நெல்லை விவேகநந்தா
1893 செப்டம்பர் 11-ம் தேதி.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டால், அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சமய பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து குவிந்தனர். அங்குள்ள கலைக்கழகத்தின் கொலம்பஸ் ஹாலில் (இந்த ஹாலில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், 4-ஆம் நாள் முதல், மாநாட்டின் பிற நிகழ்ச்சிகள் அங்குள்ள வாஷிங்டன் ஹாலுக்கு மாற்றம் செய்யப்பட்டன.) மாநாடு துவங்கியது.
அதில் பங்கேற்க வந்த பிரதிநிதிகள் அனைவரும் தங்களுக் கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைக்குச் சென்று அமர்ந்தனர். சுவாமி 31-ம் இருக்கையில் அமர்ந்தார். எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து முடித்ததும் அந்த ஹால் முழுவதும் ஒரே நிசப்தமாக இருந்தது. அனைவரும் கட்டுக்கோப்பாக அமைதியாக இருந்தனர். அந்த அமைதிக்கு மத்தியில் பியானோ இசைக்கருவி இசைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 'கடவுளை துதியுங்கள்...' என்ற கிறிஸ்தவ துதிப்பாடல் பாடப்பட்டது.
அதன்பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. முதல் நாள் வரவேற்புரைகளும், அதற்கு பிரதிநிதிகள் அளித்த பதில் களும் இடம்பெற்றன. கிரேக்க சர்ச்சின் ஆர்ச் பிஷப்பாக இருந்த ஜாந்தே முதன் முதலில் பேசினார். அதைத்தொடர்ந்து பிற நாட்டு பிரதிநிதிகள் பேச ஆரம்பித்தனர்.
பிரதிநிதிகள் ஆரவாரம்
ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளின் பேச்சையும் பார்வை யாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த மக்கள் ஆர்வத்தோடு கேட்டனர். பிரதிநிதிகள் கம்பீரமாக உணர்ச்சிபொங்கப் பேசும் போது அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். தாங்கள் வைத்திருந்த தொப்பி, கைக்குட்டை போன்றவற்றைக் கையில் எடுத்து அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப் படுத்தினர்.
4 பிரதிநிதிகள் பேசியதும் காலை நிகழ்ச்சிகள் நிறைவ டைந்தன. உணவு இடைவேளை முடிந்ததும் பிற்பகல் நிகழ்ச் சிகள் ஆரம்பமாகின. ஒருவர்பின் ஒருவராகப் பேச ஆரம்பித் தனர். சுவாமிஜி பேசுவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந் தது. அவருக்கான நேரம் வந்தபோது, நிகழ்ச்சியை நடத்துபவர் அவரை பேச வருமாறு அழைத்தார். சுவாமிஜி என்ன நினைத் தாரோ, 'அடுத்த முறை பேசுகிறேன்' என்றார். அடுத்தமுறையும் வந்தது. அப்போதும் 'பிறகு பேசுகிறேன்' என்றார்.
சுவாமிஜியின் இந்த பதிலால், அவர் பேசுவாரோ பேச மாட்டாரோ என்ற சந்தேகம்கூட அங்கிருந்தவர்களுக்கு வந்தது. நேரமும் நண்பகலை கடந்து, மாலைநேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது, பேச வருமாறு மீண்டும் சுவாமிஜி க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புலி பதுங்குவது பாயத்தான் என்பதுபோல், அதுவரை அமைதிக்காத்த நம் சுவாமிஜி, மிடுக் கோடு எழுந்தார். அந்த மகாசபையில் கூடியிருந்தோரைத் தனது பார்வையால் ஒருமுறை பார்த்துவிட்டு தனது எழுச்சி மிக்க உரையை ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.
'என் அமெரிக்க சகோதர சகோதரிகளே...'
- இப்படி சுவாமி சொன்னதும்தான் தாமதம், மகா சபையில் இருந்த அத்தனை பேரது பார்வையும் அவர் மீது வேகமாக வந்து பதிந்தன. அதற்கு முன்பு பேசியவர்களின் பேச்சை ஏனோதானோவென்று கேட்டவர்கள்கூட சட்டென்று அமைதியாகி, நம் வீரத்துறவியைப் பார்த்தனர். அடுத்த நொடியே பலத்த கரகோஷங்கள் எழுந்தன. பலர் எழுந்துநின்று கைதட்டினர். அந்த பலத்த ஓசையில் அந்த அரங்கமே அதிர்ந்தது.
சிகாகோ உலக சமய மாநாட்டில் கம்பீரமாகப் பேச ஆரம்பித் தார் சுவாமி விவேகானந்தர்.
'இன்பமும், இதயமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழி கூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தை கள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும், பிரிவு களையும் சேர்ந்த கோடிக்கணக்கான இந்துக் களின் பெயரால் நன்றி கூறுகிறேன்...' என்று, தனது வீர உரையின் முழக்கத்துக்கு முன்னதாக நன்றிகள் பல சொன்னவர், அடுத்ததாக...
'பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி - இவை, இந்த அழகிய உலகத்தை நெடு நாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை, இந்த பூமியை நிரப்பி யுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ் கடித்து, நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலை குலையவும் செய்துவிட்டன. அந்தக் கொடிய-அரக்கத் தனமான செயல்கள் இல்லாமல் இருந்திருந்தால், மனித சமுதாயம் இன்று இருப்பதைவிட பல மடங்கு உயர்நிலையை அடைந்திருக்கும்' என்று கர்ஜித்தார்.
