Saturday, 21 September 2013

அம்மா மினரல் வாட்டர் திட்டத்துக்கு அமோக வரவேற்பு



ம்மா மலிவு விலை உணவகம் மக்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்றுள்ள நிலையில், 10 ரூபாய்க்கு 1 லிட்டர் மினரல் வாட்டர் தரும் Ôஅம்மா மினரல் வாட் டர்Õ திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். பொது மக்களுக்கு குறைந்த விலை யில் பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீர் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டு உள்ள இந்தத் திட்டம், இந்தி யாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிக விலை

பஸ்களில் வெகுதொலைவு பயணிக்கும்போது, கையோடு குடிநீர் அடங்கிய பாட்டிலை எடுத்துச் செல்வது அவசிய மாகிறது. சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலான மக்கள் மினரல் வாட்டரையே பயன்படுத்துவதால், பஸ் பயணத்தின்போது கடை களில் விற்கப்படும் மினரல் வாட்டர் பாட்டில்களை வாங் கிச் செல்கின்றனர். ஒரு லிட் டர் மினரல் வாட்டர் கொண்ட பாட்டில் 20 ரூபாய் க்கு விற்கப்பட்டாலும், வேறு வழியில்லாததால் அதை வாங்கிவந்தனர் பயணிகள்.

இந்நிலையில், நீண்ட தொலைவு பயணிக்கும் மக்களின் வசதிக்காக, தமிழக அரசு போக்குவரத்துக்கழகங் களின் சார்பில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையங்கள் திறக்கப் பட்டு, மலிவான விலையில் மினரல் வாட்டர் விற்பனை செய்யப்படும் என்று முதல்& அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். முதல்  கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்துக்கழக நிறுவன வளாகத்தில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக த்தின் சார்பில் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப் பட்டது.
அமோக வரவேற்பு

இங்கு, 1 லிட்டர் கொள் ளளவு கொண்ட மினரல் வாட்டர் பாட்டில்கள் தயா ரிக்கப்பட்டன. இதன் சேவையை கடந்த 15-ம் தேதி முதல்&அமைச்சர் ஜெய லலிதா தொடங்கிவைத்தார்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கோயம் பேடு புறநகர் பஸ் நிலை யத்துக்கு கொண்டுவரப்படும் மலிவு விலை மினரல் வாட்டர் பாட்டில்கள், இங்கிருந்து அனைத்து பஸ் நிலையங்களு க்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 1 லிட்டர் மினரல் வாட்டர் 10 ரூபாய்தான் என்பதால், மக் கள் தேடி வந்து வாங்கிச் செல் கின்றனர். இதனால், பல கடைகளில் வாட்டர் பாட்டி ல்கள் வந்துசேர்ந்த சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்து விடுகின்றன.

மகிழ்ச்சியாக இருக்கிறது

இதுபற்றி தாம்பரம் வந்த பயணிகளிடம் கேட்டோம்.

ஆர்.ராமநாதன், காரைக்குடி: தமிழக அரசு கொண்டு வந்துள்ள மிகச்சிறந்த திட்டங் களுள் மலிவு விலை மினரல் வாட்டர் திட்டமும் ஒன்று. தனியார் நிறுவனங்களின் மினரல் வாட்டர் பாட்டில் களை, அதன் எம்.ஆர்.பி. விலையில் இருந்து கூடுதல் பணம் கொடுத்துதான் இது வரை வாங்கிவந்தோம். இப் போது, 10 ரூபாயில் 1 லிட்டர் மினரல் வாட்டர் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஏ.சந்திரா, திருநெல்வேலி: சென்னையில் இருக்கிற என் மகளை பார்ப்பதற்காக அவ்வப்போது வந்து செல் வேன். ஊருக்கு புறப்பட்டுச் செல்லும்போது என் மகளே ஒரு பாட்டிலில் மினரல் வாட் டரை ஊற்றித் தந்துவிடுவாள். இப்போது, அம்மா அறிவித் துள்ள மலிவு விலை மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கித் தந்தாள். குடிநீரின் சுவை நன்றாகவே இருக்கிறது. வெளியூர்களில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்தத் திட்டத் தால் நல்ல பலன் கிடைக்கும்.

மக்களின் நலன் கருதி தமிழக அரசு கொண்டுவரும் பல்வேறு நல்லத் திட்டங்களுள் ஒன்றுதான், இந்த அம்மா மினரல் வாட்டர் திட்டம். இந்தத் திட்டத்தால் எழை, நடுத்தர மக்கள் பெரிய அள வில் பலனடைவார்கள்.

அதிகக் கட்டணம் தந்து தனியார் சொகுசுப் பேருந்து களில் பயணிப்போருக்கு மினரல் வாட்டர் தரப்படுவது உண்டு. இப்போது, அம்மா மினரல் வாட்டர் திட்டத்தின் மூலம், அரசு பஸ்களில் பய ணிக்கும் பயணிகளுக்கு மலி வான விலையில் மினரல் வாட்டர் தரப்படுவது, பொதுமக்கள் மீதான தமிழக அரசின் கனிவான அக்கறை யையே காட்டுகிறது. அத னால், இந்தத் திட்டத்துக்கு மக்களின் ஆதரவு அமோ கமாக கிடைத்துள்ளது.

மழைநீர் சேகரிப்பு

அதேநேரம், அம்மா மினரல் வாட்டர் பாட்டிலில் இடம் பெற்றுள்ள பச்சை நிற லேபி ளில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்களும் இடம்பெற்றுள் ளன. இந்த விழிப்புணர்வு விளம்பரம் நல்ல பலன் தரும் என்று அரசு சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment