சுப்பு
இலங்கை தமிழர்களின் வாழ்வு மலர வேண்டும் என்றால், இந்தியாவில் தேசிய அளவிலான எழுச்சி ஏற்பட வேண்டும். இந்திய மக்களிடையே, அனைத்து மொழிகளிலும் ஈழத் தமிழர் படும் பாட்டை எடுத்துச் சொல்ல வேண்டும் அப்போதுதான் இலங்கை தமிழர் பிரச்னையில் நிரந்தர தீர்வு ஏற்படும். இதுதொடர் பான சிந்தனை மாற்றம் காலத்தின் கட்டாயமாகி உள்ளது.
காமன்வெல்த் மாநாடு
இலங்கையில் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது. அங்கே நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. தமிழக அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இந்நிலையில், இலங்கை தமிழர்களின் வாழ்வு மலர எந்தமாதிரியான நடவடிக்கை கள் தேவை என்பதை நாம் ஆராய்வது அவசியமாகிறது.
பகவான் புத்தர் வாழ்ந்த காலத்தில், கர்மவினை பற்றி அவரிடம் பலமுறை கேட்கப் பட்டது. மனிதர்களின் துன் பங்களுக்கு, அவர்களுடைய முற்பிறவிச் செயல்தானே காரணம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. பலமுறை இதற்கு பதில் சொல்வதை தவிர்த்த புத்தர், முடிவாக ஒருநாள், 'நீங்கள், எய்தப்பட்ட அம்பு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ச்சி செய்கிறீர்கள். நான் அடிப்பட்ட பறவை க்கு நிவாரணமும் நிம்மதியும் கொடுத்துக்கொண்டிருக் கிறேன்' என்றார்.
அதிர்ச்சி தகவல்!
ஈழத் தமிழர் பிரச்னையும் கிட்டத்தட்ட இதே நிலைமை யில்தான் இருக்கிறது. இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்சேவை இனப் படுகொலை க்காகவும், மனித உரிமை மீறலுக்காகவும் தண்டிக்க வேண்டும் என்று தமிழகத்தின் சில அரசியல் கட்சி தலைவர் கள் முனைப்பாக இருக்கிறார் கள். இவர்களிடம், அம்பைப் பற்றிய ஆராய்ச்சி மட்டும்தான் இருக்கிறது. இவர்களுடைய நடவடிக்கைகளால் இலங்கைத் தீவில் வாழும், எஞ்சியுள்ள தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.
இலங்கையில் நடந்த போரைத் தடுப்பதற்காக பாடுபட்டவர் நார்வேயைச் சேர்ந்த முன்னாள் அமைதி தூதர் எரிக் கோல்ஷீம். இவர், 'ஆஃப்டன் போஸ்டன்' என்ற இதழுக்கு அளித்த பேட்டியில், 'விடுதலைப் புலிகளின் தோல் விக்குப் பிறகும் தமிழர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு நியாயமான முறையில் உரிமைகள் வழங்கப் பட வேண்டும். இலங்கை அரசு அதற்கான நடவடிக்கை களை எடுக்காவிட்டால் அங்கே இன மோதல் மீண்டும் வெடிக்கும்' என்று கூறி இருக்கிறார்.
கட்சிக்காரர்கள் முன்னிலையில், பொதுக்கூட்ட மேடைகளில், 'என் வாழ்நாளிலேயே தமிழீழத்தைக் காணவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை' என்று கூறினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆனால், அவரைச் சார்ந்தவர்கள் நடத்திய டெசோ மாநாட்டில் தமிழீழம் குறித்த குரல் எழுப்பப்படவில்லை. மத்திய அரசின் நிர்பந்தமே இந்த மவுனத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட, 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணத்துக்கான ஆணைக்குழு' முன்பு மக்கள் அளித்த சாட்சியங்கள், இலங்கை ராணுவத்துக்கு எதிராக இருக்கின்றன. விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்டியும் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன என்பதுகூட தமிழ் நாட்டில் முழுமையாக உணரப்படவில்லை. இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்த செய்தி எட்டவே இல்லை. இது ஏன் என்ற கேள்வி நம்மை வதைக்கிறது.
இந்திய அளவில் ஆதரவு தேவை
கடந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி, ஐ.நா. மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. சீனா, கியூபா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 8 நாடுகள் வாக்களிக்கவே இல்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வாசகத்தில், ‘in consultation with and with the concurrence of the government of sri lanka’ என்று மாற்றம் செய்யப்பட்ட பிறகே அதை நிறைவேற்ற முடிந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும், அவரைத் தண்டிக்க வேண்டும் என்ற முழக்கங் களோடு இதைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
தமிழக அரசியல் சக்திகளால் உலக அரங்கில் ஈழத் தமிழர் களுக்கு ஆதரவான கருத்தை உருவாக்க முடியாது. அம்மை யப்பனைச் சுற்றாமல் அகில உலகத்தையும் சுற்றிவருவது வெற்றியைத் தராது. இந்தக் களத்தில் மக்கள்தான் அம்மை யப்பன் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று நம் முன் உள்ள தீர்வு ஒன்றுதான். இலங்கை பிரச்னை தொடர்பான தமிழர் கவலையை இந்தியக் கவலையாக மாற்ற வேண்டும். இந்திய மக்களிடையே அனைத்து மொழிகளிலும் ஈழத் தமிழர் படும் பாட்டை எடுத்துச்சொல்ல வேண்டும். ஓங்கோலிலும், ஒடிஸாவிலும், பரோடாவிலும், பஞ்சாபிலும், அஸ்ஸாமிலும், பீகாரிலும் பொதுக்கூட்டங்களும் கருத்தரங் கங்களும் நடத்தப்பட வேண்டும்.
உண்மையை உணர்வது அவசியம்!
நம்முடைய சொந்தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வு இந்தியா எங்கும் ஏற்பட்டால், இந்திய அரசு தானாக நடவடிக்கை எடுக்கும். புவிசார் அரசியல் நெறிப்படி இலங்கை அரசுக்கு ஆதரவாக எந்த நாடும் செயல்பட முடியாது. இந்தியாவின் வல்லமையே ஈழத் தமிழர்களுக்கு பக்கபலமாக இருக்கும். இலங்கை அரசுக்கு எதிராக இருக்கும். இதை, ஈழத் தமிழர்களும் உணர வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலையில், லண்டன் நகரிலும், ஐரோப்பாவிலும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஆற்றும் வீர உரையால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. இது, ஈழத் தமிழர்களால் எவ்வளவு விரைவில் உணரப்படுகிறதோ, அவ்வளவு விரைவில் அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
மக்கள் விருப்பமே, கட்சிகள் பக்கம்!
காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமல்ல, ஈழத் தமிழர்கள் தொடர்பான எந்தக் கோரிக்கையும் வெற்றிபெற இந்திய மக்களின் ஆதரவு முக்கியமாகத் தேவை. அதிகாரத்தில் இருப்பவர்களைப் பற்றியோ, அரசியல் கட்சிகளின் தலைப்பாடு பற்றியோ அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
மக்கள் விருப்பம் எந்தப் பக்கம் இருக்கிறது என்பது தெளிவானவுடன், அந்தப் பக்கம் மாறுவது கட்சிகளுக்கு சகஜம். இதுதான், இன்றைய யதார்த்தம். மக்களாகிய நாம்தான் சிந்திக்க வேண்டும்.



0 comments:
Post a Comment