ஒரே நாளில் பிரபலம்!
உரையாற்றி முடித்ததும் மேடையில் இருந்து கீழே இறங்கினார் சுவாமிஜி. பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஆண் களும், பெண்களும் முண்டியடித்துக்கொண்டு சுவாமிஜியை நெருங்க முயற்சித்தனர். சிலர், அவர் அணிந்திருந்த ஆடையைத் தொட்டுப்பார்க்கக்கூட ஆசைப்பட்டனர்.
மறுநாள் சிகாகோ நகர் வீதிகளில் விவேகானந்தரின் படம் இப்போதைய பேனர்கள் போன்று வைக்கப்பட்டன. அந்தப் படத்தின் அடியில் 'இந்து துறவி விவேகானந்தர்' என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த படத்தில் சுவாமிஜியின் காவிநிற ஆடையிலான வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்த பலர், ஒருசில நொடிகள் அங்கே நின்று, அந்தப் படத்தை நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு நகர்ந்தனர். சிலர் அந்த படத்தில் இருந்த சுவாமிஜியை கைகூப்பி வணங்கவும் செய்தனர்.
இப்படியாக ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் சுவாமி விவேகானந்தர். அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் அவர் புகழ் பரவியது. சிகாகோ உலக சமய மாநாட்டில் அவர் ஆற்றிய உரைகளில் 6 உரைகள் நமக்கு கிடைத்துள்ளன. அவற்றில், முதல் மற்றும் மூன்றாம்நாள் உரைகள் மட்டுமே முழுமையாக கிடைத்துள்ளன.
இதுதான் இந்துமதம்!
செப்டம்பர் 15-ம் தேதி இரண்டாவது உரை நிகழ்த்தினார். அன்று, நாம் எல்லோரும் தெரிந்த 'கிணற்றுத் தவளை' கதையைக் கூறி விளக்கம் அளித்தார். செப்டம்பர் 19-ம் தேதி 'இந்து மதம்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது, துன்பத்தை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்? என்பதற்கு அழகான உதாரணம் ஒன்றை குறிப்பிட்டார். அதை சுவாமிஜி வாயாலேயே நாம் கேட்போம்...
'ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், இந்தியாவின் அன்றைய சக்கரவர்த்தியாக இருந்த யுதிஷ்டிரர். அவர் பகை வர்களால் நாட்டில் இருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், 'அறத்தில் சிறந்து விளங்கும் உங்களுக்கு ஏன் துன்பம் வரவேண்டும்?' என்று கேட்டாள்.
அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி! இதோ... இந்த இமயமலையைப் பார்; எவ்வளவு அழகாக காட்சியளிக்கிறது? நான் இதனை நேசிக்கிறேன். ஆனால், இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும், கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால்தான் அதனை விரும்புகிறேன். அது போலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும், கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே! அவரை நேசிப்பது என் இயல்பு. அதனால், நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம்போல் என்னை எங்குவேண்டு மானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே நான் அவரிடம் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால் முடியாது' என்றார்.
சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும், வனப்போடும், வலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப்பெற்று வாழ்கிறார்கள். இன்னும் சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும், நொண்டி யாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயே கடத்துகிறார்கள்.
பிறவி இன்பம்
இவர்கள் அனைவரும் இறைவனால் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும், கருணையும் கொண்ட அந்த இறைவன், ஒருவரை இன்பத்தில் திளைப் பவராகவும், இன்னொருவரை துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறு பாடு காட்ட வேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப் படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட இறைவனின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயரடைய வேண்டும்?
ஆகவே, படைப்பாளராகிய இறைவன் ஒருவர் இருக்கிறார் என்று எடுத்துக்கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவுப் படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படி யென்றால், ஒருவன் மகிழ்வதற்கோ, துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள் அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே, அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம் பரையாக வருகிறது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?
அதுபோன்றது அது!'
- இப்படி மிக நீண்ட உரை நிகழ்த்தினார் விவேகானந்தர்.
செப்டம்பர் 20&ந் தேதி, 'மதம், இந்தியாவின் அவசரத் தேவை யன்றுÕ என்ற தலைப்பிலும், செப்டம்பர் 26&ந் தேதி Ôபுத்த மதம் இந்து மதத்தின் நிறைவு' என்ற தலைப்பிலும் பேசினார்.
நிறைவு உரை
17 நாட்கள் நடைபெற்ற உலக சமய மாநாடு செப்டம்பர் 27-ம் தேதி நிறைவுபெற்றது. அன்று சுவாமிஜி பேசுகையில், 'விதையானது தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும், காற்றும், நீரும் அதைச் சுற்றிப் போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை! அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும், மண்ணையும், நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒரு செடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே! கிறிஸ்தவர் இந்துவாகவோ, பவுத்தராகவோ மாற வேண்டியது இல்லை. அல்லது இந்து பவுத்தராகவோ, கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக்கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு, தன் வளர்ச்சி விதியின்படி வளர வேண்டும்'என்று குறிப்பிட்டார்.
சிகாகோவில் கர்ஜித்த சுவாமி விவேகானந்தரின் விருப்பங்கள், நம் சிந்தையில் உட்புகுந்து நல்ல மாற்றங்கள் பல கொண்டு வரட்டும்.
- 11.9.2013 சென்னை மெயிலின், சுவாமி விவேகானந்தர் திருவுருவச்சிலை திறப்பு விழா சிறப்பு மலரில் இருந்து...


0 comments:
Post a Comment