கிறது. பாரம்பரிய ஆடை என்று சொல்லப்படும் சேலையை அணிந்துகொண்டு வெளியே சென்றால், நிமிடத்துக்கு ஒருமுறை முந்தானையை சரிசெய்துகொண்டே இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை சுடிதார், சல்வார் ஆடைகள் சவுகரியமானவை. யாருடைய கண்களையும் தவறான பார்வைக்கு திருப்பாது.


0 comments:
Post a Comment