தன்னுடைய மகள் ஜான்விக்கு சினிமா ஆசை இல்லை. அதனால், அவள் யார் படத்திலும் நடிக்க மாட்டாள் என்று ஆவே சமாக கருத்து தெரிவித்து உள்ளார் நடிகை ஸ்ரீதேவி.
2 மகள்கள்
50 வயதை தாண்டிவிட்டா லும், இன்னும் அழகாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இவருக்கு இரு மகள்கள் உண்டு என்பது எல்லோரும் அறிந்த விஷயம். வெளியுலகின் பார்வை படாமல் மகள்களை வளர்த்து வந்த ஸ்ரீதேவி, தான் ரீ என்ட்ரி கொடுத்த ‘இங்கிலீஷ் விங்கி லீஷ்’ பட விழாவுக்கு இரு மகள்களையும் அழைத்து வந்திருந்தார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விக்கு 16 வயதாகிறது. ஸ்ரீதேவியை போலவே அழகு கொண்ட ஜான்வியை எப்படி யாவது கதாநாயகி ஆக்கிவிட வேண்டும் என்று துடிக் கின்றனர் தெலுங்கு பட உலகினர். தெலுங்கு நடிகர் களான ராம்சரண், நாக சைதன்யா, அல்லு அர்ஜூன் என பல நடிகர்களின் படங் களில் ஜான்வியை கதாநாயகி யாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்ரீதேவிக்கு இது பிடிக்க வில்லை. ‘ஜான்விக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. அதோடு, அவளை நடிகை ஆக்கும் எண் ணமே என்னிடம் இல்லை. அதனால், என் மகளை தேடி வருவதற்குப் பதிலாக வேறு நடிகையை தேடிச் செல்லுங் கள்’ என்று கறாராக கூறி விட்டாராம் ஸ்ரீதேவி.
அதேநேரம், ஜான்வியின் படிப்பு முடிந்ததும் அவருக்கு நல்ல மாப்பிள்ளையாக பார் த்து திருமணம் செய்து வைத்து விட ஸ்ரீதேவியும், அவரது கண வர் போனிகபூரும் கணக்குப் போடுவதாக சொல்கிறது பாலிவுட் வட்டாரம்.

0 comments:
Post a Comment