'சென்னை மெயில்' இதழ் வெளியீட்டு விழாவில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
வெளியீட்டு விழா
சென்னை மெயில்- இது நம்ம வீட்டு பேப்பர், உள்ளூர் செய்தித்தாள் வெளியீட்டு விழா, கேம்ப் ரோடு ஸ்ரீபவன் ஓட்டலில் நடந்தது. 'சென்னை மெயில்' வெளியீட்டாளரும் ஆசிரியருமான எம்.ஜெயமுரு கானந்தம் தலைமை தாங்கி னார். 'சென்னை மெயில்' பொதுமேலாளர் எஸ்.கலை மணி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவை 'சென்னை மெயில்' இணை ஆசிரியர் ஜே.தேவிகா ஆனந்த், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கேம்ப் ரோடு பாக்கியம் பிரஸ் உரிமையாளர் டி.ஆபிரகாம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சென்னை மெயில் முதல் பிரதியை வெளி யிட்டார். அதை, தொழிலதிபர் டி.எம்.கர்ணன் பெற்றுக்கொண்டார்.
இணைய சேவை
தொடர்ந்து, சென்னை மெயிலின் இணையதள சேவைகளை ஆக்னஸ் ஆபிர காம், தாம்பரம் நகராட்சி உறுப்பினர் உஷா ஏழுமலை, ரூபி பில்டர்ஸ் சீனியர் மார்கெட்டிங் மேனேஜர் அஸ்வினி குணசேகர் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
விழாவில் மூத்த எழுத்தாளர் எஸ்.ஆர்.ஜி.சுப்ரமணியம் பேசும்போது, 'புதுமை அம்சங்கள் பலவற்றுடன் சென்னை மெயில் மலர்ந் திருப்பதை முதல் இதழிலேயே பார்க்கமுடிகிறது. நாட்டு நடப்புச் செய்திகளில் மிகமிக அவசியமானவற்றையும் சுருக்கமாகத் தந்து, மற்ற சுற்று வட்டாரச் செய்திகளையும் சுவைபட தரவும் 'சென்னை மெயில்' தயார்நிலையில் உள் ளதை அறிந்து மகிழ்கிறேன். சமூகப்பணி உணர்வே இத்தகைய பத்திரிகைகளின் பலமான அடித்தளம். சென்னை மெயிலுக்கு இந்த அடித்தளம் நன்கு அமைந்துள்ளது. குருவுக்குரிய மூன்றாம் எண்ணில் எடுப்பாகத் தன் பயணத்தைத் தொடங்கியுள்ள சென்னை மெயில், வெகுவேகமாக பரந்த அளவில் பயணிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்றார்.
விழாவில் சிட்லபாக்கம் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.மனோகரன், தாம்பரம் நகராட்சி 19-வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் ஏழுமலை, மூத்த எழுத்தாளர், எஸ்.வெங்கடேசன், கவிஞர் இளந்துறவி, சின்னத்திரை நடிகர் ஜே.ரவீந்திரன், தொழிலதிபர்கள் குமார் சூப்பர் மார்கெட் எஸ்.குமார், ராஜசேகரன் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.





0 comments:
Post a Comment